சனி, 26 செப்டம்பர், 2015

இந்தியால் ஏன் இரண்டு தேசியமொழி கூடாது! தமிழும் தேசிய மொழியே.




இன்றும் தமிழை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது போன்றவர்களை தமிழ் பைத்தியங்கள் என்று நமது நாட்டில் பலர் கேலி செய்கிறார்கள். என்னை பொறுத்தவரை. தமிழ் தேசிய மொழியாக வேண்டும் என்று சொல்வது எவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட உரிமையோ. அதே போல் அவ்வாறு சொல்பவர்களை பிறர் விமர்சிப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த மொழி வெறி என்பது. என்னமோ தமிழகத்தில் மட்டும் இருப்பதை போல் பலர் சொல்வது தான் சிறந்த நகைச்சுவை.
தாவுத் இப்ராஹிம் குண்டு வெய்த்து 200 பேரை கொன்றான் என்றால். கலவரங்கள் மூலம் இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்ற அதி பயங்கரவாதி பால் தாக்ரே. அவன் இறந்த பொழுது. அரசாங்க மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் இறந்தவுடன் அரசாங்க விடுமுறை விடப்பட்டதை விமர்சித்து ஒரு பெண் மருத்துவர் பதிவு போட்டு இருந்தார். அவ்வாறு பதிவு போட்ட அந்த பெண் மருத்துவரின் வீடு மருத்துவமனை மட்டும் அல்லாமல். அந்த பதிவுக்கு லைக் போட்ட இருவரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கைது செய்யபட்டார்கள். தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. இரவோடு இரவாக பத்தாயிரம் வெளி மாநிலத்தவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு மும்பையை விட்டு ஓடியதற்கு காரணம் என்ன? மராத்திய வெறி.
மா சுப்ரமண்யம் சென்னை மேயராக இருந்த பொழுது. கடை பலகைகளின் பெயர்கள். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கூடுதலாக தமிழில் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒரு கடையில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால். அந்த கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று ஒரு சட்டம் போட்டார். எனக்கு மா சுப்ரமண்யம் பிடித்த அரசியல்வாதி அல்ல. திமுக எனக்கு பிடித்த கட்சியல்ல என்றாலும். மா சுப்ரமண்யத்தின் இந்த சட்டம் பாராட்டுதலுக்கு உரியதே. ஆனால் இதை தமிழ் பாசிசம் என்று சிலர் விமர்சித்தார்கள்.
சென்னையில் கன்னட, தெலுங்கு, மலையாள பெயர்களில் மட்டுமே உள்ள பலகைகள் சில நமது கண்ணில் படுகிறது. மைசூரில் தமிழ் பலகையோடு மட்டும் ஒரு கடை இருந்தால். அந்த கடையின் நிலமை என்ன? ஆகும்.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மைசூர் சென்றார். அவருக்கு கன்னடம் தெரியாது. ஒரு மளிகை கடையில் அவர் சாமான்களை தமிழில் கேட்ட பொழுது அந்த கடைகாரர். கன்னடத்தில் ஏதோ அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டார். மறுநாள். அந்த தமிழர். கன்னட மொழி தெரிந்த ஒரு நண்பருடன். அதே கடைக்கு சென்றார். அப்பொழுது. நேற்று கோபமாக பேசிய அதே கடைகாரர். மிக சிரித்த முகத்துடன் தமிழில் வாங்க, வணக்கம். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதை பார்த்து மிக ஆச்சர்யம் அடைந்த என் நண்பர். நேற்று ஏன்? என்னிடம் அவ்ளவு கோபமாக பேசினீர்கள் என்று கேட்க்க. அந்த கடைகாரர். நானும் தமிழன் தாங்க. நான் கோபத்தினால் அவ்வாறு பேசவில்லை. பயத்தினால் தான் பேசினேன். நீங்கள் என் கடைக்கு நேற்று வந்த பொழுது. கன்னட மொழி இயக்கங்கள், வட்டாள் நாகராஜ் போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளின் அடிபொடிகள். உங்கள் அருகில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். நான் தமிழில் பேசியிருந்தால். அந்த வெறியர்கள் என்னை மட்டுமல்ல. என் கடையையே அடித்து நாசம் செய்து இருப்பார்கள் என்று மரண பீதியோடு அவர் சொன்னார்.
அது மட்டுமா. இங்கு உள்ள தனி மனிதனும் சரி. நமது தமிழ் சினிமா நடிகர்களும் சரி. உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டால். ப்ருச்லீ, ஜெட்லி, ஜாக்கி ஜான் என்று நாம் யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். அவ்வாறு சொன்னால். நம்மை அடிக்க மாட்டார்கள். ஆனால்? கன்னட நடிகர் சாய்குமாரை ஒருமுறை. கன்னட வெறி மீடியாக்கள் பேட்டி எடுத்த பொழுது உங்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் என்று கேட்டதற்கு. எனக்கு சிவாஜி கணேசனை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். இதுல என்னங்க தப்பு இருக்கு. உடனே மைக் பிடிச்சி நின்னுண்டு இருந்த சில பயலுங்க. நீ எப்டி சிவாஜி என்கிற தமிழன் பெயரை சொல்லலாம். ராஜ்குமாரை தான் பிடிக்கும்னு சொல்லுனு அந்த மைக்காலயே அவரை அடி, அடினு அடிச்சாங்க. அந்த சாய்குமார் தான். இப்பொழுது வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் இன்று, நேற்று, நாளை படத்தில் டெரர் வில்லனாக நடித்தவர்.
இதற்க்கு முன் பிரபு தேவா கன்னடத்தில் ஒரு படம் எடுத்த பொழுது. அதில் 1,2 தமிழ் வார்த்தைகள் இருந்தது என்னும் ஒரே காரணத்திற்க்காக. அந்த படத்துக்கு எதிராக போராடிய போராளி குடும்பம் தான் ராஜ்குமார் குடும்பம். வீரப்பன் ராஜ்குமாரை தூக்கினது தப்பே இல்லை.
அணைத்து மொழிகளிலுமே. நல்லவர்கள், பறந்த மனப்பான்மை உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. கன்னட தேசத்தில் கூட. இப்பொழுது வெறி தனம் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால்? தமிழ்நாட்டில் தான்
இந்தியாவிலேயே அதிக மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது சிறு புள்ளை தனமான விஷயம். எவ்ளவோ பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கிறார்கள். ரயில், பஸ் முதலியவற்றில் பயணம் செய்யும் பொழுது. அவர்கள் மொழி பாடல்களை கொரியன் செட்டில் அலற விட்டு அதை கேட்கிறார்கள். இந்த தமிழ் நாட்டில் தமிழர்கள், தமிழர்கள் அல்லாதவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரம். ஆனால்? வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு அது இல்லை. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து. இன்றுவரை. 2,3 பேரை தவிர. நம்மை ஆண்ட அணைத்து முதல்வர்களுமே. தமிழ் அல்லாத வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள்.
தமிழர்கள் அல்லாதோர் நமது மாநிலத்தை ஆளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்றும் சைமான் குரூப் அல்ல. நல்லவர்கள். பறந்த மனப்பான்மை உடையவர்கள் எந்த மொழியினராக இருந்தாலும். அத்தகைய ஒரு தலைவன், தலைவியின் ஆட்சி தான். அடுத்து தமிழகத்துக்கு தேவை.

சரி. தேசிய மொழி சமாசாரத்துக்கு நாம் வருவோம்.
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே. அதனால் மற்ற மொழிகளை விட தமிழுக்கே தேசிய மொழியாகும் அணைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் வெடித்தவர். மராத்தியரான அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவரது சிலைக்கு செருப்பு மாலை போடாத ஆதிக்க ஜாதி கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். நமது நாட்டிற்கு தேசிய ஜாதி, தேசிய மதம் என்று இல்லாத பொழுது. தேசிய மொழி என்று ஒன்று ஏன்? இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தேசிய சின்னங்களாக இருப்பவை. பழமை, பாரம்பர்யத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். மயிலை விட நமது நாட்டில் காக்கா அதிகம். ஏன்? நமது நாட்டின் தேசிய பறவையாக காக்கா இல்லை. நமது நாட்டில் ஹிந்தியை அதிக மக்கள் பேசுகிறார்கள் என்பதால் மட்டும். அது நமது தேசிய மொழிக்கு தகுதியான மொழியாகி விடாது. உலகின் மிக பழமையான 6 மொழிகளில் 2 மொழி நமது நாட்டில் தோன்றியது. தமிழ், சமிஸ்கிருதம் இரண்டுமே நமது நாட்டின் தேசிய மொழிகளாகும் தகுதியுடைய செம்மொழிகள். கனடா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் 2 தேசிய மொழிகள் இல்லையா. பெல்ஜியம், சைனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மூன்று தேசிய மொழிகள் இல்லையா. தமிழும் இந்தியாவின் ஒரு தேசிய மொழியாக ஏன்? ஆக கூடாது.
மைசூர்க்கு சென்ற என் நண்பரை பற்றி சொன்னேன் அல்லவா. அவர் அங்கு ஒரு கோவிலுக்கு சென்றார். கோவில் அர்ச்சகர் பிரசாதத்தை கையில் வெய்த்து கொண்டு அந்த தமிழரை பார்த்து. நீர் பேக்கா என்று கேட்டார். பலர் முன்னிலையில் அவ்வாறு கேட்டவுடன். அந்த நண்பர் முதலில் அதை அவமானமாக கருதினார். அருகில் இருந்த ஒரு அர்ச்சகர். அந்த தமிழர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு. கன்னட மொழியில் பேக்கு என்றால். வேணுமா என்று அர்த்தம் என்று சொன்னவுடன் என் நண்பர் சிரித்து விட்டார்.
உலகிலேயே அதிக மொழி வெறி உடையவர்கள் தமிழர்கள் என்று நினைப்போர் தமிழ் பேக்குகள்.

இப்படிக்கு காக்கா& பேக்கா கோ.

************
முகநூல் நண்பர் H V krishnaprasad எழுதி இருக்கும் இந்த கட்டூரையைப் படித்துப்பருங்கள் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலம் நமது மொழி உணர்வு.. வெறி இவற்றிற்கான வேறுபாட்டை நாம் உணரலாம். நமது தமிழின் சிறப்பு பற்றியும் உணரலாம். பாராட்டுக்கள் கிருஷ்ணப்பிரஷாத்.

விருப்பு வெறுப்பிறகு அப்பாற்பட்டு சொல்ல வேண்டுமானால் அன்றைக்கு நமது பாராளுமன்றத்தில் தமிழின் தொண்மையை உரைத்து தேசிய மொழி ஆகும் தகுதி ஒரு மொழிக்கு உண்டென்றால் அது நமது தமிழ் மொழிக்கு தான் உண்டு என்று யாரும் சொல்வதற்கு முன் முழங்கிய மேதை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் என்பதையும் இதை இந்திய வரலாறு தன்னகத்தே பதிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

- முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக