வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஒளரங்கசீப்பின் மாண்புகள்



ஒரு வீரன் போர்க்களத்தில் கொல்லப்படுகிறான் அவன் இந்துமதத்தின் ஒரு உட்பிரிவை சார்ந்தவன். எரிமேடையில் விறகுகளுக்கு நடுவில் அவன் கிடத்தப்படுகிறான். சிதை மூட்டப்படுகிறது நெருப்பு திகு திகுவென எரியத்தொடங்குகிறது.. 

அவனது மனைவியை நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த ஊர் கும்மியடிக்கிறது. அவள் கதறி அழுகிறாள் அவர்கள் பிடியிலிருந்து திமுறிப்பார்க்கிறாள்.. இழுத்துப்பார்க்கிறாள் ஆனால் தப்பமுடியவில்லை.

ஊரார் சிலர் அவளை சிதையருகே இழுத்துபோய்விட்டனர் இதோ இன்னும் சில விநாடிகளில் அவள் கணவனோடு சேர்ந்து எரியப்போகிறாள்

தனது படையில் யார் இறந்தாலும் நேரில் சென்று மரியாதை செய்வதை முடிந்தவரை கடைபிடித்து வந்த முகலாய பேரரசர் ஒளரங்கசீப் தனது இறுதி மரியாதையை செலுத்த அங்கும் வருகிறார்...

ஊராரின் செயலால் அதிர்சியடைந்த அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெண்ணை தீயில் தள்ளுவதிலிருந்து தடுக்கமுயல்கிறார்

மாமன்னர் ஒளரங்கசீப் தங்கள் மதத்தின் நம்பிக்கையில் தலையிடுவதாக ஊர்க்குடுமிகள் ஓப்பாரிவைக்கிறார்கள்

ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத பேரரசர் ஒளரங்கசீப் உறுதியாக இருந்து அந்த வீரனது மனைவியை உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றிவிடுகிறார்

அதோடு நிற்க்காமல் தனது ஆளுகைக்கு உட்பட்ட எந்தப்பகுதியிலும் உடன்கட்டை ஏறும் இந்த கொடூரப் பழக்கம் இருக்கக்கூடாது என்று தடை உத்தரவும் போட்டுவிட்டு போகிறார்.

- ஒடியன்

முகலாய மன்னர்களிலேயே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்... எப்போதும் வெள்ளை ஆடையை மட்டுமே அணிபவர்... அதில் எந்தவிதமான பட்டினால் ஆன வேலைபடுகளோ இருக்காது... ஒரே ஒரு முத்துமாலையை தவிர வேறு எந்த நகைகளையும் அணிகலன்களையும் அணியாதவர்... மிக குறைவாகவே உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்...

அரசரை காணவேண்டுமானால் மக்கள் அரசர் காட்சி தரும் தர்பார் மண்டபத்தின் ஜன்னல் அருகே நாள்கணக்காக காத்திருக்கும் வழிமுறை இருந்தது, அதை முற்றிலும் தளர்த்தி தன்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம் என்று பிரகடனம் செய்தவர்...

தான் மரணித்துவிட்டால் தனக்கு இறுதி அடக்கத்திற்கான செலவை தான் தொப்பி செய்து விற்ற காசில் தான் செய்யவேண்டும் என்றும், தன் அடக்கத்தலத்தின் மீது எந்தவித கட்டிடமோ அலங்காரமோ செய்யகூடாது என்றும் உறுதியாக அறிவித்து சென்றவர்....

#ஒளரங்கசீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக