செவ்வாய், 9 ஜூன், 2015

கோழை சிவாஜி -வீர சிவாஜி


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்:

*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி.
பிறகு "எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,
அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்" என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி.
*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி.
புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,
அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்.
*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார்.
"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன்,
எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீர???சிவாஜி.

*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி.
*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார்.
அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார்.
*நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்" என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி.
*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,
தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்.
*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,
அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்.
என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்" எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!

*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது.
1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது.
சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர்.
அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல்,
கவசமும் அணியாமல்,
இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்.
வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி,
இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள்,
ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி.
*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்.
அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,
திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார்.
இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,
மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்.
வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர்.
அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி.
ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி.
*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப்.
புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்.
பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.
பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்.
அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது.
200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர்.
கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி.
அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார்.
பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார்.
உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர்.
ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது,
ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார்,
உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)

*இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த "வீர" சிவாஜி.
*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப் .
ஆண்டு 1665 ஜனவரி.
பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்.
திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு கடிதம் எழுதினார்.
இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து "சரணடையத்தான் வந்துள்ளேன்.
மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்" எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.
*பிறகு "இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன்.
2000 யானைகளை தருகிறேன்.
அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்.
தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்.
பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்.
உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி.!!!!

கோழை சிவாஜி கோழைத்தனம் தொடரும்....

ஆதார நூல்கள்:
The mughals by Chop singh verma,prakash books 2004,
the fall of the mughal empire of hindustan by Hg Keene.
oxford 1887,
the maraathas 16001818,series: the new cambridge History of india,
by stewart gordon. university of michigan ann arbor.

ஞாயிறு, 7 ஜூன், 2015

அறிந்து கொள்ளுங்கள் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது பற்றி:





சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், புதுக்கோட்டை கலைமான் அறக்கட்டளை, திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture முதலிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர். கவிஞர்,எழுத்தாளர்,நூலாசிரி
யர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர்,சொற்பொழிவளர் எனத் தனித்தன்மையோடு இயங்கிவருபவர்.
இவருடைய முதல் நூலான ”வீரம் செறிந்த இஸ்லாம்”, இஸ்லாம் மார்க்கத்தின் பார்வையில் ஒரு தத்துவத்தை வரலாற்றின் அடிப்படையில் இலக்கியத் தரத்தோடு தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு நூலாக வழங்கியமைக்காக சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் விருது பெற்றதாகும்(1987).

உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள- வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைலின் புகழ்பெற்ற “On Heroes and Hero-Worship and the Heroic in History” என்ற நூல் 1840-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவாகும்.இந்த நூலின் “The Hero as Prophet-Mahomet : Islam" என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தை “தூது வந்த வீரர்” என்ற தலைப்பில் மூல மொழியான ஆங்கிலப் பதிப்புகளில் கூட இடம் பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக முதன்முதலாக 1994-இல் வெளியிட்ட பதிப்பாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இளவரசர் சார்லஸ் 1993-இல் “Islam and the west” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவையும் “இஸ்லாமும் மேற்கு நாடுகளும்” என்ற தலைப்பில் நூலாக வெளிக் கொணர்ந்தார். இவ்விரண்டு நூல்களுடன் இவருடைய கவிதைகள்-பாடல்களின் தொகுப்பான “நிழலில்லாத சூரியன்” என்ற நூலையும் 1994-இல் வெளியிட்டார்.

இந்தியத் திருநாட்டின் பொன்விழா ஆண்டு நினைவாக ஆகஸ்ட்,1998-இல் ”இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்” என்ற ஆய்வு நூலை ஏம்பல் தஜம்முல் முகம்மது எழுதினார்.இந்த நூலை `திருவருட்பேரவை’எனும் சமய நல்லிணக்க அமைப்பின் தலைமையில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டதன் மூலம் இந்த நூல் பெரிதும் சிறப்பிக்கப்பட்டது.(இந்த நூற்பணிக்காக `சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்’ என்ற விருதினை இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன்னுடைய திருச்சி மாநாட்டில் வழங்கிச் சிறப்பித்தது.) இந்த நூல் சர்வ சமயச் சான்றோர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Religious Harmony – an Islamic Doctrine” என்ற தலைப்பில் ஒரு தனிச்சிறந்த பதிப்பாக வெளியானது. பின்னர் இந்த நூலுக்கு திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture என்ற நிறுவனம் விருது கொடுத்துச் சிறப்பித்தது.[` Religious Harmony-An Islamic Doctrine’ is included in UNESCO’s index translationum.(S.No. 41/48) and used in American editions as a reference book.]. ”திருக் குர்-ஆனில் பிற சமய மதிப்பீடுகள்-Quranic View of Other Religions”-என்ற ஆய்வேடு அகில இந்திய அளவிலான ஒரு மாநாட்டில்(The All India Seminar on Interpreting the Scriptures, Hermeneutics of Sacred writings organized by The School of Religions, Philosophy & Humanist Thought, Madurai Kamaraj University, under the auspices of DRS – SAP – UCG.) சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.ஏம்பல் தஜம்முல் முகம்மது சமய நல்லிணக்கம் என்ற கொள்கையை விளக்கும் விதத்தில் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவை தவிர நான்கு பாட நூல்கள், வரலாற்று நூல்கள் உட்பட மொத்தம் பதினாறு நூல்களும் `நடுநிலையான மொழிக் கொள்கை’,`தமிழுள்ள தமிழ்’ முதலான பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


தகவல் : Mohamed Ali

செவ்வாய், 2 ஜூன், 2015

கலைஞர் பற்றி கவிஞர் வாலி கவிதை



நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்; தமிழ்க்
கடவுளென கண்முன் எழும்
மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!
நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!
மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!
சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?
என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?
உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!
கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!
ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!
பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!
அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர் யோக்கியம்?
சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!
நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது…
தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!
ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!
சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்…
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?
வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!
நீ
‘ஏ.எம்’ முதல்
‘பி.எம்’ வரை
சலிக்காது உழைக்கும்
‘சி.எம்’.
நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!
முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!
நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா
தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!
சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
‘வந்தபின் பார்ப்போம்’ என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
‘வருமுன் காப்போம்’ என்று!
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்
இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
‘டூ’ விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
‘அன்பின் வழியது உயிர்நிலை!’ என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!
மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.
‘அக்கா மகன்’ என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!
அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!
இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!
நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
‘நன்று!நன்று’
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!
பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்…
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்