திங்கள், 23 பிப்ரவரி, 2015

இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் காட்டிய மன்னர் அவ்ரங்க ஸீப்!


”அகன்ற பாரதத்தை அமைத்தவர் யார்?-அதை
அழகாய் ஆட்சி புரிந்தவர் யார்?
மொகலா யர்களின் வழியினில் வந்த
முஸ்லிம் அவ்ரங்க ஸீப் அல்லவா?”
---இது நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாடல் ஒன்றின் பகுதி.
அவர் ஆட்சியின் சிறப்புகளில் ஒன்று:-
”கி.பி.1700-இல் மொகலாயப் பேரரசர் அவ்ரங்க ஸீபின் ஆட்சிக் காலத்தில் அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது….அவ்ரங்கஸீபால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து,அதற்குப் பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது…”
---ஆங்கஸ் மேடிஸன் என்னும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார வரலாற்று அறிஞர் எழுதிய ஆய்வு நூல்களை மேற்கோள் காட்டி தி இந்து (17-02-2015) நாளிதழில் `பொருளாதாரம் அறிவோம்’ பகுதியில் த. நீதிராஜன்.
நன்றி திரு த. நீதிராஜன் அவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக