திங்கள், 23 பிப்ரவரி, 2015

இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்திக் காட்டிய மன்னர் அவ்ரங்கஸீப்!








ஆங்கஸ் மேடிஸன் என்னும் பொருளாதார வரலாற்று அறிஞர் அண்மைக் காலத்தில் எழுதிய நூல்கள் மற்றும் ஆய்வேடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட முந்திய பதிவிற்கு நட்புநூல் சகோதரர்கள் காட்டிய ஆர்வம் அசாதாரணமானது! அல்ஹம்துலில்லாஹ்.
அவர் காலத்திற்கு முன்னரே எழுதப்பட்ட“History of India as told by its own Historians vol-2” (எலியட் & டாவ்ஸன்) என்ற நூலில் இருந்து:- அவ்ரங்கஸீப் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு,இங்கிலாந்தின் நாணய மதிப்பைவிட அதிகமாக இருந்தது.
அதாவது 01பவுனுக்கு 08 இந்திய ரூபாய். (பவுன்,ஷில்லிங்,பென்ஸ் என்பன இங்கிலாந்து நாணய முறை)
[பெர்னியர்,தேவ்னோ, பக்த்வார்கான், மனுச்சி, ரமூசியோ ஆகிய வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மற்றும் தஸ்தூர் அமல்(அரசுக் கையேடு) ஆகியவற்றின் அடிப்படையில்] அவ்ரங்கஸீப்பின் ஆட்சிக்கால ஆண்டு வருவாய் 20,32,80,000 முதல் 34,84,00,000 கோடி ரூ. வரை உயர்ந்தே வந்துள்ளது.
“Land Revenue Administration under the Mughals”- என்ற நூலில் மாநிலவாரியான வருவாய் விவரங்கள் 164 முதல் 171வரை உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
நிலவரி வருவாயும் ஏற்றுமதி-இறக்குமதி வருவாயும் அரசின் முதன்மையான வருவாய்களாக இருந்துள்ளன.
----------------------------------------------------------
படத்தில்: அவர் காலத்து தங்க,வெள்ளி,செப்பு நாணயங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக