திங்கள், 21 டிசம்பர், 2015

தந்தை யார்..?

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
*
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
*
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
*
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
*
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
*
*
* தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...
* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்
அவர் உன்னுடைய அருகில் இருக்கும்போது அவர் உடைய
அருமைஉனக்கு தெரியபோவதுமில்லை

- பேஸ்புக் 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆன்மீகம் அறிவோம் .... - ஷஃபிய்யா காதரிய்யா

ஆன்மாவைப் பற்றி பேசும் கலைக்கு ஆன்மீகம் என்று பெயர்.உடலைவிட ஆன்மா உயர்ந்தது.ஏனென்றால் உடல் அழியும் தன்மையுள்ளது.ஆன்மா அழியாதது.
‘’ உடல் பலத்தைவிட ஆன்ம பலம் மேலானது ஏன் தெரியுமா ? உடல் பலம் கல்லை உடைக்கும் இரும்பை பிளக்கும் ஆனால் , ஆன்மா பலம் சந்திரனையே பிளக்கும் “”
படைப்பின் நோக்கம் :-
இறைவன் அருள் மறையில் கூறுகிறான் :
மனித இனத்தையும் ஜின் இனத்தையும் என்னை வணங்குவத்ற்காகவே தவிற படைக்கவில்லை [ 51=56 ]
ஆனால் குர்ஆனின் விரிவுறையாளர்களின் தலைவர் ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இந்த ஆயத்தில் இடம் பெற்றவுள்ள “ லியஃபுதூன் “ [ வணங்குவதற்காக ] என்ற வார்த்தைக்கு “ லியஃரிஃபூன் “ [ என்னை அறிந்து வணங்குவதற்காக ] என்று பொருளாக்கம் செய்துவுள்ளார்கள்
எனவே நம்முடைய அமல்கள் இறைவனிடத்தில் அங்கீிகரிக்க வேண்டுமே ஆனால் இறைஞானம் கலந்த வணக்கம்மாக இருக்க வேண்டுமே தவிர ! ஏதோ சடங்காக ,சம்பிரதாயமாக இருக்க கூடாது .
இறைஞானம் என்பது வெரும் வாய்வார்த்தையால் மட்டும் முழங்குவது அல்ல !
நம்முடைய வாழ்கையின் உயீர் நாடி துடிப்பு என்பதை விளங்கவேண்டும். இதனால் தான்
கல்விகடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :-
“ ஒரு மனிதன் இவ்வுலகில் எல்லாம் பெற்று இறைஞானம் மட்டும் பெறவில்லையானால் எதையும் பெறாதவனைப் போன்றவனாவான்.அதே நேரத்தில் இறைஞானம் மட்டும் பெற்ற வேறு எதைப் பெறாவிட்டாலும் எல்லாம் பெற்றவனைப் போன்றவனாவான்.
இறைஞானத்தின் முக்கியதுவம் :-
நமது இமாமுன இமாமுல் அஃழம் அபூஹனீஃபா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் தாங்களு வயது என்ன ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இமாமவர்கள் :- “ இரண்டு “ என்று பதில் கூறினார்கள்.இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப், இமாம் முஹம்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இமாம் அஃழம் அபூஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் திருப்பவும் கேட்டார்கள். இமாம் அவர்களே ! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள்வயது இரண்டு என்கிறீர்களே அதற்கான விளக்கம் யாது என்றார்கள்.அப்போது இமாமுல் அஃழம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜஃபார் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சமூகத்தில் இரண்டு ஆண்டு தங்கியிருந்து அகமிக ஞானங்களைப் படித்தேன் எனவே அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வயதாகவும் நினைக்கின்றேன் என்று கூறினார்கள்
சூஃபியாக்கள் சொல்லிக்காட்டுவார்கள் :-
“”என்று நீ பிறந்தாயோ அன்றிலிருந்து உனது வயது தொடங்குவதில்லை.எப்போது இறைவனை அறிய முற்படுகிறாயோ அப்போதிலிருந்து உனது வயது ஆரம்பிக்கிறது.””
முதல் பணி :-
இறைஞானத்தை பெறவேண்டும் என்று பயணம் புறப்பட்ட மனிதன் தனது இலக்கை அடைய வேண்டுமானால் முதன் முதலாக அவன் செய்ய வேண்டிய முதல் பணி உள்ளத்தை தூய்மைப்படுத்துவது தான் இறைவன் அருள் மறையில் பதினோரு சத்தியங்கள் செய்துவிட்டு “” உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் வெற்றி கண்டார் ,உள்ளத்தை மாசுபடுத்தியவர் தோல்வி அடைந்தார்”” என்று குறிப்பிடுகிறான்.குர்ஆனில் வேறு எதைச் சொல்வதற்க்கும் இத்தனை சத்தியங்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறைவன் 11 சத்தியம் இடுகிறான் என்றால் அந்த செய்தி எவ்வளவு முக்கியமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.உள்ளத்தை சுத்தப் படுத்துவது மிக முக்கியமான விசையமா என்று பார்த்தால் இறைவன் தன் தூதர்களை அனுப்பிய நோக்கம் பற்றி கூறிகாட்டும் போது இப்படி சொல்லுகிறான்
“ இறைத்தூதர் மக்களுக்கு இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.மேலும் ஞானங்களை கற்றுக் கொடுப்பார் மக்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்துவார்.
[ 1 ] = ஓதிக்காட்டுவார்
[ 2 ] = ஞானத்தை கற்றுத்தருவார்
[ 3 ] = உள்ளத்தை தூய்மை படுத்துவார்
உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் என்றால் நெஞ்சைப் பிளந்து இதையத்தை வெளியே எடுத்து சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதல்ல பொருள் ‘ நான் – எனது ‘ என்ற ஆணவத்தை அழிப்பது தான் உளத்தூய்மை.
‘’ நான் மறையைக் கற்றவன் ஞானியில்லை தன்னுள் தான் மறைய கற்றக் கொண்டவனே ஞானி என்று தமிழ் கூறும் நல்லுலகம் இயம்பும். நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்துவிட்டால் மட்டும் ஞானியாகி விட முடியாது.
‘ நான் ‘ என்ற அகந்தை மமதையை தன்னுள் மறையகற்றுக் கொண்டால்தான் ஞானியாக முடியும்.
தகுதியுள்ள ஆசான் அவசியம் :-
உள்ளத்தூய்மை பெற்று இறைவனை அறிய கல்வி இருவகைப்படும்
[ 1 ] = தாளைப் படித்து பெருவது
[ 2 ] = ஆசானைப் பிடித்து பெருவது
இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள தாளைப் படிக்கக்கூடாது ஏன் என்றால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.எனவே ஆசானைத்தான் பிடித்து ஆகவேண்டும்.இன்றியமையாத அவசியத் தேவை தகுதியுள்ள ஓர் ஆசானைப் பெருவதுதான் இறைவன் குர்ஆனில் கூறினான்: - [25-59] ‘ ரஹ்மானைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ‘
நல்வழிகாட்டும் இத்தகைய ஆசான் ஒருவருக்கு கிட்டவில்லையானால் அது வழிகேட்டின் அடையாளமென்பதை இறைவன் எச்சரிக்கை விடுக்கிறான்.
இறைவன் யாரை வழிகெடுக்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் ஆசிரியரை [ நபியே ] நீங்கள் நிச்சயம் பெறமாட்டீர்கள். [ 18=17 ]
உலகப்பற்றை துறத்தல் :-
இவ்வுலகில் நாமிருந்தாலும் உலக ஆசை நமது இதயங்களில் நுழைந்து விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஆன்மீகப் பாதை அவசியம் “ மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்க்கை “ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இவ்வுலகில் நாம் இருக்கிறோம் என்று சொல்லலாமே தவிர ,வசிக்கிறோம் என்று கூறக்கூடாது ஏனென்றால் ‘ வசித்தல் ‘ என்பதற்கும் ‘ இருத்தல் ‘ என்பதற்க்கும் வித்தியாசமுண்டு .அதனால் தான் வீட்டில் வசிக்கிறான் என்றும் ஜெயிலிலே இருக்கிறான் என்றும் கூறுகிறோம்.
ஏன் தெரியுமா ?
வீட்டிலே கதவுக்கு தாழ்ப்பாள் உட்புறமிருக்கும்.
ஜெயிலில் கதவுக்கு தாழ்ப்பாள் வெளிப்புறமிருக்கும்
வீட்டில் கதவை நாம் சாத்துவோம்.
ஜெயிலில் கதவை பிறர் சாத்துவார்கள்
வீட்டில் நம்விருப்பப்படி வாழ்கிறோம்
ஜெயிலில் பிறர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் !
இவ்வுலகில் நாம் தாமரை இலை நீரைப்போல் இருக்க வேண்டும்,நீர் இலையில் இருக்கும் ஆனால் ஒட்டாமல் இருக்கும்.படகு தண்ணீரில் இருந்தால் தவறில்லை.தண்ணீர் படகுகள் வந்தால்தான் ஆபத்து.
இவ்வுலகில் நாமிப்பது தவறில்லை,உலகம் நம் உள்ளத்துக்குள் வருவது தான் ஆபத்து.
இதனால் தான்
முஹையீதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் :-
பூமியிலே உள்ள [ எனது தோட்டங்கள் மற்றும் ] செல்வங்கள் பூமியில்தான் உள்ளன. எனது உள்ளத்தில் இறைவன் மட்டும் இருக்கிறான்.
வணக்கம் எவ்வாறு அமைய வேண்டும் மென்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள் :-
இறைவன் நீ பார்ப்பது போன்று வணங்கவேண்டும்.நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடாவது வணங்க வேண்டும்
ராபியத்துல் அதவிய்யா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் இறைவனிடம் அடிக்கடி முறையிடுவார்கள்;-
இறைவனே ! நான் உன்னை வணங்குவது நீ படைத்திருக்கிற சொர்க்கத்தின் மீது ஆசைப்பட்டல்ல.நரகத்தை எண்ணி அஞ்சியுமல்ல நான் உன்னை வணங்குகிறேன் .ஏன் தெரியாது ? உன்னுடைய திருப்பொருத்தம் அடைய வேண்டமென்பதற்காக
வேண்டுகோள் :-
நாம் படைக்கப்பட்டதின் நோக்கமும் மறுமையின் வெற்றியும் நிறைவேற வேண்டுமானால் ஆன்மீகம் அவசியம் என்பதை அறிந்துள்ள சகோதரர்களில் சிலர் இன்றளவும் சொல்கிறார்கள்.
பக்குவம் அடைந்த பிறகு பைஅத் பெருகிறேன்.
நாம் கேட்பது
பக்குவம் அடைந்து விட்டால் பைஅத் எதற்கு ?
பக்குவடைவதற்க்கு தானே பைஅத் .
நோய் நீங்குவதற்குத்தானே மருந்து !
அதை விட்டுவிட்டு நோய் போன பிறகு மருந்துண்ணுகிறேன் என்றால் என்ன அர்த்தம்.
நீச்சல் தெரிந்தபிறகுதான் தண்ணீரில் இறங்குவேன் என்றால் நடக்கிற காரியமா ?
குழந்தை நடைபயில சாதனம் அவசியம்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர விளக்கு அவசியம்
இறைவனை அண்மிக்க ஆன்மீகம் அவசியம் அவசியம் அவசியம்..
வழி கெட்டோர் யார்ராயினும் அவர்களுக்கு நேர் வழி பெற துஆ செய்பவர்களாக நாம்மாக இருப்போம்

பெருமானாரின் பேரொளியிலிருந்து வையகம் பிறந்தது


💓💓💓💓💓💓💓💓💓💓
💠 வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முதல் படைப்பு என்றும்,அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான். இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும்,
சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறி வருகின்றனர்.
💠 ஸஹாபாக்கள் காலம் முதல் இதுநாள்வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும்,வரையப்பட்டும் வந்துள்ளது.
நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது.
💠 இறைவனின் முதல் படைப்பு தண்ணீர்தான் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை, இமாம்களின் கருத்துகளை தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அடிப்படை காரணமாகும் எனவே முதல் படைப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தான், அல்லாஹ்வின் ஒளியிலிருந்து படைக்கப்பட்ட முதல் ஒளியே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் ஒளியிலிருந்துதான் எல்லாம் படைக்கப்பட்டன என்பதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளோம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்!
💎 அல்லாஹ்வின் தூதரே!
என் தாயும் என் தந்தையும் தங்களுக்குஅர்ப்பணமாகட்டும்!
அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான்.
அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள்,வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான்.
முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)
(நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265)
1⃣ நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும்,தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
(அல்குர்ஆன் - 5: 15)
2⃣ அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது).
3⃣ நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும்,நட்செய்தி கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் - 33 : 45,46)
4⃣ அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் - 61 : 8)
5⃣ இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை
(அல்குர்ஆன் - 9 : 32)
 குறிப்பு : முதல் திருவசனத்தில் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.
 இரண்டாவது திருவசனத்தில் அல்லாஹ்வுடைய “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும்,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால்,இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ - (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி - றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும்.
 மூன்றாவது திருவசனத்தில் ‘சிறாஜுன் முனீர்‘ பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். - ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள்,உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும்,தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது.
இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள்,வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
 நான்காவதும், ஐந்தாவதும் திருவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற “நூர்“ ஒளி என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.
 முதல் திருவசனத்தில் வரும் “நூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது.
“தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெறச்செய்கிறார்கள். மேலும்,வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும்,புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும்,நபியவர்கள் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.“
 இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக்,தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி,தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
💠 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எதார்த்தம் “ஒளி“ என்பதை ஹதீது நூற்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன.

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஒடுக்கத்து புதன் பற்றி !!


ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது.
ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.
“இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82
அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு
-தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
-அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை.
-துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
-இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
நோயின் துவக்கம்.
عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும். அறிவிப்பாளர்.
உமர் ரலி நூல் ஹாகிம்.
عن عبدالله بن عمر رضي الله عنهماقال إني سمعت رسول اللهصلي الله عليه وسلم يقول اجتنبوا الحجامة يوم الأربعاء فإنه الذي ابتلي الله أيوب فيه بالبلاء وما يبدو جذام ولا برص إلا في يوم الأربعاء أو في ليلة الأرباء[ابن ماجه، الحاكم في المستدرك علي الصحيحين]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து)இரத்தம் வெளியேற்றுவதை தவ்ர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால், புதன்கிழமையில்தான் அய்யூப்(அலை)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும்.
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلي الله عليه و سلم قال من احتجم يوم الأربعاء ويوم السبت فرأى وضحا فلا يلومن إلانفسه[البيهقي]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இயம்பினார்கள். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்..அறிவிப்பாளர் அபூஹூரைரா رضي الله عنهநூல்.பைஹகீ
நஹ்ஸுடைய நாள்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்.,ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.
إنا أَرْسلْنا عليهم رِيْحًا صرْصرًا في يوم نحسمسْتمر
இறைவன் கூறினான். தொடராக துர்ப்பாக்கியமுள்ள நாளில் கடும்புயல் காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்54:19
அந்த நஹ்ஸுடைய நாள் புதன் கிழமையென்பதை கீழ்க்கானும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.
عن جابر قال نزل جبريل عليه السلام علي النبي صلي الله عليه وسلم فقال اقض باليمين مع الشاهد،وقال يوم الاربعاء يوم نحس مستمر[الطبراني في المعجم الاوسط]
இறைதூதர் صلي الله عليه وسلمஅவர்களிடம் ஜிப்ரில்அலைஹிஸ்லாம் அவர்கள் வந்து கூறினார்கள் ஒரு சாட்சியோடு சத்தியமிடுதலைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள்! புதன்கிழமை தொடர்பான தீங்குள்ள நஹ்ஸுடைய நாளாகும்.
அறிவிப்பாளர்.ஜாபிர் رضي الله عنهநூல்.தப்ரானி(அவ்சத்)
عن جابر بنلاعبدالله قال قال رسول الله صلي الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأمرني أن أقضي باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء نحس مستمر[البيهقي]
عن جابر قال قال النبي صلي الله عليه وسلم [أتاني جبريل فأمرني باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء يوم نحس مستمر[مسند أبي عوانة]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் மொழிந்தார்கள்.
ஜிப்ரீல் عليه السلامஅவர்கள் என்னிடம் வந்து, ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கு எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும்,கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குள்ள(நஹ்ஸுடைய) நாளாகும். அறிவிப்பாளர் ஜாபிர் رضي الله عنهநூல்.பைஹகீ.
நபிகளாருக்கு நோயின் தொடக்கம்.
قال الواقدي وقالوا بدأ رسول الله صلي الله عليه وسلم يوم الأربعاء لليلتين بقيتا من صفر،وتوفى يوم الاثنين لثنتي عشرة ليلة خلت من ربيع الأول[السيرة النبوية لابن كثير]
ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள்.
عن الزهري أخبرني أنس بن مالك قال أول ما اشتكىرسول الله صلي الله عليه وسلم كان ذلك يوم الأربعاء لليلتين بقيتا من صفر وهو في بيت ميمونة حتى أغمي عليه من شدة الوجع [السيرة الابن حبان]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள்.
அறிவிப்பாளர் அனஸ்رضي الله عنهநூல்.:சீரா,,ஆசிரியர்.:இப்னுஹிப்பான்.
قال أبوعمر ثم بدأ برسول الله صلي الله عليه وسلم مرضه الذي مات يوم منه يوم الأربعاء، لليتين بقيتامن صفر سنة إحدى عشرة في بيت ميمونة، ثم انتقل حين اشتد مرضه إلي بيت عائشة،رضي الله عنها، وقبض يوم الاثنين ضحى في الوقت الذى دخل فيه المدينة لاثنتي عشرة خلت من ربيع الأول[أسد الغابة]
இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது.ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனாரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

செவ்வாய், 20 அக்டோபர், 2015

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்?

அஹ்லுல் பைத்தினர்கள் என்பவர்கள் யார்? 
அவர்களின் சிறப்புகள் என்ன?
மற்றும் அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்....??

ஸாதாத்துமார்கள் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இரத்தத்திலிருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களைப்பற்றிய மரியாதையைக் குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே ஸாதாத்துமார்களைப்பற்றிய மாண்புகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நாம் யாவருக்கும் கடமையாகும்.

🔺என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்க வில்லை என்ற வசனம் இறங்கியபோது, "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நங்கள் அன்பு வைக்க கடமைப்பட்ட உங்களின் சுற்றத்தினர் யார்?" 
என்று ஸஹாபா பெருமக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "
அலீ (ரலியல்லாஹு அன்ஹு), பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா), ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு), ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)" என்று பதிலளித்தார்கள்.

🔺நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அலீ ரலியல்லாஹு அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா, ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இருந்தனர். அவ்விருவரையும் தன் தொடையில் வைத்துக் கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, "நபியின் குடும்பத்தார்களே! உங்களை இறைவன் பரிசுத்தப்படுத்திவிட்டான்" என்ற ஆயத்தை ஓதினார்கள். 
பிறகு, "இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லு பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

மேற்படி போர்வைக்குள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நுழைந்து கொள்ள முயன்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டதுடன், "நிச்சயமாக நீங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களில் உள்ளவராகும்" என்று கூறியதாக வந்துள்ள ரிவாயத் இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். (நூருல் அப்ஸார்)

அஹ்லுல் பைத்தினர்கள் சம்பந்தமாக வந்த ஹதீஸ்களில் சில

💝பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும். 
📚(புகாரி, முஸ்லிம், திர்மிதி)

💝"ஸெய்யிதுனா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்" 
(திர்மிதி)

💝"மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். 
இரண்டாவது அஹ்லுபைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 3 முறை கூறினார்கள். 
📚(முஸ்லிம், மிஷ்காத்)

💝 "என் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தாருக்கு நல்லவரே உங்களில் நல்லவர்" (மஜ்மஉஸ் ஸவாயித்)

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொழுகையின் அந்தரங்கம்


மஹான்  முஹம்மது தாஹிர் பாவா ஹசனி ரஹமத்துல்லாஹி அலைஹி,                  வழுத்தூர், தஞ்சை மாவட்டம் 



"ஓ. மனிதனே! உனக்கு உடலில்லை, உயிரில்லை நாமமில்லை, ரூபமில்லை. நீ ஆகாயமுமல்ல, ஆத்மாவுமல்ல! நீ யார் என்று பார்? உன் தத்துவங்களை ஞாபகம் செய்! நாம் விக்கிரஹத்தை நிக்ஹிரகம் செய்தால் (துவைதத்தை கைவிட்டு அத்துவைதத்தை கைகொண்டால் எல்லாம் நம்மையே வணங்கும்."

குருமகான் அவ்லாதுர் ரசூல், ஆரிஃபு பில்லாஹ், மஷாயிஹ், மவ்லான, மௌலவீ ஏ.முகம்மது தாஹிர் ஹஸனீ காதிரி (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஜீஸ்  (படத்தில்) அவர்களின் போதனைகளை தொகுத்து எழுதி 1994ம் ஆண்டு இந்தியாவின் மதுக்கூரில் தெளிவகம் வெளியிடப்பட்ட சம்பூரண சுயம் பிரகாசம் (Complete Self-Illumination) நூலிலிருந்து.

ஆண்டவன் ஒவ்வொரு வஸ்திலும் ஒரு இன்பத்தைப் படைத்திருக்கிறான். இன்பமில்லாதது ஒன்றுமே இல்லை. ஒரு ஜீவனுக்குப் பிடிக்காதது மற்றொரு ஜீவனுக்கு ப்ரியமானதாயிருக்கும். இப்படியே இந்திரியங்களாலடையும் சுகத்தையும் உத்தேசித்துக் கொள்க. 

சரீர சுகத்தைப் பார்க்கிலும் இந்திரிய (புலன்கள்) சுகமே அதிக மேலானது. சரீரம் மட்டும் தனியே யாதொரு சுகத்தையும் அடையாது. இதற்கு இந்திரியமும் அவசியம் சம்பந்தப் பட்டேயிருக்க வேண்டும். ஆக எல்லா வஸ்திலும் இன்பமுண்டாயிருக்கிறது.

எல்லா வஸ்துவுமே இன்ப வடிவு, சர்வமுமே சுக வடிவு. இப்படியாக எல்லா வஸ்துக்களையும் இன்ப ரூபமாய் அமைத்தவன் மனிதனை எதற்காகப் படைத்தானோ அதிலும் விஷேஷமான இன்பமிருக்க வேண்டும். எதற்காகப் படைத்தது ஆண்டவனை வணங்குவதற்கு! அப்படியாயின் ஆண்டவனை வணங்குவதில் அல்லது தொழுவதில் இருக்கும் இன்பம் எல்லாவற்றையும் விட அதிக மேலானதாயிருக்கும் மனிதன் காரணம், அசல் மற்றவை நிமித்த காரணம்.ஆகவே மனிதனுடைய இன்பம் வேறெந்த வஸ்த்துவுக்குமில்லை. மனிதனே மேலான இன்பத்தை அறிவான்.

ஜுர நோய்காரனுக்கு தேன் கசப்பாயிருக்கும். ஆனால் தேன் கசப்பல்ல அது வியாதியின் சேஷ்டை. அப்படியே தொழுகையில் இன்பம் இல்லாது போனால், உடனே அந்த வியாதிக்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது ஆன்மா சம்பந்தமான சங்கடம் (பிணி) அனேகமாக ஞானம் இல்லாததால் உண்டாகும். சிகிச்சை ஆன்மீக வைத்தியர்களால் செய்யச் சாத்தியப்படும்.

உதாரணமாக ஸ்திரியின் இன்பத்தை அடையச் சக்தியில்லாது போனால் அனேக பொருட்களை செலவு செய்து சிகிச்சை செய்கிறான். அது குணமாகாது விடில் விசனிக்கிறான். இன்னும் அனேக இடங்களில் ரோசத்தினால் மாண்டும் இருக்கிறார்கள். இவ்வித மரணம் சில விடயங்களில் நடந்திருக்கலாம். 

கேவலம், “ஆகாயத்தில் பச்சி பறக்க அதன் நிழலை வேட்டையாடுவது போலும்” “எறிந்த கல்லை எழும்பென்றென்னி வாலையாட்டிக் கொண்டோடும் நாயைப் போலும்” “கஸ்தூரிக்காய் முற்றியவுடன் அதன் வாசத்தை சுவாசத்தில் எட்டிக் கொண்ட மானானது அதைத் தேடி அலைந்ததுபோலுமிருக்கிறது. எது சத்தோ அது அசத்தியத்திலிருக்காது. ஸ்திரியின் சுகம் ஆன்ம சுகத்திற்கீடாகாது என்றாலும், அதை அடுத்திருந்த போதிலும் சூரியனுக்கும் அதன் விம்பத்திற்கும் வித்தியாசமுண்டு.

காமத்திலுண்டாகும் சுகம் நீங்கிவிடும், கடவுள் அன்பினால் உண்டாகின்ற சுகம் நீங்கிவிடாது. ஆன்மாவுக்கு இன்பமே கடவுளின் அன்பு. ஆன்மாவுக்கு ஸ்திரி சரியான ஜோடியல்ல. கடவுளே சரியான ஜோடி. ஆன்மாவுக்கு கடவுளுடன் அனுபவிக்கும் ஆனந்தம் அபாரசக்தியுள்ளது. 

இதற்கு சரியான உவமானம் சொல்ல தரிபடாததால் விளக்கத்திற்காக ஸ்திரியின் சம்பவத்தை எடுத்துக் காட்டப்பட்டது. அனுபோகிகளுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். 

ஆன்ம சுகம் தெரியாத பேடிகள், ஆண்டவனோடு சுகிக்க, ஆரோக்கியம் பெற, ஆனந்திக்க இன்பமடைய வேண்டுமானால், தங்கள் பேடித்தனம் நீங்கத்தக்க பரிகாரம் செய்யவேண்டும். தன் மனைவியுடன் கூடச் சக்தியில்லாவிட்டால் எவ்வளவு அவமானம்! நம்மையாளும் கர்த்தா தன்னுடன் கூடி ஆனந்திக்க சக்தியில்லாமல் போனால் அதிலும் கொடிய மானக்கேடு! இந்த ஆன்ம சம்பந்தமான பிணி அல்லது பேடித்தனம் நீங்க ஏன் கவலையில்லை? அதில் நாம் அதிகம் கவலையெடுக்க வேண்டும். ஒருவன் மனைவி வேறொருவனை இச்சிக்க அவனுக்கு இஷ்டமிருக்குமா? இருக்காது. அப்படியே ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துவை இச்சிக்க ஆண்டவனுக்கு பொருத்தமிருக்காது. 

ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துக்கு நாம் அச்சப்படவும், ஆண்டவனைத் தவிர வேறொரு வஸ்துவின் பேரில் நம்பிக்கை வைக்கவும் அவனுக்கு இஷ்டமில்லை.

நமது இன்பத்திற்கு ஊற்றுக்கண் ஆண்டவன். சகல இன்பத்தையும் நாம் அங்கிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சகலதையும் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும். பாவத்தைவிட வேண்டும். அவனிடம் அடி எடுத்துவைத்துப் பின்வாங்கக் கூடாது. எல்லாக் கஷ்டத்தையும் சகிக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க வேண்டும். ஆங்காரத்தை நாசம் செய்ய வேண்டும். அப்படியிருந்தால் மின்னலைப் போன்று ஒரு ஒளி பிரகாசித்து வீசும்!

அந்த ஆன்மாவில் ஆழமாக குணம் செய்கின்றன. அப்படியே ஆன்மாவின் சுகம் சரீரத்திலும் தாவுகின்றன. நமக்கு சிரிப்பு உண்டானால் சந்தோசமும், அழுகையுண்டானால் துக்கமும் உண்டாகின்றது. ஆகவே தொழுகையில் சாஷ்டாங்கம் முதலானது வீணல்ல. நமது உறுப்புக்கள் ஓய்ந்து நமது எண்ணங்கள் அசைவற்று ஒற்றுமைப்பாட்டை அதிகப்படுத்தும். இப்படித் தொழுவதால் இன்பமில்லாமல் போகாது.

சாராயம் குடிகத்துவங்கிறவன் ஆரம்பத்தில் யாதொரு இன்பமுமில்லாமல்தான் குடிக்கிறான். வரவர குடிக்கக் குடிக்க ஒரு இன்பத்தைப் பெறுகிறான். பிறகு நிறுத்த அவனால் முடியவில்லை. விடமுடியாத காரணமென்ன? அதைப் போல் தொழுகையை விடாமல் தொழுது வந்தால் ஆரம்பத்தில் இன்பமில்லாவிட்டாலும் வரவர இன்பமுண்டாகும். தொழுகையை விட முடியாது. 

“தலையில் இருக்கிற சுமையை இறக்கித் தள்ளுவதுபோல் தொழுவதும், ராஜனுக்கு வரி செலுத்துவதுபோல் செலுத்துவதும், இது மனமில்லாமல் தொழுகிற தொழுகையாயிருக்கும். ஆண்டவனுக்கு இது அவசியம் போலிருக்கிறது? அவன் தேவையற்றவன் இது நமக்குத்தான் அவசியம் அவன் கட்டளையினால் நாமே பயனடைகின்றோம். நம் நாட்டத்தை அவனிடம் பெற்றுக் கொள்கின்றோம்.

நம்மிடத்தில் ஞானமும், பக்தியும் ஒன்றுதான் வேறாகாது, அவரவர்கள் பதவிக்கேற்றபடி ஒரு லச்சியத்தின் பேரில் இருந்தாலும் சரி. தபம் கூடாதென்பதும், தபம் வேண்டுமென்பதும் இரண்டையும் வேறாகக் கூறுவதுதான். விளக்கத்திற்காக இரண்டையும் வேறாக கூறுவது சரியே. இவ்வளவு சன்னமான பேச்சுக்களை விளங்காதவர்கள் தொ ழுகிறவர்களை கண்டிப்பதும், தொழாதவர்களை நிர்பந்தம் செய்வதும் வழக்கம். 

ஜடப் பொருட்களில் எல்லாம் ஆன்மஒளி பரவியிருக்கிறது. ஜடபொருளில்லாமல் ஆன்மாவை தனியே காண தோதுயில்லை. கர்ப்பத்தில் அது இந்திரியத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் உணரலாதவிதமாக கர்பத்தை வளர்த்து வருகிறது. அப்படியே அப்படியே தொழுகையின் ஆரம்பத்தில் அப்வொளி பிரகாசிக்கிறது. பிண்டத்திலும் அவயங்கள் வளர வளர ஆன்ம ஒளி பிரகாசித்து உறுப்புகளை அசைய செய்து ஜடத்திற்கு வேறாக ஒரு பொருளிருப்பதாக காட்டி விடுகிறது.

அப்படியே நாம் தொழுகையிலும் மின்னலைப்போல் பிரகாசித்து அவ்வொளி அதிகத் துலக்கமாய், மேலே நமது அன்பினால் ஊர்த்துவ முகமாய் ஏறும். இதற்கு பகரமாக அதே முகமாய் கடவுள் அன்பினாலும் ஒர் ஒளி இறங்கும். இரண்டும் சந்திக்கும் இதுவே ஆண் பெண்னின் இரகசியம் என உவமை கூறப்பட்டது. 

ஆண்டவன் அடிமைக்குள்ள சம்பந்தம், பேரானந்தம் மன வெளிச்சம், கடவுள் சம்பாஷணை, கேட்கப்பட்டது கிடைக்கும் அற்புதம், சொர்க்கத்தின் இன்பம், கடவுள் தரிசணம், எல்லாம் கிடைக்கும் இதற்கு மேல் சொல்வது வழக்கமில்லை தாமே அறிவார்கள்.

மனிதர்கள் சந்ததியை வெளிப்படுத்த வேண்டுமென்று, மனிதர்கள் இதில் ஹிம்சை கூடாதென்று கடவுள் ஆணுக்கும் பெண்னுக்கும் இன்பத்தை உண்டாக்குகின்றான். இல்லாவிட்டால் இந்தப் பெரிய காரியத்தை செய்வதற்கு இருவரும் அபிமானம் அல்லது வெட்கஸ்தளங்களை காட்டுவதற்கு அவர்களிடம் இருக்கும் வெட்கம் ஒருபோதும் இடம் கொடாது. மற்றப்படி சில புத்தியில்லாதவர்கள் இந்த இன்பத்தையே பெரிதாகக் காணுகிறார்கள். சிலர் தொழுகையின் அங்கங்களையெல்லாம் சேர்த்து வாதிக்கிறார்கள். (இலாஹீயத்து) பரஸ்பரம் எல்லோருக்கும் பொது.

மனிதனல்லாது எந்த ஜீவன் எப் பொருள்களுக்கும் பரஸ்பரம் பொதுவாயிருக்குமென்பது, அலியாயிருப்பவனுக்கும் கால் அல்லது கையில்லாதவனுக்கும் பரஸ்பரத்துக்கு வழியில்லாமல் போகிறது.

சனி, 17 அக்டோபர், 2015

அழகிய முடிவு

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்).
அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.
பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.
ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.
”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).
’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றார்கள் சூஃகபிள்.
மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் 1.அறிபவர்கள், 2.ஆற்றுபவர்கள், 3.ஆகுபவர்கள்.
Knowing ones; Doing ones; Being ones.
இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.
பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.
அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.
அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இல்மத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா”
(அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும், அழகிய முடிவும் அருள்வாயாக”
இறுதியில் அவனாகும் நிலையே அழகிய முடிவு.

வியாழன், 8 அக்டோபர், 2015

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"

"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்.. 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

திருமந்திரம்

எல்லாம் சிவமயம்
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. – (திருமந்திரம்)
விளக்கம்:
தானே தன்னுடைய கடவுளாய் நிற்கின்றான். தான் வசிக்கும் மலைகளில் அவனே மலையாகவும் நிற்கின்றான். தனக்கு தானே சிவமயமாய் நிற்கின்றான். அந்த ஈசன் தனக்கு தலைவன் தானே ஆம்.
(இங்கே நிற்கும் என்று சொல்லப்படுவது அதன் தன்மையாய் உள்ளான் என எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவனே தலைவன், அந்த தலைவனின் தலைமைத் தன்மையும் அவனே. மலையில் இருப்பதும் அவனே, மலைக்கு அதன் தெய்வத் தன்மையை தருவதும் அவனே. சிவமயமாய் இருப்பது அவனே. அந்த சிவமயத்தன்மையும் அவனே. இதெல்லாம் எப்படி என்றால் அவன் தலைவனுக்கு தலைவனாய் இருப்பதால்).
திருச்சிற்றம்பலம்

சனி, 26 செப்டம்பர், 2015

இந்தியால் ஏன் இரண்டு தேசியமொழி கூடாது! தமிழும் தேசிய மொழியே.




இன்றும் தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது போன்றவர்களை தமிழ் பைத்தியங்கள் என்று நமது நாட்டில் பலர் கேலி செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை. தமிழ் தேசிய மொழியாக வேண்டும் என்று சொல்வது எவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட உரிமையோ. அதே போல் அவ்வாறு சொல்பவர்களை பிறர் விமர்சிப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த மொழி வெறி என்பது. என்னமோ தமிழகத்தில் மட்டும் இருப்பதை போல் பலர் சொல்வது தான் சிறந்த நகைச்சுவை.
தாவுத் இப்ராஹிம் குண்டு வெய்த்து 200 பேரை கொன்றான் என்றால். கலவரங்கள் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்ற அதி பயங்கரவாதி பால் தாக்ரே. அவன் இறந்த பொழுது. அரசாங்க மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் இறந்தவுடன் அரசாங்க விடுமுறை விடப்பட்டதை விமர்சித்து ஒரு பெண் மருத்துவர் பதிவு போட்டு இருந்தார். அவ்வாறு பதிவு போட்ட அந்த பெண் மருத்துவரின் வீடு மருத்துவமனை மட்டும் அல்லாமல். அந்த பதிவுக்கு லைக் போட்ட இருவரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கைது செய்யபட்டார்கள். தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இரவோடு இரவாக பத்தாயிரம் வெளி மாநிலத்தவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு மும்பையை விட்டு ஓடியதற்கு காரணம் என்ன? மராத்திய வெறி.
மா சுப்ரமண்யம் சென்னை மேயராக இருந்த பொழுது. கடை பலகைகளின் பெயர்கள். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கூடுதலாக தமிழில் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒரு கடையில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால். அந்த கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று ஒரு சட்டம் போட்டார். எனக்கு மா சுப்ரமண்யம் பிடித்த அரசியல்வாதி அல்ல. திமுக எனக்கு பிடித்த கட்சியல்ல என்றாலும். மா சுப்ரமண்யத்தின் இந்த சட்டம் பாராட்டுதலுக்கு உரியதே. ஆனால் இதை தமிழ் பாசிசம் என்று சிலர் விமர்சித்தார்கள்.
சென்னையில் கன்னட, தெலுங்கு, மலையாள பெயர்களில் மட்டுமே உள்ள பலகைகள் சில நமது கண்ணில் படுகிறது. மைசூரில் தமிழ் பலகையோடு மட்டும் ஒரு கடை இருந்தால். அந்த கடையின் நிலமை என்ன? ஆகும்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மைசூர் சென்றார். அவருக்கு கன்னடம் தெரியாது. ஒரு மளிகை கடையில் அவர் சாமான்களை தமிழில் கேட்ட பொழுது அந்த கடைகாரர். கன்னடத்தில் ஏதோ அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டார். மறுநாள். அந்த தமிழர். கன்னட மொழி தெரிந்த ஒரு நண்பருடன். அதே கடைக்கு சென்றார். அப்பொழுது. நேற்று கோபமாக பேசிய அதே கடைகாரர். மிக சிரித்த முகத்துடன் தமிழில் வாங்க, வணக்கம். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதை பார்த்து மிக ஆச்சர்யம் அடைந்த என் நண்பர். நேற்று ஏன்? என்னிடம் அவ்ளவு கோபமாக பேசினீர்கள் என்று கேட்க்க. அந்த கடைகாரர். நானும் தமிழன் தாங்க. நான் கோபத்தினால் அவ்வாறு பேசவில்லை. பயத்தினால் தான் பேசினேன். நீங்கள் என் கடைக்கு நேற்று வந்த பொழுது. கன்னட மொழி இயக்கங்கள், வட்டாள் நாகராஜ் போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளின் அடிபொடிகள். உங்கள் அருகில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். நான் தமிழில் பேசியிருந்தால். அந்த வெறியர்கள் என்னை மட்டுமல்ல. என் கடையையே அடித்து நாசம் செய்து இருப்பார்கள் என்று மரண பீதியோடு அவர் சொன்னார்.
அது மட்டுமா. இங்கு உள்ள தனி மனிதனும் சரி. நமது தமிழ் சினிமா நடிகர்களும் சரி. உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டால். ப்ருச்லீ, ஜெட்லி, ஜாக்கி ஜான் என்று நாம் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். அவ்வாறு சொன்னால். நம்மை அடிக்க மாட்டார்கள். ஆனால்? கன்னட நடிகர் சாய்குமாரை ஒருமுறை. கன்னட வெறி மீடியாக்கள் பேட்டி எடுத்த பொழுது உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் என்று கேட்டதற்கு. எனக்கு சிவாஜி கணேசனை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். இதுல என்னங்க தப்பு இருக்கு. உடனே மைக் பிடிச்சி நின்னுண்டு இருந்த சில பயலுங்க. நீ எப்டி சிவாஜி என்கிற தமிழன் பெயரை சொல்லலாம். ராஜ்குமாரை தான் பிடிக்கும்னு சொல்லுனு அந்த மைக்காலயே அவரை அடி, அடினு அடிச்சாங்க. அந்த சாய்குமார் தான். இப்பொழுது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் இன்று, நேற்று, நாளை படத்தில் டெரர் வில்லனாக நடித்தவர்.
இதற்க்கு முன் பிரபு தேவா கன்னடத்தில் ஒரு படம் எடுத்த பொழுது. அதில் 1,2 தமிழ் வார்த்தைகள் இருந்தது என்னும் ஒரே காரணத்திற்க்காக. அந்த படத்துக்கு எதிராக போராடிய போராளி குடும்பம் தான் ராஜ்குமார் குடும்பம். வீரப்பன் ராஜ்குமாரை தூக்கினது தப்பே இல்லை.
அணைத்து மொழிகளிலுமே. நல்லவர்கள், பறந்த மனப்பான்மை உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. கன்னட தேசத்தில் கூட. இப்பொழுது வெறி தனம் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால்? தமிழ்நாட்டில் தான்
இந்தியாவிலேயே அதிக மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது சிறு புள்ளை தனமான விஷயம். எவ்ளவோ பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கிறார்கள். ரயில், பஸ் முதலியவற்றில் பயணம் செய்யும் பொழுது. அவர்கள் மொழி பாடல்களை கொரியன் செட்டில் அலற விட்டு அதை கேட்கிறார்கள். இந்த தமிழ் நாட்டில் தமிழர்கள், தமிழர்கள் அல்லாதவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். ஆனால்? வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு அது இல்லை. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து. இன்றுவரை. 2,3 பேரை தவிர. நம்மை ஆண்ட அணைத்து முதல்வர்களுமே. தமிழ் அல்லாத வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள்.
தமிழர்கள் அல்லாதோர் நமது மாநிலத்தை ஆளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்றும் சைமான் குரூப் அல்ல. நல்லவர்கள். பறந்த மனப்பான்மை உடையவர்கள் எந்த மொழியினராக இருந்தாலும். அத்தகைய ஒரு தலைவன், தலைவியின் ஆட்சி தான். அடுத்து தமிழகத்துக்கு தேவை.

சரி. தேசிய மொழி சமாசாரத்துக்கு நாம் வருவோம்.
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. அதனால் மற்ற மொழிகளை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் அணைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் வெடித்தவர். மராத்தியரான அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவரது சிலைக்கு செருப்பு மாலை போடாத ஆதிக்க ஜாதி கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். நமது நாட்டிற்கு தேசிய ஜாதி, தேசிய மதம் என்று இல்லாத பொழுது. தேசிய மொழி என்று ஒன்று ஏன்? இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தேசிய சின்னங்களாக இருப்பவை. பழமை, பாரம்பர்யத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மயிலை விட நமது நாட்டில் காக்கா அதிகம். ஏன்? நமது நாட்டின் தேசிய பறவையாக காக்கா இல்லை. நமது நாட்டில் ஹிந்தியை அதிக மக்கள் பேசுகிறார்கள் என்பதால் மட்டும். அது நமது தேசிய மொழிக்கு தகுதியான மொழியாகி விடாது. உலகின் மிக பழமையான 6 மொழிகளில் 2 மொழி நமது நாட்டில் தோன்றியது. தமிழ், சமிஸ்கிருதம் இரண்டுமே நமது நாட்டின் தேசிய மொழிகளாகும் தகுதியுடைய செம்மொழிகள். கனடா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் 2 தேசிய மொழிகள் இல்லையா. பெல்ஜியம், சைனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மூன்று தேசிய மொழிகள் இல்லையா. தமிழும் இந்தியாவின் ஒரு தேசிய மொழியாக ஏன்? ஆக கூடாது.
மைசூர்க்கு சென்ற என் நண்பரை பற்றி சொன்னேன் அல்லவா. அவர் அங்கு ஒரு கோவிலுக்கு சென்றார். கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை கையில் வெய்த்து கொண்டு அந்த தமிழரை பார்த்து. நீர் பேக்கா என்று கேட்டார். பலர் முன்னிலையில் அவ்வாறு கேட்டவுடன். அந்த நண்பர் முதலில் அதை அவமானமாக கருதினார். அருகில் இருந்த ஒரு அர்ச்சகர். அந்த தமிழர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு. கன்னட மொழியில் பேக்கு என்றால். வேணுமா என்று அர்த்தம் என்று சொன்னவுடன் என் நண்பர் சிரித்து விட்டார்.
உலகிலேயே அதிக மொழி வெறி உடையவர்கள் தமிழர்கள் என்று நினைப்போர் தமிழ் பேக்குகள்.

இப்படிக்கு காக்கா& பேக்கா கோ.

************
முகநூல் நண்பர் H V krishnaprasad எழுதி இருக்கும் இந்த கட்டூரையைப் படித்துப்பருங்கள் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் நமது மொழி உணர்வு.. வெறி இவற்றிற்கான வேறுபாட்டை நாம் உணரலாம். நமது தமிழின் சிறப்பு பற்றியும் உணரலாம். பாராட்டுக்கள் கிருஷ்ணப்பிரஷாத்.

விருப்பு வெறுப்பிறகு அப்பாற்பட்டு சொல்ல வேண்டுமானால் அன்றைக்கு நமது பாராளுமன்றத்தில் தமிழின் தொண்மையை உரைத்து தேசிய மொழி ஆகும் தகுதி ஒரு மொழிக்கு உண்டென்றால் அது நமது தமிழ் மொழிக்கு தான் உண்டு என்று யாரும் சொல்வதற்கு முன் முழங்கிய மேதை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் என்பதையும் இதை இந்திய வரலாறு தன்னகத்தே பதிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- முஹையத்தீன் பாட்ஷா

திங்கள், 21 செப்டம்பர், 2015

‪எலி‬, ‪பல்லி‬, ‪கரப்பான்‬ பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!


கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
1 எலி
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
2 கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
3 ஈ
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
வேறு சில வழிகள்
4 மூட்டைப்பூச்சி
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்துவிடும்
5 பல்லி
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
6 கொசுக்கள்
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசுவிரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கலாம் பற்றிய செய்திகள் சொல்கிறார் அவர் அண்ணன் முஹம்மது மீரான் லெப்பை


மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை இழந்த துயரம் ராமேஸ்வரத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த சின்னஞ்சிறிய தீவு, ஜூலை 27-ஆம் தேதியிலிருந்து கண்ணீரில்தான் மிதந்துகொண்டிருக்கிறது. அங்கு, மசூதித் தெருவில் இருக்கும் கலாமின் இல்லம் இன்னும் துக்கம்கப்பிய நிலையில்தான் இருக்கிறது. கலாமின் அபிமானிகள் நாடுமுழுவதிலுமிருந்து அவரது இல்லத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மனமொடிந்து போயிருக்கும் கலாமின் 98 வயது அண்ணன், முகமது மீரான் லெப்பை மரைக்காயர், கலாமின் நினைவாகவே இருக்கிறார். சுகர், பிரஷர் என்று எந்தக் கோளாறும் இல்லாமல், நல்ல தெளிவோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கும் அவர், மனரீதியாக பலமாக பாதிக்கப் பட்டிருக்கிறார். நம் வாசகர்களுக்காக அவரிடம் சில கேள்விகளை நாம் வைத்தோம். கேட்கும் திறன் குறைந்திருக்கும் மரைக்காயர் பதில்தர, அவரின் மகள் முனைவர் நசீமாவும் பேரன் சேக் சலீமும் உதவினார்கள்.

அய்யா எப்படி இருக்கிறீங்க?

ஏதோ இருக்கேன். ஒரே நாள்ல எல்லாத்தை யும் இழந்துட்டதுபோல இருக்கேன். எனக்கு 98 வயசாகுது. கலாம் என்னைவிட 14 வயசு சின்னவர். அவருக்கு இப்படி ஆகியிருக்கக்கூடாது. ரொம்ப நல்லவர். கடின உழைப்பாளி. ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். இந்தியாவே பெருமைப்படும்படி இருந்தார். ஒரு மகான்போல வாழ்ந்தார். அவரைப் பறிகொடுத்துட்டு நிக்கிறோம்.

உங்களைப் பத்தி சொல்லுங்கய்யா?

பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல. நான் 5 ஆம் வகுப்புவரைதான் படிச்சேன். கலாம் படிப்பில் ரொம்ப ஆர்வமா இருந்ததால், அவனைப் படிக்கவச்சோம். மரக்கலம் (படகு) விடுறதுதான் எங்க குடும்பத் தொழில். நான் ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ’பாசஞ்சர் போட் ’விட்டுக்கிட்டி ருந்தேன். 64-ஆம் வருஷ புயலில் தனுஷ்கோடி உட்பட எல்லாம் போச்சு. அப்ப பாம்பன் பாலத்தில் ஓடிய ஒரு ரயில் கடலோட போச்சு. இந்தப் பகுதி மக்களோட தலையெழுத்தையே அந்தப் புயல் மாத்திடிச்சி. புயலுக்கு அப்புறம், தலைமன்னாருக்கு படகு விடமுடியலை. அதனால் படகுகளை மீன்பிடி படகா மாத்தி, வாடகைக்கு விட்டேன். தோப்புத் தொறவை முழுசா பார்த்துக் கிட்டிருந்தேன். பெரிய தென்னந்தோப்பு இருக்கு. அதில் ஓரளவு வருமானம். இதுக்கிடையில் ராமேஸ்வரம் பஞ்சாயத்துத் தலைவரா தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். முடிஞ்சதை ஊருக்கு செஞ்சேன். வயசான பிறகு ஓஞ்சுபோய் உட்கார்ந்துட்டேன். அதுக்குப் பிறகு குடும்பத்தை கலாம் கையில் எடுத்துக் கிட்டான்.

உங்க குடும்பத்தைப் பத்தி?

என் மனைவி பேரு அகமது கனிஅம்மாள். மவுத் (இறப்பு) ஆயிட்டார். எங்களுக்கு அஞ்சு பொண்ணுங்க. ரெண்டு மகன்கள். அதில் என் மூத்த மகன் சாகுல் ஹமீதும் மகள் தங்கராணியும்கூட மவுத் ஆயிட்டாங்க. மத்தவங்க இங்க ராமேஸ்வரத்திலேயே இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு தொழிலை வச்சி பொழப்பை நடத்தறாங்க. பேரப் பிள்ளைக, கொள்ளுப்பேரப் பிள்ளை களோட பெரிய குடும்பமா வாழ்ந்துக் கிட்டிருக்கோம். என்னை என் மகள் நசீமாவும் மகன் ஜெய்னுலாபுதீனும் நல்லபடியா பார்த்துக்கறாங்க.

கலாம் சின்னவயசில் எப்படி?

கலாம் என்னை எப்பவும் காக்கான்னு கூப்பிடுவார். பெரியவங் களை இப்படிக் கூப்பிடுறது இந்தவூர் பழக்கம். என் மனைவி அகமது கனியை மச்சின்னு கூப்பிடுவார். தன் அண்ணிமேல் ரொம்ப மரியாதை யாவும் அன்பாவும் இருப்பார் கலாம். கலாமுக்கு அப்ப இருட்டுன்னா பயம். கொல்லைப்புறம் போகனும்னாக்கூட, வீட்டில் யாரையாவது துணைக்கு அழைச்சிக்கிட்டுப் போவார்.

பூரணம் வச்ச போலி, பயித்தம் லட்டுன்னா கலாமுக்கு உசுரு. வீட்டில் எங்க அம்மா லட்டு பண்ணி ஏனத் தில் போட்டு பரணியில் வச்சிருப் பாங்க. எங்க அம்மா தூங்கிக்கிட்டி ருந்தாக்கூட ஸ்டூலைப் போட்டு ஏறி, லட்டை எடுத்து ஆசையா சாப்பிடு வார். எங்க அம்மா எழுந்ததும், உங்கிட்ட சொல்லாம லட்டை எடுத்துச் சாப்பிட்டுட்டேம்மான்னு சொல்லிடுவார். பொய் பேசமாட்டார். படிப்பில் கெட்டிக்காரர். கொஞ்சம் குறும்புக்காரர். சும்மா இருக்கமாட்டார். துறுதுறுன்னு இருப்பார். படிக்கும்போதே பிறருக்கு உபகாரங்கள் பண்ணுவார். ஒரு தடவை படிச்சிக்கிட்டிருந்த கலாமைக் காணலை. பார்த்தா, பக்கத்தில் இருந்தவங்க சொன்னாங்கன்னு, டீக்கடைக்கு போய் அவங்களுக்கு தேத்தண்ணி வாங்கிட்டு வந்துக்கிட் டிருந்தார். வீட்டுக்கு வந்ததும், இதான் படிக்கிற லட்சணமான்னு முதுகில வச்சேன். இப்படி அவர் அருமை தெரியாம நிறையதடவை அடிச்சிருக் கேன். வாத்தியார்கள்ட்ட அவருக்கு பக்தி அதிகம்.

சின்ன வயசிலேயே, பைலட் ஆவப் போறேன், ஏரோப்பிளேன்ல பறக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருப் பார். அப்பவே வித்தியாசமா இருந் தார். எங்க ஊர்ல கலாம்தான் முதல் பட்டதாரி.

உங்களுக்கும் கலாமுக்கும் கிடைச்ச அப்பா- அம்மாவைப் பத்தி சொல்லுங்க?

ரொம்ப அருமையானவங்க. நாங்க எங்க அப்பா- அம்மாமேல பய பக்தியா இருப்போம். அப்பா ஜெய்னுலாபுதீன் பாக்க, ஆள் நெடுநெடுன்னு சிவப்பா, கம்பீரமா இருப்பார். தர்மசீலர். அதேசமயம் கொஞ்சம் கோபக்காரர். தப்பு செஞ்சா எங்களை பின்னி எடுத்துடு வார். ஊர்த் தலைவரா இருந்தார். மும்மத ஜனங்களும் அவரை ஊர்த் தலைவரா ஏத்துக்கிட்டாங்க. எங்க ஊர்ல அப்ப கோர்ட் கிடையாது. அவர்தான் கோர்ட். குடும்பப் பிரச்சினையில் இருந்து வாய்க்கா வரப்புப் பிரச்சினை வரை, அவர் தீர்த்துவச்சிடுவார். பாசஞ்சர் படகும் அவருக்கு ஓடுச்சு. ஒருதரம், ராமேஸ்வரம் கோயில் உற்சவம். படகில் வந்துக்கிட்டிருந்தப்ப, திடீர்ன்னு படகு கவிழ்ந்துபோய், சாமி சிலைகள் கடல்ல விழுந்துடுச்சி. அப்ப எங்க அப்பாவும் அவர் ஆளுங்களும்தான் கடல்ல குதிச்சி, சாமி சிலைகளை தேடியெடுத்துக் கொடுத்தாங்க. உடனே கோயில் அதிகாரிகள், இனி உங்க படகில்தான் சாமி வரும்ன்னு சொல்லிட்டாங்க. அதிலிருந்து கோயில் உற்சவம் எங்க அப்பா படகில் நடக்க ஆரம்பிச்சிது.

கலாம் ஜனாதிபதி ஆவார் என அதற்கு முன்பு நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?

இல்லை. ஆனா ரொம்பப் பெரிய ஆளா வருவார்ன்னு மட்டும் நெனைச்சேன். ஜனாதிபதிக்கு வாஜ்பாய் நிக்கச் சொன்னப்ப, ரெண்டுமணி நேரம் யோசிக்க டைம் வாங்கினார். அப்ப என்கிட்டயும் போன் பண்ணி, இதப் போல வாஜ்பாய் சொல்றார். ஜனாதிபதிக்கு நிக்கலாமானு கேட்டார். சந்தோசமா இருந்துச்சு. உன்னைத்தேடி பொறுப்பு வரும்போது தைரியமா ஏத்துக்க. அதைவச்சி நாட்டுக்கு என்ன பண்ணனுமோ பண்ணு. நீ எங்க போனாலும் அங்க நீ உன்னை நிரூபின்னு வாழ்த்தினேன்.

கலாமுக்குத் திருமணம் பண்ணிவைக்க நீங்கள் யாரும் முயற்சி எடுக்கவில்லையா?

எவ்வளவோ முயற்சி எடுத்தோம். மதுரை, அழகன்குளம் எல்லாம் போய் கலாமுக்குப் பெண் பார்த்தோம். அதோட கலாம் நிறைய படிச்சிருந்ததால, நிறையபேர் பெண் கொடுக்க முன்வந்தாங்க. சில பெண்களை எங்களுக்குப் பிடிச்சிப்போய், நீ ஒருதரம் நேர்லவந்து பார்த்துட்டுப் போய்யான்னு கலாமைக் கூப்பிட்டிருக்கோம். அதோ வர்றேன் இதோ வர்றேன்னு சொல்வார். வரவேமாட்டார். இப்படியே நாளோடிப்போச்சு. கடைசியா என் தம்பி ஜெய்னுலாபுதீனுக்கும் ரெண்டு தங்கை களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நிக்காஹ் பண்ணிவச்சோம். அப்பவும் கலாமுக்கும் சேர்த்து நடத்த திட்டம்போட்டோம். ஒண்ணும் நடக்கலை. அந்தசமயம் ஜப்பான் போயிருந்த கலாம், கல்யாணப் பரிசா ஜப்பான் புடவைகளை வாங்கிவந்திருந்தார்.

கலாம் மாதிரி உங்க வீட்டில் எல்லாருமே சைவம்தானா? அவருக்குப் பிடிச்ச உணவு என்ன?

நாங்க எல்லாம் அசைவம் சாப்பிடுவோம். கலாமும் எங்க மகள் நசீமாவும் சைவம். அவருக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், பொறியல் இதுதான் பிடிக்கும். இதைத்தான் அவர் விரும்பிச் சாப்பிடுவார். அவரோட வர்ற ஆளுங்கள்ல அசைவம் சாப்பிடறவங்க இருந்தா, அவங்களுக்குத் தனியா அசைவச் சாப்பாடு ரெடி பண்ணச்சொல்வேன். அவர் இங்க வரும்போதேல்லாம் வீட்டுக்கு பக்ரீத், ரம்ஜான் வந்தமாதிரி இருக்கும். எங்க சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா கூடுவாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் இங்க சைவச் சாப்பாடுதான்.

கலாம் உங்களுக்கு எதாவது வாங்கிட்டு வருவாரா?

சால்வை, துண்டு, ட்ரெஸ்ன்னு பலதும் வாங்கிட்டு வருவார். பழங்கள் நிறைய கொண்டுவந்து சாப்பிடச் சொல்வார். குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லெட்டுன்னு அள்ளிக் கிட்டு வருவார். எல்லாம் இப்ப கனவா ஆய்டிச்சி.

கடைசியாக எப்போது ராமேஸ்வரம் வந்தார்? அப்போது என்ன சொன் னார்?
(பேரன் சேக் சலீமிடம் தேதி, நேரத்தைக் கேட்டுக் கொண்டு)

பிப்ரவரி 3-ஆம் தேதி மதுரைக்குப் போய்ட்டு காலைல பதினொன்னரை மணிக்கு கலாம் வந்தார். அன்பா கட்டித்தழுவி எனக்கு ஒரு பெரிய சால்வை போட் டார். ரெண்டு வருசத்தில் உங்களுக்கு நூறுவயசு ஆகுது. அதை நான் சிறப்பா கொண்டாட னும்ன்னு ஆசைப்படறேன். என் ஆசை நிறைவேற துவா’ பண்ணுங்கன்னு சொன்னார். கலாமை பக்கத்தில் உட்காரவச்சி, நான் துவா செஞ்சேன். ரொம்ப சந்தோசமா இருந் தார். நங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டே என் அறை யில் உட்கார்ந்து சாப்பிட் டோம். அப்புறம் வந்த அத்தனை உறவுக்காரங் களையும் அழைத்து நலம் விசாரிச்சார். பிள்ளை கள்ட்ட படிப்பைப் பத்தி விசாரிச்சார். என் மகன் ஜெய்னுலாபுதீனையும் மகள் நசீமாவையும் கூப்பிட்டு, காக்காவை நல்லா பாத்துக் கங்க. அவர் ஆரோக்கியமா நடமாடறதை பாக்குறப்ப சந்தோசமா இருக்கு. அவரை தினமும் வாக்கிங் கூட்டிட்டுப் போங்க. செரிக்கிற மாதிரியான உணவைக் கொடுங்க. நீங்க விரும்பறதைக் கொடுக்காம, அவர் விரும்பறதைக் கொடுங்கன்னு அக்கறை யாச் சொன்னார். சாயந் தரம் நாலரைக்குப் புறப்பட்டுட்டார். அதான் கடைசி சந்திப்புன்னு தெரியாமப் போய்டுச்சி. என் நூறாவது வயசைக் கொண்டாட ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாத ஆசையா ஆய்டிச்சி. மவுத்துக்கு மொதநாள் போன்ல அன்பா என் மகன்கிட்டயும் மகள்கிட்டவும், காக்கா என்ன சாப்பிட்டார். எப்படி இருக்கார். இன்னைக்கு வீட்ல என்ன மெனுன்னு விசாரிச்சார். கூடிய சீக்கிரம் ராமேஸ்வரம் வருவேன்னு சொன்னார். இப்படி உயிரில்லாம வருவார்ன்னு நினைச்சிக்கூட பார்க்கலை. (அவரது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்).

கலாம், இந்த ராமேஸ்வரத்துக்கு எதையாவது செய்திருக்கிறாரா?

நூறுவருட பாம்பன் பாலத்தைப் புதுப்பிச்சிக் கொடுத்தார். 25 லட்சத்தில் லைப்ரரி கொண்டு வந்தார். மீனவக் குடும்பங்களுக்கு சோலார் லைட்டுகளை ஏற்பாடுசெஞ்சார். இப்படி முடிஞ் சதை செஞ்சிருக்கார்.

கலாம் நினைவிடம் பற்றி அதிகாரிகள் உங்ககிட்ட பேசினாங்களா?

இல்லை. (ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் கலாமை அடக்கம் செஞ்ச இடம் ஒரு ஏக்கர் 63 சென்ட் பரப்பளவு கொண்டது) அதிகாரிங்க அடக்க ஸ்தலத்தை அளந்துட்டுப் போயிருக்காங்க. எங்க கிட்ட நினைவிடத்தை எப்படி கட்ட போறாங் கன்னு யாரும் சொல்லலை. 40 நாள் துக்கம் கழிச்சிதான் இதுபத்திக் கேக்கப்போறோம். அடக்கஸ்தலம் வெறும் சமாதி மேடையா இருக்கக்கூடாது. அங்க மாணவர்களுக்குப் பயனுள் ளதை உருவாக்கனும். (அங்கு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மையம் அமைக்கனும் என்பது எங்க எல்லோரின் விருப்பமாகும் என்றார் பேரன் சேக் சலீம்) கலாமுக்கு மாணவர்கள்மேல் பிரியம் ஜாஸ்தி. அதனால் இறந்த பிறகும் கலாம், மாணவர்களுக்கு மத்தியிலேயே இருக்கனும்.

தன்னம்பிக்கை நாயகரான கலாம் கலங்கி நீங்கள் பார்த்ததுண்டா?

எங்க அம்மா, வாப்பா மவுத்தில் அவர் கதறி அழுததைப் பார்த்தோம். எங்க அப்பா ஜெய்னு லாபுதீன், உடம்பு சரியில்லாம இருந்தார். நாட்டு வைத்தியம்தான் பார்த்துக்குவார். ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டார். 72 வாக்கில், ஒருநாள் அவர் மதிய சாப்பாடு சாப்பிடாம படுத்துட்டார். நாங்க சொல்லியும் அவர் சாப்பிடலை. அப்ப வைத்தியர் அவர் நாடியைப் பிடிச்சிப் பார்த்துவிட்டு, பல்ஸ் ரொம்ப வீக்கா ஆய்டிச்சின்னு சொன்னார். டாக்டர்கள் வந்து பார்த்த கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சி. உடனே திருவனந்தபுரத்தில் வேலை பார்த்துக்கிட்டிருந்த கலாமுக்கு டரங்கால் புக் பண்ணித் தகவல் கொடுத்தோம். ஊருக்குவந்த கலாம், "வாப்பா'ன்டு கதறி அழுதுக்கிட்டே வந்தார். ரொம்பக் கலங்கிப் போயிட்டார். எங்கம்மா அடுத்த ஒரு வருசத்தில் ஒரு அதிகாலையில் மவுத் ஆனாங்க. கலாமுக்குத் தகவல் கொடுத்தோம். மிட்நைட் 12 மணிக்கு வந்தார். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச் சத்தில் காத்திருந்தோம். அப்பவும் அழுதுபுரண் டார். கொஞ்ச நேரத்தில் அடக்கம் பண்ணியாச்சு. இவங்களோட கடைசி நேரத்தில் பக்கத்தில் இருக்க முடியலையேங்கிற ஏக்கம் கலாமுக்கு கடைசிவரை இருந்தது.

கலாம் என்றால்...?

தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு, நேர்மை, வெற்றி.

சனி, 19 செப்டம்பர், 2015

சுத்தமான தங்கமா..?


முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள்உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.


யார் வழங்குகிறார்கள்?


இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.


தர பரிசோதனை!


தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.
இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.


முத்திரையில் ஏமாற்றினால்..?


நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.


எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.


ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.