சனி, 23 ஜூலை, 2011

வசந்தகால கண்ணீர்த்துளிகள்

கோடான கோடி மனிதர்களில் என்னை நேசித்த யா ரசூலுல்லாஹ்...

அற்ப உலகம் இந்த பாவியை உங்களை விட்டும் பாரமுகமாக்கியதும் ஏனோ

வசந்த காலத்தில் கண்ணீர் சிந்தும் விழிகளோடு உங்களை புகழ்ந்த என் நாவு, இன்று தாங்க முடியா வேதனை தரும் உள்ளத்தோடு யா ரசூலுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் என்று கூறி அழுகிறது

வசந்த காலத்தில் உங்கள் கருணையினால் அமுத மழையில் நனைந்த நான், இன்றோ தாங்க முடியா வேதனைகளோடு கண்ணீர் மழையில் நனைகிறேன்.

கவலைகள் என்னும் தலையணையில் படுத்து இரவுப்பகலாக நான் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறேன்
நான் சிந்திய கண்ணீர் துளிகளில் எதாவது ஒரு துளி உங்கள் பாதம் நனைத்து என் தேவையை உங்களிடம் சொல்லாதா...

பாவங்கள் என்னும் மேகங்கள் என்னை சூழ்ந்து கொண்டபோது
கருமை கொண்ட என் உள்ளம், உங்களை மட்டும், உங்கள் அன்பை மட்டும் நம்பி வாழ்ந்தது.

எந்த நன்மைகளும் இன்றி அனாதையாக என் ஆத்மா கலங்கியபோது
என்னை என் நேசர் கரம் பிடித்து காப்பாற்றுவார் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டது

உயர இருந்து தாழ்வாக பாயும் அருவி போல் என் மீது சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன.
பக்தி மார்க்கத்திலே பரம கோழையான நான் தாங்க முடியாமல் தடுமாறி விழுகிறேன்

கரம் பிடித்து என்னை தூக்கி விடுங்கள் என் நாயகமே

எஜமானிடம் உணவு தேடி நிற்கும் நாய், அவர் வீட்டு வாசலில் காத்து நிற்பதை போல்
என் எஜமானரே, உங்களின் நாயாகிய நான் உங்கள் அன்புக்காக காத்து நிற்கிறேன்.

என்னை விட்டும் உங்கள் அழகு திருமுகத்தை திருப்பி விடாதீர்கள் என் நாயகமே.

உங்களை அன்றி என்னை சேர்த்து அணைப்பார் எனக்கு வேறு யாருமில்லை.

உங்களை தவிர இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே தெரியாது...
எனக்கு எல்லாமே நீங்கள்தான்.


-அப்துல் ரஹ்மான்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

என் கண்மணியே! இரசூலே!

என் கண்மணியே! இரசூலே! கவி மழையால் உங்களை புகழ் பாட வந்துள்ளேன்!

எத்தனை கோடி கவிஞர்கள் திரண்டாலும் முடியாத தங்கள் புகழ் பாட இந்த பேதை பேராசைப்பட்டேன்.

இதோ புகழை புகழக் கோல் ஏந்தினேன். என் பேனாவும் வெட்கி தலை குனிந்தது.

முடியாமல் திண்டாடினேன். ஆனாலும் என் ஆருயிரை நினைக்கும் போது அருவியாய் உள்ளத்தில் பொங்கி வரும் பாசத்தை கவி வடிவில் கொட்டினேன்.


கண்ணியத்தின் கோட்டையே!

அகிலத்தின் அருட்கொடையே!

ஞானத்தின் திறவுகோலே!

ஈமானிய உதிரத்தால் எங்கள் கல்புகளை நிரப்பிய ரசூலே!


உலகத்தின் மாமணியே ஒப்பற்ற கோமானே!

ஏழையின் சிரிப்பில் இறை சந்தோசத்தை கண்ட பெருமானே!

வறுமை எனக்கு பெருமை என்றுரைத்த கோமானே!

பொறுமையின் பொக்கிஷமாய் விளங்கிய பூமானே!


கியாமத்து என்னும் மறுமை நாளிலே ஆதரவாய் அடைக்கலமாய் உம்மத்தை எல்லாம் அரவணைத்து காப்பாற்றும் அன்பு உள்ளமே!

உம்மி நபியா நீங்கள்? தாங்கள் அல்லவா உலக பல்கலைகழகம்!

பலகற்ற மேதைகளும் பயின்று வரும் புத்தகம் அல்லவா நீங்கள்.

மாபெரும் தத்துவங்களை இந்த அகிலத்திற்கு வாரி வழங்கிய தங்களை கல்லாநபி என்று எப்படி உரைப்பது?

நாயகமே! நீங்கள் பிறந்த போது கிஸ்ரா மன்னனின் கோட்டை மட்டுமல்ல இறுகி போன மனகோட்டைகளும் சரிந்தன.


பஸ்ரா மாளிகைகள் மட்டுமல்ல பாவப்பட்ட மனங்களும் இலங்கி நின்றன.

பாரசீகத்தில் பொங்கிய நெருப்பு தங்கள் ஒளிமதி கண்டு சாந்தமானது.

சமாவத் ஓடை தங்கள் வரவால் ஒடுங்கி போனது.

தாங்கள் மண்ணில் மலர்ந்த போது பாலை மண்ணே மணத்தது.

தங்கள் பிறப்பால் முழுமனித வர்க்கமே மாண்புற செய்தீர்கள்.


ஏந்தலே! உங்கள் வரவால்தான் எங்கள் பூட்டப்பட்ட மனக்கதவுகள் திறக்கப்பட்டது.


பெண்வர்கத்தை மண் தோண்டி புதைத்த சமூகத்தின் மனங்களில் அன்பென்னும் விதையை விதைத்தவர் நீங்கள்!


எத்தனை கொடுமைகள், எத்தனை கஷ்டங்கள் அத்தனையும் தாங்கள் தாங்கியதால் தானோ பொறுமை கூட உங்களிடம் பொறுமை கற்றது.

கருணை நபியே! கவலைகள் உள்ளத்தை தாக்கும் பொழுது, தாங்கள் நினைவுகள் தானே எங்கள் மனகாயங்களை சுகப்படுத்துகின்றது.

எங்கள் ஆன்மாவின் அருமருந்தே!

கண்ணீர் பெருக, நெஞ்சம் விம்ப என் சங்கையான ஸலவாத்தையும், பண்பான ஸலாமையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் யா ரசூலல்லாஹ்!


ஆழியின் பினாமி - சுனாமி










ஆழியே!

பூமியில்

உன் பங்கு

மூன்றில் இரண்டு!

இது போதாதென்று

ஜப்பான் மீது

படை எடுத்தாய் -

பகை முடித்தாய்;

பேரலையை

துணையாய் கொண்டு!

வீடுகளும், கார்களும்,

கப்பலும் கூட

உன்னை பார்த்து

ஓடின மிரண்டு -

கரை புரண்டு!

இரை அளி...'தாய்'

என உன்னிடம்

வந்தவர்க்கு

மட்டுமா நீ

இரை அளித்தாய்?

இல்லை மற்றவர்க்கும்

சேர்த்துதான்!

உன்னை நம்பியோர் தம்

வாழ்வுக்கு

வழி

வகுத்தாய்!

ஒரு சாண்

வைற்றின் உணவுக்கு

நீயே

உப்பானாய்!

அதனாலேயே

தாய்க்கு

நீ

ஒப்பானாய்!

இரையிட்ட

நீயே

பல உயிர்களை

இரையாக்கி கொண்டதால்

மாந்தர்தம் கணக்கில்

தப்பானாய்!

தீர்ந்து விட்டதா

உன் பசி?

உன் கோர

தாண்டவத்தால்

சீரழிந்து - சின்னாபின்னமாய் -

குப்பை மேடுகளாய்

கிடப்பதை கண்டு ரசி!

இப்பழி செயல்

உனக்கு தேவைதானா

என்று யோசி!

தாய்க்கு மகனில்லை;

தம்பிக்கு அண்ணனில்லை;

சிலருக்கு யாருமே இல்லை;

உன்னை

சபிக்காதவர்

உலகில் இல்லை!

போர் முறையில்

புதுப்புது சாதனை!

உன் மீதுதான்

கண்டம் விட்டுத்தாவும்

ஏவுகணை

சோதனை!

இச்சோதனை

தந்ததா

மன வேதனை - தீய போதனை?

ஸ்கை லேபுக்கும்,

விண்கலத்திற்கும்

நீயே பலியானாய்!

மனிதர்களுக்கு

கிலியானாய்!

உன்னை

சல்லடையாய்

துளைத்ததாலா

இந்த சீற்றம்?

காரணம் எதுவானபோதும்

தேவை

உன் மன மாற்றம்!

ஓ!

இப்படித்தான்

பல நாடுகளை

உன் வசமாக்கி

கொண்டாயோ?

செய்தது

நீயானபோதும்; உன்

'பினாமி'

'சுனாமி' மட்டும்

நிரந்தரமாய்

தேடிக்கொண்டது

பழி!

நாட்டை அபகரிக்க

இனி வேண்டாம்

இந்த வழி!

அமைதியாய்

சென்று விடு

வந்த வழி!

இனி நிம்மதியாய்

மக்கள் வாழ

வாழ்த்தி விடு வழி!

அன்புடன்,

M. முஹம்மது ஜாபர் சாதிக் (மாமா)

வழுத்தூர்.

jaffarmama@gmail.com

வெற்றிப்படி

அப்படி,

இப்படி;

அந்தப்படி,

இந்தப்படி;

என்றபடி

சுற்றியுன்னை

வளைத்தப்படி

புதியதாய் ஆதாரம்

முளைத்தப்படி

மறை கற்று

தெளிந்தபடி

உன் மூளை

மழுங்கும்படி

அத படி - இத படி

என்றோதும்

வழி கேடர்கள்

வாதப்படி

நம்பி

தம்பி! நீ ஏறிடாதே

பாவ படி!


குறை மதியோர்

உணர்வுகளுக்கு

இடந்தராதபடி

சகாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்

வரலாறு படி!

"மத்ஹபின்" அவசியம்

படி!

தம்பி! நீ

அவசியம் படி!

ஈருலக வாழ்வு

சிறக்க

அவசியமதை

பற்றி பிடி!

அந்த

வெற்றி படி உனை

கரைசேர்க்கும்

ஞான படி! -

சொர்க்கத்தின்

ஏணி படி!

மெய் நிலை

கண்ட ஞானியும்

பின்பற்றி

ஏற்றம் கண்ட படி!

கண்டபடி,

தன்

இஷ்டப்படி

குரான் - ஹதீஸை

பொருள் கொண்டால்

விழுந்திடும்

சவுக்கடி!

இறுதிவரை

நபிகளின்

புகழ்பாடி

நீ

வாழ்ந்து

மடி!

மண்ணறையில்

உனக்கில்லை

கெடுபிடி!

மறுமையில்

நிழல் தரும்

"லிவாவுல் ஹம்த்"

கொடி!

--

அன்புடன்

M. முஹம்மது ஜாபர் சாதிக் (மாமா)

வழுத்தூர்.

'நாலு கொடி'


குத்புல் அக்தாப் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி..) அவர்களின் அடக்கத்தலம், பகுதாது, ஈராக்

'சிறு மக்கா' என்ற

சிறுவூர்!

ஆன்மீக சிந்தையில்

பெருவூர்!

பெரு ஞானியர்களை -

இறை நேசர்களை சுமந்த

கருவூர்!

'பெருமானார்' மீது

நேசம் கொண்ட

திருவூர்! - அது

அருந்தவ

'முஹையத்தீன்'

புகழ் பாடும்

வழுத்தூர்!

அன்று.....

காலரா பேதி!

ஊரெங்கும்

மரண சேதி!

தேதிக்கு தேதி

இதே சேதி!

இடுகாடு எடுத்துசெல்ல

நாதியற்று போமோ

என்ற மன பீதி!

விதி சுமந்து,

மதியிழந்து,

கதி கலங்கி

நின்றது - நம்

சாதி சனம்!

என்னவாகுமோ

நாளை?

என்று

எண்ணலாயினர்

நாளை!

அவ்வேளை

கனவில் வந்த

சேதி

வயிற்றில் வார்த்தது

பாலை!

காலை - மாலை

பாராமல்

ஆளை

மாய்த்த நோய்;

போய் தொலைந்திட

இனி நலம் பெருகிட

வளம் கொழித்திட

'முகையத்தீன்' பேரில்

'நாலு கொடி' சுமந்து

ஊர் சுற்றி வந்து

அன்னதானம்

செய்யச் சொன்னது

அந்த சேதி!

மெய்பட்டது கனவு

நெய்யிட்ட சோற்றில் - ஏழை

கைபட்டது!

நம்பி

காணிக்கை குவிந்தது!

நலமடைந்தோர்

கும்பி குளிர்ந்தது!

பிணி நீங்கியது

விதியை, அன்னதான

மதி வென்றது!

அன்று முதல்

அன்னதானம்

அரங்கேறியது!

நன்றி மறவாமல்

இன்றும்

தொடர்கிறது!

குறை சொல்லி

அதை நிறுத்திட

அதிகாரம்

யாருக்குண்டு?

வரும்

காலமெல்லாம்

தொடரும்!

இன்ஷா அல்லாஹ்!

--

M. முஹம்மது ஜாபர் சாதிக்

வழுத்தூர்.

அவுலியாவை கிண்டலடித்த ஒரு சகோதரருக்கு அவர் தெளிவடைய பதில்

السلام عليكم ورحمة الله وبركاته
அவுலியாவை கிண்டலடித்து ஒரு சகோதரர் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அவர் தெளிவடைய என் பதில்:
"நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.” 26:80
ஒரு அவுலியா உயிருடன் இருக்கும் காலத்தில் நோய்வாய் பட்டிருந்தால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை அழைப்பார்கள். அவர் இறை நேசர் என்பதால் மேற்கண்ட இறை வசனத்தின்படி அல்லாஹ் அந்நோயை குணபடுத்துவான். மேலும் அன்றாட வாழ்கையின் தேவைகளுக்கு பணியாட்களின் உதவியையும் நாடுவதும் உண்டுதான். மரணித்துவிட்டால் ஜனாஜாவை குளிப்பாட்டுவது, கபனிடுவது, தோள்கொடுத்து தூக்கி செல்வது, கப்ர் வெட்டுவது, அடக்கம் செய்வது போன்றவைகளை மற்றவர்கள்தான் செய்வார்கள். இது உலக நியதி. இதுபோன்ற விஷயங்களில் அவர்களுடைய சக்தியை (கராமத்தை) காட்டவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருந்தால் அதையும் அவர்கள் செய்து காட்டுவார்கள். இறை நேசர்கள் விஷயத்தில் இதுபோன்ற கேள்விகள் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது / அபத்தமானது. இறைநேசர்களை கேலி செய்வது இறைவனை கேலி செய்வதாகும்.
'ஆகுக' என்று சொன்னமாத்திரத்தில் 'ஆகிவிடும்' என்று அல்லாஹ் சொல்கிறான். வானங்கள், பூமி இவற்றை ஆட்சி செய்வதில் தனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் தனக்கு இணை - துணை இல்லை என்றும் சர்வ வல்லமை பொருந்தியவன் என்றும் சொல்லும் அல்லாஹ், தான் தேவை அற்றவன் என்றும் சொல்கிறான். தன் நபியிடம் பேசுவதற்கே 'ஜிப்ரயீல்' (அலை) உதவி தேவைபட்டிருக்கிறது. ரூஹை கைப்பற்ற 'இஸ்ராயீல்' (அலை) உதவி தேவைபடுகிறது. 'கிராமன் - கார்த்தீபன்', 'முன்கர் வ நக்கீர்', 'மீக்காயீல்' மற்றும் இலட்சக்கனக்கான மலக்குகளின் உதவி அல்லாஹ்விற்கு தேவைபடுகிறது. மேலும் தன்னை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க இலட்சக்கணக்கான நபிமார்களின் உதவி அல்லாஹ்விற்கு தேவைபட்டிருக்கிறது. இலட்சகணக்கில் நபிமார்களை பூமிக்கு அனுப்பியும் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பூமியில் பாதிக்கு மேல் இருக்கிறார்கள். இந்நிலையில் நபிமார்களின் வருகைக்கு ஏன் முத்திரை இட்டான்? ஒரு வேளை தன்னை அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டுவிட்டார்கள் என்று தவறாக நினைத்துவிட்டானா? நபிமார்களின் வருகைதான் நின்று விட்டதே இப்பொழுது 'ஜிப்ரயீல்' (அலை) என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஒருவர் கேட்டார்; நீங்கள் கேட்பதுபோல்....... இதுவும் நியாமாகத்தானே தெரிகிறது. சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விற்கே இத்தனை பேர்களுடைய உதவி தேவைப்படும்போது அவுலியாவிற்கு தண்ணீர் கொண்டுவர ஒரு பணியாளின் உதவி தேவைபடுவதில் ஆச்சர்யம் இல்லை.

என் கேள்விக்கென்ன பதில்?

உங்கள் பாணியில் இப்படி கேட்டுப் பாருங்கள். இவைகளுக்கெல்லாம் அறிவுப் பூர்வமான பதில் உங்களால் சொல்ல முடியாது. பதில் தெரியவில்லை என்றால் உடனே "நவூதுபில்லாஹ்".... கலிமா சொல்லுங்கள் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம்தான் இது:
முஃமீன்களே! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை, அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமீன்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். 3:160

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? 2:107



கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்து பார்ப்பது மிகக் குறைவே யாகும். 27:62

ஹஜ்ரத் ஹம்சா(ரலி), இமாம் ஹசன்(ரலி), இமாம் ஹுசைன்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) இவர்களெல்லாம் மார்க்கம் தெரியாதவர்களா? - அல்லாஹ்விடம் உதவி தேடாமல் அல்லாஹ்வை தவிர்த்து வேறு ஒருவரிடம் உதவி தேடியவர்களா? இவர்களெல்லாம் அல்லாஹ்மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பேற்படுத்தி கொண்டவர்கள்தானே. இவர்களுக்கெல்லாம் இறைவன் உதவி செய்யாமல் கைவிட்டு விட்டானே மேற்கண்ட இறை வசனத்திற்கு மாறாக....அது ஏன்? என்று கேட்பது எவ்வளவு விபரீதமானதோ அதுபோன்றுதான் உங்கள் கேள்வியும் விபரீதமானது.
மேலும் 'பத்ர்' போர் நடந்த சமயத்தில் சகாபாக்களுக்கு துணையாக மலக்குகளை இறைவன் பூமிக்கு அனுப்பி போர் புரிய வைத்தான். இதை குர்-ஆன் சொல்கிறது. இது தொடர்பான ஒரு கேள்வி. இறைவன் (நாடினால்) சொன்னாலே போதுமே முஹம்மது (ஸல்) அவர்களின் அணி வெற்றி பெற்றிருக்குமே. அவன் எதற்கு மலக்குகளை போர் புரிய அனுப்பவேண்டும்? அல்லாஹ் இந்த பக்கம் இருந்தும், ஆயிரகணக்கான மலக்குகள் சகாபாக்களுக்கு துணையாக போர் புரிந்தும் சகாபாக்கள் நிறைய பேர் போரில் பலியானார்களே ஏன்? மலக்குகள் சரியாக போர் புரியவில்லையா? அபூஜகீலின் தாக்குதலை மலக்குகளால் எதிர் கொள்ள முடிய -வில்லையா? சகாபாக்களுக்கு துணை செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே மலக்குகளை அனுப்பிவைத்தான். சகாபாக்களில் ஒருவர் கூட பலியாகாமல் காப்பாற்றி இருக்கலாமே - அல்லாஹ் தனது வல்லமையை காட்டியிருக்கலாமே. இப்படி கேள்வி கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா?
இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை குர்பான் கொடுக்கும் சமயத்தில் கத்தி இஸ்மாயில் (அலை) அவர்களின் கழுத்தை அறுக்கவில்லை. காரணம் அந்த கத்திக்கு அறுக்கக்கூடாது என்று அல்லாஹ் உத்தரவு இட்டிருந்தான். அதுபோல பத்ர் போர் சமயத்திலும் எதிரிகளின் வாளுக்கு அல்லாஹ் முஸ்லிம்களை வெட்டக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கலாமல்லவா. ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று கேட்பதும் விபரீதமானதுதான்.

இறைவன் விஷயத்தில் நமது சாதாரண அறிவை பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும். குர்-ஆனும் அப்படித்தான். குர்-ஆன் வசனத்தை மேலெழுந்தவாரியாக படித்து பொருள் கொண்டோமேயானால் இப்படித்தான் அபத்தமான கேள்வி கேட்கத் தோன்றும். மற்ற புத்தகங்களை படித்து பொருள் உணர்வது போல 'இறை வேதத்தை' பொருள் உணர முடியாது. குர்-ஆனுடைய வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
குர்-ஆன், ஹதீசிலிருந்து சட்டங்களை ஆராய்ந்தெடுப்பது என்பது 'இஜ்திஹா' தின் அந்தஸ்தை எய்தியவர்களைத் தவிர மற்றவர்களால் சாத்தியமாகக்கூடிய விஷயமன்று. ஒருவருக்கு குர்-ஆனின் மேலெழுந்தவாரியான பொருள் தெரிந்தால் மட்டும் சட்டங்களை ஆராய்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிவிடாது. குர்-ஆனின் வசனங்களில் பல பிரிவுகள் உள்ளன. உதாரணம் 'நாஸிக்', 'மன்ஸூக்', 'முஜ்மல்', 'முஃபஸ்ஸர்', 'முஹ்கம்', 'முதஷாபிஹ்'. சில வார்த்தைகள் 'ஆம்' மாகவும், 'காஸ்' ஸாகவும், 'முஷ்த்தரகா' கவும், 'முஅவ்வலா' கவும் பல பிரிவுகள் உள்ளன. இவற்றை புரிந்து கொள்வதற்கு 'உஸூலுல் ஃபிக்ஹூ', 'உஸூலுத் தப்ஸீர்' என்ற கலைகளில் சிறப்பான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் குர்-ஆனின் வசனத்தை மேற்கோள் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இன்றைய தலைமுறையினர். மேலெழுந்தவாரியாக குர்-ஆனின் வசனங்களை பார்த்தால் நம் அறிவுக்கு தெளிவு கிடைக்காது.
- ஜாஃபர்

"இரண்டும் (அல்லாஹ், முஹம்மது) ஒன்றல்ல; என்றாலும் வேறல்ல"

அஸ்ஸலாமு அலைக்கும்!

சகோதரர்களே!
சமீப காலமாக "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு"என்று பி.ஜே. கூறி வருகிறார். அவர், முன் வைக்கும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பல உதாரணங்களை சொல்கிறார். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அவர் சொன்னது உண்மை என்று தான் தோன்றுகிறது.
  • (விசுவாசிகளே! போர் புரிந்த) அதுசமயம் நீங்கள்அவர்களை வெட்டிவிடவில்லை; எனினும், அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான்.விசுவாசிகளை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனும், மிக்க அறிந்தோனுமாயிருக்கின்றான். (குர்-ஆன் 8:17)
  • (நபியே!) நிச்சயமாக எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தத்தம் செய்து உமக்கு உதவி புரிவதாக உம்மிடம் கை கொடுத்து) உம்மிடம் வாக்குறுதி செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது (உம்முடைய கையன்று;) அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகின்றனரோ, அவன் தனக்குக் கேடாகவே (அதனை) முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூர்த்தியாக்கி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான். (குர்-ஆன் 48:10)
கேள்வி - பதில்:
கேள்வி: போர் புரிந்த சமயம் எதிரிகளை வெட்டியது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: விரோதிகளின் மீது மண்ணை எறிந்தது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: சகாபாக்கள் யாரிடம் வாக்குறுதி செய்தார்கள்?
பதில்: அல்லாஹ்விடம்
கேள்வி: சகாபாக்களின் கை மீது யாருடைய கை இருந்தது?
பதில்: அல்லாஹ்வின் கை

இதுபோன்று ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததை தான் செய்ததாகவும், ரசூல் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்தவர்கள் தன்னிடம் செய்ததாகவும், அவர்கள் கை மீது தன்னுடைய கை இருப்பதாகவும் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தெளிவாக சொல்லிக் காட்டுகிறான். இதையெல்லாம் அல்லாஹ் செய்தான் என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் எங்கே சென்றார்கள்? இல்லை, இல்லை அதனை செய்தது கண்மணி நாயகம் தான் என்று வாதிட்டால் அல்லாஹ் சொன்னது பொய்யா? குர்-ஆனுடைய வசனத்திற்கு வெளிப்படையான கருத்தை தவிர வேறு மறைமுக கருத்து எதுவும் இல்லை என்று பி.ஜே. சொல்லியது நினைவிருக்கலாம். இதையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கும்போது "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு" என்று பி.ஜே. ஆணி அடிப்பது போல அடித்து சொல்வது சரிதான் என தெரிகிறது. இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்ன பி.ஜேக்கு அந்த உருவம் எப்படி இருக்கும்; அந்த உருவம் யாராக இருக்கும் என்பது கூடவா தெரியாமல் இருந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்று சொன்னால் அவர் செய்த ஆய்வும் பொய், அல்லாஹ் சொன்னதும் பொய் என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார் என்றுதானே அர்த்தம். தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் மறைத்துவிட்டார் என்பது தான் உண்மை.

மேலே சொல்லப்பட்ட இறை வசனங்களை கவனித்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது அல்லாஹ், தன்னை ரசூல் (ஸல்) அவர்களோடு தான் ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சொல்லிக் காட்டுகிறான். அப்படி ஒப்பிட்டு சொல்லிக் கொள்வதை அவன் விருகிபுகிறான். அப்படி அல்லாஹ், தன்னோடு ஒப்பிட்டு சொல்லிக் கொள்ள தகுதியான ரசூல் (ஸல்) அவர்கள்தான் "அல்லாஹ்வின் உருவம்"என்று சொல்ல வந்த பி.ஜே., வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து சொல்லியிருக்கிறார்; நாமெல்லாம் சிந்தித்துப் பார்த்து உண்மையை தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கையில். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. வெண்ணையை கையில் கொடுத்து விட்டார்; நெய்க்கு அலைய நாம் என்ன விபரம் தெரியாதவர்களா? சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா? ஆக; "இரண்டும் (அல்லாஹ், முஹம்மது) ஒன்றல்ல; என்றாலும் வேறல்ல" என்றுசிந்திக்க வைத்த பி.ஜேக்கு நன்றி!

--


Regards
Mohamed Jaffer Sadique

Mohamed Jaffar Sadique
jaffarmama@gmail.com
117.206.67.138

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்விற்கு உருவம் இருப்பதாக சொல்லிவிட்டீர்கள் அந்த உருவம், அல்லாஹ்வால் “ஹபீபுல்லா” என்று அழைக்கப்பட்ட / புகழப்பட்ட “கண்மணி நாயகம்” தான் என்று சொன்னால் உங்களுக்கென்ன நஷ்டம்? ஏன் உங்களுக்கு இவ்வளவு மன கஷ்டம்?

abdul malick
welawareness@gmail.com
117.206.64.74

இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்று பி.ஜே ஆதாரமாக காட்டவேண்டிய அவசியம் என்ன? குர்ஆன் மற்றும் ஹதீஸ் இவை இரண்டைத்தவிர யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மார் தட்டிய பி.ஜே, இப்னு குதைபாவை ஏற்றுக் கொண்டது எப்போது? ஏன்? அப்படியானால் இப்னு குதைபாதான் இவர்களின் இமாமா? இந்த இப்னு குதைபா யார்? இந்த பி.ஜே யார்? பி.ஜேயின் கொள்கைதான் என்ன? அவரின் ஆதரவாளர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா? அவரின் ஆதரவாளர்கள் செம்மறி ஆட்டு மந்தைகளா? ரசூல் (ஸல்) அவர்களை நம்மைப்போன்று சாதாரண மனிதர் என்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அல்லாஹ்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.

abdul malick
welawareness@gmail.com
117.206.70.248

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பது போல தனது புதுப்புது அபத்தமான கற்பனைகளை மார்க்கத்தில் புகுத்த முயன்ற முயற்சி தோல்வியை தழுவியதும் கடைசியில் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்ற அறிவுக்கு ஒவ்வாத கற்பனையை மார்க்கத்தில் திணிக்க முயலுகிறார் பி.ஜே.

கண்மணி நாயகத்தை நம்மைப்போன்ற மனிதர் என்று சொல்லும் போதே பின்னாளில் குர்-ஆனிலும், அல்லாஹ்விடத்திலும் கை வைப்பார் என்று நினைத்தேன். நான் நினைத்தது சரியாகி விட்டது. தர்ஜுமா எழுதுவதின் மூலம் குர்-ஆனில் கை வைத்தார். இப்பொழுது உருவம் உண்டு என்பதன் மூலம் அல்லாஹ்விற்கே ஆப்பு வைத்துவிட்டார். ஆப்பு வைத்த அசதியில் ஓ(ஆ)ய்வுக்கு சென்று விட்டார். ஓ(ஆ)ய்வின் முடிவில் அல்லாஹ் இல்லை என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

Mohamed Hussain
hussainmr94@gmail.com
117.206.65.202

நண்பர் இப்ராகிம் அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜே அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள்.

என்று பல வசனங்களை ஆதாரம் காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை, கால், முகம், கண், செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிருத்தி அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்.

கை, கால், முகம், கண், செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதை வைத்து அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று முடிவுக்கு வரும்போது மேற்கண்ட வசனங்களின்படி ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததை நேரடியாக தான் (அல்லாஹ்) செய்ததாக சொல்லி காட்டுவதால் “ரசூல் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வின் உருவம்” என்று ஏன் சிந்திக்க கூடாது என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். விளக்கம் சொல்ல தெரியவில்லை என்றால் உடனே “வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள்; பாவமன்னிப்பு தேடுங்கள்” என்று யோக்கியன் போல சொல்ல கூடாது.

அல்லாஹ்வை பற்றி உலகுக்கு சொல்லவந்த ரசூல் (ஸல்) அவர்களே அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று சொல்லவில்லை. கண்மணி நாயகம் அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்ல பி.ஜேக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அரபு மொழி தெரிந்து விட்டால் எது வேண்டுமென்றாலும் சொல்லலாமா? உயிரிலும் உயிரான, உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தை ‘போஸ்ட்மன்’ என்றும் ‘நம்மை போல மனிதர்’ என்றும் சொன்னவர் பி.ஜே. மிஃராஜை (விண்ணுலக பயணத்தை) மறுத்த பி.ஜே. பின்னர் அதை ஒத்துக்கொள்கிறார். இது போன்று மாற்றி மாற்றி பேசுவதை எல்லாம் உம்மை போன்ற அவருடைய ரசிகர்கள் வேண்டுமென்றால் ஏற்றுக்கொண்டு அவருக்கு வெண்சாமரம் வீசலாம்.

மேலும் இதுபோன்ற சிந்தனைக்கு மூல காரணமே அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று பி.ஜே சொன்னதுதான். முதலில் அதை புரிந்து கொள்ளும். ஒரு கருத்துக்கு கமென்ட் கொடுக்கும் போது அதில் என்ன எழுத பட்டிருக்கிறது என்று முழுமையாக படித்து அதன் கருத்தை உணர்ந்து கமென்ட் கொடுக்க வேண்டும். அரைவேக்காட்டுதனமாக கமென்ட் கொடுக்க கூடாது.

உங்களால் மட்டும் தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் சிந்திக்க முடியும்.

jmbatcha
jmbatcha.wordpress.com
jmbatcha@gmail.com
86.96.227.101

அன்பர் இப்ராஹிம் அவர்களுக்கு, ஸலாம்! தாங்கள் இந்த இடுகையை கண்டு கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள், நன்றி! 1400 வருடங்களாக எவருமே பேசாத..எண்ணாத, இறைவனுக்கு உருவம் உண்டு… கைகால்கள் உண்டு… என்று பி.ஜே என்ற நபர் மக்கள் மன்றத்திலே சர்வ சாதாரணமாக பேசி எல்லா மக்களையும் குழப்பி ஈமானை கொன்ற பின்னரே இத்தகைய சிந்தனைகள் எல்லாம் வரத்தொடங்கியுள்ளன, இறைவன் எந்த உருவத்தில் இருப்பான் என்ற கருத்தே உங்களை உணர்வு ரிதியாக பாதித்தது என்றால் இறைவனுக்கே பகிரங்கமாக உருவம் கற்பிக்கும் அந்த மூலகர்த்தா பீ..ஜே குறித்து என்ன சொல்ல போகிறீர்கள்? ஆக இறைவன் எந்த உருவத்தில் இருக்கிறான் அல்லது இருப்பான் என்ற எண்ணத்தை இன்றைய மக்களின் நெஞ்சத்திலே வினாவாக பதித்த அன்னார் பி.ஜே பற்றிய.. அவரின் இச்செயல் பற்றிய தங்களின் கருத்தை தாங்கள் முதலில் அறியத் தாருங்கள் ஏனெனில் தான் ஒரு மேதை என்று காட்டுவத்ற்காகவும் தன் பக்த கோடிகள் தங்களின் அறிவை இவரிடம் அடகு வைத்துவிட்ட காரணாத்தினால் நாம் என்ன வேண்டுமானாலும் குர் ஆன் ஹதீஸ்பெயரில் விளக்கம் கொடுக்கலாம் இச்சமூகத்தை கெடுக்கலாம் என்ற அவரின் மனப்போங்கு இவைகள் குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீகள்.. அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் ஆண்டவனையும் அவன் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் கூட விட்டு வைக்காத அந்த மகா அறிறி..ஞர் உங்கள் பார்வையில் குற்றவாளியா..? அல்லது அறிவாளியா..?

asma
asmabismi@gmail.com
86.96.227.102

அற்புதமான கவிவரிகள்.. பாராட்டுக்கள்

ibrahim
akmibrahim105@gmail.com
86.96.227.93

அட பாவிங்களா, எப்படிப்பா உங்களுக்கு இப்படி பேச எண்ணம் வந்தது. மனிதன் ஒரு பிறவி. அவனுக்கு இப்படித்தான் கை இருக்கும், கால் இருக்கும். மற்ற பிறவிகட்கு ஒவ்வரு மாதிரி அமைப்புகளை அல்லா படைத்து உள்ளான்.
இறைவனின் அருளலால் கண்மணி நாயஹத்திற்கு அற்புதங்கள செய்தான். அதற்ககாக இப்படியா கற்பனை செய்வது ? உங்களுக்கும் இந்த கிருஷ்துவனுகும் என்னடா வித்தியாசம் ?? அவனுக தான் ஈஸா (அலைஹை ) அவர்களை தேவர்ன்னும் (தெய்வம்) சொல்வான். தேவதூதர் ன்னும் சொல்வான். இந்த சிந்தனை மனிதனுக்கு தேவை இல்லாதது. இது மோசமன அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும். உங்க இந்த தேவையற்ற சிந்தனயை உங்களோடோ வச்சுக்காம மற்ற வர்களை கெடுப்பது மிகப் பெரும் பாவத்தில் விட்டு விடும்.
இப்ராகிம்.

Mohamed Hussain
hussainmr94@gmail.com
117.206.67.223

சகோதரரே!

அல்லாஹ், தனக்கு உருவம் இருப்பதாக குர்-ஆனில் எங்காவது சொல்லி இருக்கிறானா? அல்லது ரசூல் (ஸல்) அவர்களாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை.
ஆனால் கை, கால், முகம் என்று அல்லாஹ் சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு அவனுக்கு உருவம் இருக்கிறதாக தன்னுடைய கற்பனையை பதிவு செய்திருக்கிறார் பிஜே. இது உங்களுக்கு எப்படி நியாயம் என்று படுகிறதோ அதேபோன்று மேற்படி குர்-ஆன் வசனத்தில் அல்லாஹ் சொன்னதை வைத்துக்கொண்டு ரசூல் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் உருவமாக இருக்கிறார்கள் என்று சிந்திப்பது எங்களுக்கு நியாயமாக படுகிறது. உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.67.223

நண்பரே!

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பது பிஜேயின் கூற்று
இக்கூற்றில் பிறந்ததுதான் இப்புதிய சிந்தனை ஊற்று
இரண்டும் ஒன்றெனும் சித்தமகிழ் ஆன்மீக காற்று
அதை உகப்புடனே சுவாசித்து உன் ஈமானை தேற்று
நபிகளார் பாசறையில் தோழர்கள் தேர்ந்தனர் கற்று
அத்தூயவழி மார்க்கம் தந்த இமாம்கள் வழி பற்று
இதற் கெதிரான மக்கிப்போன உன் எண்ணத்தை மாற்று
உணர்வே இல்லாவுன் கொள்கைகள் விரைந்தோடி போகும் தோற்று
வருங்கால உன் சந்ததிகளையும் சொர்க்கத்தின் ஏணியில் ஏற்று

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.74.174

நண்பரே!

அல்லாஹ்வின் அடிமை என்று மொட்டையாக பதிவு செய்திருக்கிறீர்கள். உருவமுள்ள அல்லாஹ்வின் அடிமையா அல்லது உருவமில்லா அல்லாஹ்வின் அடிமையா என்ற விளக்கமில்லை என்றாலும் மேற் கூறப்பட்ட குர்-ஆனின் வசனத்திற்கு விளக்கம்தான் என்ன என்பதையாவது தாங்கள் விளக்கி இருக்கலாமே. பி.ஜே. சொன்னபடி அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லை. ரசூல் (ஸல்) அவர்கள் தான் அந்த உருவம் என்பதில் தான் உங்களுக்கு பிரச்சினை; அப்படித்தானே? அப்படியென்றால் நீங்கள் தான் வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள். முதலில் நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்.

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்னால் தப்பில்லையாம் நாம் இப்படி சொன்னால் மட்டும் ஷிர்க்காம்; பாவமன்னிப்பு தேட வேண்டுமாம்.

jmbatcha
jmbatcha.wordpress.com
jmbatcha@gmail.com
195.229.237.42

ஸலாம்! மு.சாதிக் (புனைப்பெயர் இறையடிமை musaddiq_abdul@yahoo.com) அவர்களே மேற்கூறப்பட்ட கருத்துக்கள் என்னுடையது என எண்ணுகிறீர்கள் போலும், மாறாக இத்தளமே நான் இத்தடாகம் பற்றி.. என்ற பகுதியில் குறிப்பிட்டவாறு இது ஒரு செய்திகளின் திரட்டுக்கான பக்கமே அன்றி வேறில்லை, இங்கே இதை ஏன் நான் பதிவு செய்திருக்கிறேன் என்றால் பி.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் கற்பித்து சமீபகாலமாக பேசி வருவதால் அவரின் கூற்று பிரகாரம் இப்படி ஓர் சிந்தனைக்கு அது வித்திட்டிருக்கிறது, அவ்வாறு காணக்கிடைத்ததையே உங்களின் சிந்தனைக்கும் தந்தேன், மேலும் இதில் இறுதி தீர்வு காணவேண்டியது நீங்கள் தான் அன்றி இது உங்களைக் குழப்புவது
அல்ல எனவும் புரிய வேண்டுகிறேன்.

அல்லாஹ்வின் அடிமை
musaddiq_abdul@yahoo.com
86.96.226.90

திருவாளர் முஹைதீன் அவர்களே! அல்லாஹ்விற்கு உருவம் உண்டு. ரசூல்(ஸல்) அவர்கள் உருவில் அல்லாஹ் என்று நீங்கள் புதிதாக குழப்புகின்றீர்கள். இதன்மூலம் நீங்கள் வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள். பாவமன்னிப்பு தேடுங்கள்.

குறிப்பு: ரசூல்(ஸல்) அவர்கள் உருவில் அல்லாஹ் என்று நீங்கள் புதிதாக குழப்புவதை பார்த்தால், நீங்கள் ‘திருவிளையாடல்’ படம் அதிகம் பார்க்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். மறு அவதாரம், கடவுளின் அவதாரம் எல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

முகம்மது ஹுஸைன்
hussainmr94@gmail.com
117.206.70.188

“அல்லாஹ்விற்கு உருவம் உண்டு” என்று பி.ஜே. சொன்ன கருத்து சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. மேலே கண்ட இறை வசனத்தின் படி கண்மணி நாயகத்தின் வடிவில் (உருவில்) தான் அல்லாஹ் செய்திருக்கிறான். அந்த வகையில் பார்த்தால் “அல்லாஹ்வின் உருவமே ரசூல் (ஸல்) அவர்கள் தான்” என்பது தெளிவாகிறது. குர்-ஆனுக்கு தர்ஜுமா எழுதிய பி.ஜேக்கு இந்த உண்மை தெரிந்ததால் தான் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். ரசூல் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வின் உருவம் என்ற செய்தியை உடனே வெளிப்படையாக சொன்னால் தனது ரசிகர்கள் கூட்டம் ஏற்றுக் கொள்ளாது. ஆதலால் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று முதலில் சொல்லி பின்னர் படிப்படியாக மூளை சலவை செய்து தனது ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைக்கத்தான் இத்திட்டம். பி.ஜேயின் ரசிகர்கள் பாவம்.

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.68.252

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த குர்ஆனின் வசனத்தைப் பார்க்கும் போது ரசூல் (ஸல்) அவர்கள் செய்த செயல்கள் அல்லாஹ் செய்ததாகத்தான் இருக்கிறது. அதாவது ரசூல் (ஸல்) அவர்களின் உருவில் அல்லாஹ் செய்திருக்கிறான். அப்படியென்றால் அல்லாஹ்வின் உருவம் ரசூல் (ஸல்) அவர்கள் தான் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? இதைத்தான் பி.ஜே. சூசகமாக சொல்லியிருக்கிறார்.