திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரிகளைக் குறைத்து மக்களை வாழ்வித்த மன்னர் அவ்ரங்கஸீப்!

ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வரும் முன்னர் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அவற்றைச் சொன்ன நினைவே இல்லாதது போல் நடந்துகொள்வதும் பல முறை மக்கள் பட்டு அனுபவிப்பதுதான்....
அவ்ரங்கஸீப்(ரஹ்…) அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்த உடனே ஏற்கனவே பலகாலமாக இருந்து வந்த சுமார் 80வகை வரிகளைத் தாமாகவே நீக்கி ஆச்சர்யப்படுத்தியவர்.
அவை ஆறுவகைப்படும்.அவற்றுள் இந்து சமய மக்களின்மீது விதிக்கப்பட்ட வரிகள் குறிப்பிடத் தக்க ஒருவகை. (ஆதாரம்:அறிஞர்கள் காஃபீகான் ,மனுச்சி& மோர்லாந்த் மற்றும் Sarkar in Mugal Administration,ref.from “Mirat-I Alam”)
அவர் நீக்கிய வரிகளின் நீண்ட பட்டியலில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சில :-
1. கங்கையில் நீராடும் யாத்ரீகர் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட ஆறேகால் ரூ.வரி;
2.எரிக்கப்பட்ட சடலங்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க விதிக்கப்பட்ட வரி;
3.வட்டி இல்லாக் கடன்கள் மீது விதிக்கப்பட்ட வரி (அவர் காலத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய கடன்களுக்கு வட்டி இல்லை );
4. கீழ்ஜாதி இந்து விதவையைத் திருமணம் செய்துகொண்டால் செலுத்த வேண்டிய வரி.
5.தீபாவளி,பரா அத் இரவுகளில் செய்யப்பட்ட விளக்கு அலங்கார வரி .
6.முஹ்தர்ஃபா’ எனும் தலை வரி; 7.பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கான வரி.
8.கைத்தறி துணிகள் மீதான வரி;
9.தாசில்தார் வரி…. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்திக் காட்டிய மன்னர் அவ்ரங்கஸீப்!








ஆங்கஸ் மேடிஸன் என்னும் பொருளாதார வரலாற்று அறிஞர் அண்மைக் காலத்தில் எழுதிய நூல்கள் மற்றும் ஆய்வேடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட முந்திய பதிவிற்கு நட்புநூல் சகோதரர்கள் காட்டிய ஆர்வம் அசாதாரணமானது! அல்ஹம்துலில்லாஹ்.
அவர் காலத்திற்கு முன்னரே எழுதப்பட்ட“History of India as told by its own Historians vol-2” (எலியட் & டாவ்ஸன்) என்ற நூலில் இருந்து:- அவ்ரங்கஸீப் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு,இங்கிலாந்தின் நாணய மதிப்பைவிட அதிகமாக இருந்தது.
அதாவது 01பவுனுக்கு 08 இந்திய ரூபாய். (பவுன்,ஷில்லிங்,பென்ஸ் என்பன இங்கிலாந்து நாணய முறை)
[பெர்னியர்,தேவ்னோ, பக்த்வார்கான், மனுச்சி, ரமூசியோ ஆகிய வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மற்றும் தஸ்தூர் அமல்(அரசுக் கையேடு) ஆகியவற்றின் அடிப்படையில்] அவ்ரங்கஸீப்பின் ஆட்சிக்கால ஆண்டு வருவாய் 20,32,80,000 முதல் 34,84,00,000 கோடி ரூ. வரை உயர்ந்தே வந்துள்ளது.
“Land Revenue Administration under the Mughals”- என்ற நூலில் மாநிலவாரியான வருவாய் விவரங்கள் 164 முதல் 171வரை உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
நிலவரி வருவாயும் ஏற்றுமதி-இறக்குமதி வருவாயும் அரசின் முதன்மையான வருவாய்களாக இருந்துள்ளன.
----------------------------------------------------------
படத்தில்: அவர் காலத்து தங்க,வெள்ளி,செப்பு நாணயங்கள்.

இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் காட்டிய மன்னர் அவ்ரங்க ஸீப்!


”அகன்ற பாரதத்தை அமைத்தவர் யார்?-அதை
அழகாய் ஆட்சி புரிந்தவர் யார்?
மொகலா யர்களின் வழியினில் வந்த
முஸ்லிம் அவ்ரங்க ஸீப் அல்லவா?”
---இது நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாடல் ஒன்றின் பகுதி.
அவர் ஆட்சியின் சிறப்புகளில் ஒன்று:-
”கி.பி.1700-இல் மொகலாயப் பேரரசர் அவ்ரங்க ஸீபின் ஆட்சிக் காலத்தில் அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது….அவ்ரங்கஸீபால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து,அதற்குப் பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது…”
---ஆங்கஸ் மேடிஸன் என்னும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார வரலாற்று அறிஞர் எழுதிய ஆய்வு நூல்களை மேற்கோள் காட்டி தி இந்து (17-02-2015) நாளிதழில் `பொருளாதாரம் அறிவோம்’ பகுதியில் த. நீதிராஜன்.
நன்றி திரு த. நீதிராஜன் அவர்களே.