திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரிகளைக் குறைத்து மக்களை வாழ்வித்த மன்னர் அவ்ரங்கஸீப்!

ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வரும் முன்னர் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அவற்றைச் சொன்ன நினைவே இல்லாதது போல் நடந்துகொள்வதும் பல முறை மக்கள் பட்டு அனுபவிப்பதுதான்....
அவ்ரங்கஸீப்(ரஹ்…) அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்த உடனே ஏற்கனவே பலகாலமாக இருந்து வந்த சுமார் 80வகை வரிகளைத் தாமாகவே நீக்கி ஆச்சர்யப்படுத்தியவர்.
அவை ஆறுவகைப்படும்.அவற்றுள் இந்து சமய மக்களின்மீது விதிக்கப்பட்ட வரிகள் குறிப்பிடத் தக்க ஒருவகை. (ஆதாரம்:அறிஞர்கள் காஃபீகான் ,மனுச்சி& மோர்லாந்த் மற்றும் Sarkar in Mugal Administration,ref.from “Mirat-I Alam”)
அவர் நீக்கிய வரிகளின் நீண்ட பட்டியலில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சில :-
1. கங்கையில் நீராடும் யாத்ரீகர் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட ஆறேகால் ரூ.வரி;
2.எரிக்கப்பட்ட சடலங்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க விதிக்கப்பட்ட வரி;
3.வட்டி இல்லாக் கடன்கள் மீது விதிக்கப்பட்ட வரி (அவர் காலத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய கடன்களுக்கு வட்டி இல்லை );
4. கீழ்ஜாதி இந்து விதவையைத் திருமணம் செய்துகொண்டால் செலுத்த வேண்டிய வரி.
5.தீபாவளி,பரா அத் இரவுகளில் செய்யப்பட்ட விளக்கு அலங்கார வரி .
6.முஹ்தர்ஃபா’ எனும் தலை வரி; 7.பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கான வரி.
8.கைத்தறி துணிகள் மீதான வரி;
9.தாசில்தார் வரி…. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக