திங்கள், 6 அக்டோபர், 2014

வார்த்தைகள்

ஓஷோ தன் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில்
ஒன்றை உங்களுக்காக தருகிறேன் ...
அன்பே ,
வார்த்தை அது குறிக்கும் பொருளாகாது .
கடவுள் என்ற வார்த்தை கடவுளல்ல,
ஆனால் மனம் வார்த்தைகளை,
வார்த்தைகளை, மேலும் வார்த்தைகளைச்
சேர்த்துக் கொண்டே போகிறது
பிறகு இந்த வார்த்தைகளே தடையாக ஆகிவிடுகிறது
உனக்குள் நான் சொல்வதை கவனமாக உணர்ந்து பார் .
நீ வார்த்தையில்லாமல் எதையாவது பார்க்க முடிகிறதா ?
நீ வார்த்தையில்லாமல் எதையாவது உணர முடிகிறதா ?
ஒரு கணமாவது நீ வார்த்தையில்லாமல்
வாழ முடியுமா ?
ஆக,
நான் சொல்வதை முயற்சித்து பார்
எதாவது ஒரு பொருளை பார்
எந்த சிந்தனையையும் நினைக்காதே ஆனால் பார் .
எந்த கருத்தையும் எண்ணாதே
ஆனால் வெறுமனே பார் .
பிறகு நீ உன்னத உணர்வு தியானத்தில் இருப்பாய் .
வார்த்தைகள் இல்லாமல் வாழ்ந்து பார் .
தியானத்தின் உண்மையான இயல்பை உணர்வாய் .
இந்த உலகில் நிறைய தத்துவவாதிகள் தியானத்தின் அசல்
பொருளை திரித்து தந்து கொண்டு உள்ளனர் .
தியானம் என்கிற தன்மையை தவறான பொருளில் தந்து
அதன் உண்மை இயல்பை சாகடிக்கின்றனர் .
அவர்களாகவே புத்தம் புது விளக்கத்தை தருகின்றனர்
ஆகையால் நீ விழித்திரு ..
வார்த்தைகள் இல்லாமல் வாழ்வதே தியானத்தில் வாழ்வது .
---ஓஷோ ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக