வியாழன், 16 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம்.
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

திங்கள், 6 அக்டோபர், 2014

வார்த்தைகள்

ஓஷோ தன் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில்
ஒன்றை உங்களுக்காக தருகிறேன் ...
அன்பே ,
வார்த்தை அது குறிக்கும் பொருளாகாது .
கடவுள் என்ற வார்த்தை கடவுளல்ல,
ஆனால் மனம் வார்த்தைகளை,
வார்த்தைகளை, மேலும் வார்த்தைகளைச்
சேர்த்துக் கொண்டே போகிறது
பிறகு இந்த வார்த்தைகளே தடையாக ஆகிவிடுகிறது
உனக்குள் நான் சொல்வதை கவனமாக உணர்ந்து பார் .
நீ வார்த்தையில்லாமல் எதையாவது பார்க்க முடிகிறதா ?
நீ வார்த்தையில்லாமல் எதையாவது உணர முடிகிறதா ?
ஒரு கணமாவது நீ வார்த்தையில்லாமல்
வாழ முடியுமா ?
ஆக,
நான் சொல்வதை முயற்சித்து பார்
எதாவது ஒரு பொருளை பார்
எந்த சிந்தனையையும் நினைக்காதே ஆனால் பார் .
எந்த கருத்தையும் எண்ணாதே
ஆனால் வெறுமனே பார் .
பிறகு நீ உன்னத உணர்வு தியானத்தில் இருப்பாய் .
வார்த்தைகள் இல்லாமல் வாழ்ந்து பார் .
தியானத்தின் உண்மையான இயல்பை உணர்வாய் .
இந்த உலகில் நிறைய தத்துவவாதிகள் தியானத்தின் அசல்
பொருளை திரித்து தந்து கொண்டு உள்ளனர் .
தியானம் என்கிற தன்மையை தவறான பொருளில் தந்து
அதன் உண்மை இயல்பை சாகடிக்கின்றனர் .
அவர்களாகவே புத்தம் புது விளக்கத்தை தருகின்றனர்
ஆகையால் நீ விழித்திரு ..
வார்த்தைகள் இல்லாமல் வாழ்வதே தியானத்தில் வாழ்வது .
---ஓஷோ ---