ஞாயிறு, 17 ஜூலை, 2011

"இரண்டும் (அல்லாஹ், முஹம்மது) ஒன்றல்ல; என்றாலும் வேறல்ல"

அஸ்ஸலாமு அலைக்கும்!

சகோதரர்களே!
சமீப காலமாக "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு"என்று பி.ஜே. கூறி வருகிறார். அவர், முன் வைக்கும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் பல உதாரணங்களை சொல்கிறார். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் அவர் சொன்னது உண்மை என்று தான் தோன்றுகிறது.
  • (விசுவாசிகளே! போர் புரிந்த) அதுசமயம் நீங்கள்அவர்களை வெட்டிவிடவில்லை; எனினும், அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான்.விசுவாசிகளை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனும், மிக்க அறிந்தோனுமாயிருக்கின்றான். (குர்-ஆன் 8:17)
  • (நபியே!) நிச்சயமாக எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தத்தம் செய்து உமக்கு உதவி புரிவதாக உம்மிடம் கை கொடுத்து) உம்மிடம் வாக்குறுதி செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது (உம்முடைய கையன்று;) அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகின்றனரோ, அவன் தனக்குக் கேடாகவே (அதனை) முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூர்த்தியாக்கி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான். (குர்-ஆன் 48:10)
கேள்வி - பதில்:
கேள்வி: போர் புரிந்த சமயம் எதிரிகளை வெட்டியது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: விரோதிகளின் மீது மண்ணை எறிந்தது யார்?
பதில்: அல்லாஹ்
கேள்வி: சகாபாக்கள் யாரிடம் வாக்குறுதி செய்தார்கள்?
பதில்: அல்லாஹ்விடம்
கேள்வி: சகாபாக்களின் கை மீது யாருடைய கை இருந்தது?
பதில்: அல்லாஹ்வின் கை

இதுபோன்று ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததை தான் செய்ததாகவும், ரசூல் (ஸல்) அவர்களிடம் வாக்குறுதி செய்தவர்கள் தன்னிடம் செய்ததாகவும், அவர்கள் கை மீது தன்னுடைய கை இருப்பதாகவும் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தெளிவாக சொல்லிக் காட்டுகிறான். இதையெல்லாம் அல்லாஹ் செய்தான் என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் எங்கே சென்றார்கள்? இல்லை, இல்லை அதனை செய்தது கண்மணி நாயகம் தான் என்று வாதிட்டால் அல்லாஹ் சொன்னது பொய்யா? குர்-ஆனுடைய வசனத்திற்கு வெளிப்படையான கருத்தை தவிர வேறு மறைமுக கருத்து எதுவும் இல்லை என்று பி.ஜே. சொல்லியது நினைவிருக்கலாம். இதையெல்லாம் ஆய்வு செய்து பார்க்கும்போது "அல்லாஹ்விற்கு உருவம் உண்டு" என்று பி.ஜே. ஆணி அடிப்பது போல அடித்து சொல்வது சரிதான் என தெரிகிறது. இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்ன பி.ஜேக்கு அந்த உருவம் எப்படி இருக்கும்; அந்த உருவம் யாராக இருக்கும் என்பது கூடவா தெரியாமல் இருந்திருக்கும். அப்படி தெரியவில்லை என்று சொன்னால் அவர் செய்த ஆய்வும் பொய், அல்லாஹ் சொன்னதும் பொய் என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார் என்றுதானே அர்த்தம். தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் மறைத்துவிட்டார் என்பது தான் உண்மை.

மேலே சொல்லப்பட்ட இறை வசனங்களை கவனித்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது அல்லாஹ், தன்னை ரசூல் (ஸல்) அவர்களோடு தான் ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சொல்லிக் காட்டுகிறான். அப்படி ஒப்பிட்டு சொல்லிக் கொள்வதை அவன் விருகிபுகிறான். அப்படி அல்லாஹ், தன்னோடு ஒப்பிட்டு சொல்லிக் கொள்ள தகுதியான ரசூல் (ஸல்) அவர்கள்தான் "அல்லாஹ்வின் உருவம்"என்று சொல்ல வந்த பி.ஜே., வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து சொல்லியிருக்கிறார்; நாமெல்லாம் சிந்தித்துப் பார்த்து உண்மையை தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கையில். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. வெண்ணையை கையில் கொடுத்து விட்டார்; நெய்க்கு அலைய நாம் என்ன விபரம் தெரியாதவர்களா? சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா? ஆக; "இரண்டும் (அல்லாஹ், முஹம்மது) ஒன்றல்ல; என்றாலும் வேறல்ல" என்றுசிந்திக்க வைத்த பி.ஜேக்கு நன்றி!

--


Regards
Mohamed Jaffer Sadique

Mohamed Jaffar Sadique
jaffarmama@gmail.com
117.206.67.138

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்விற்கு உருவம் இருப்பதாக சொல்லிவிட்டீர்கள் அந்த உருவம், அல்லாஹ்வால் “ஹபீபுல்லா” என்று அழைக்கப்பட்ட / புகழப்பட்ட “கண்மணி நாயகம்” தான் என்று சொன்னால் உங்களுக்கென்ன நஷ்டம்? ஏன் உங்களுக்கு இவ்வளவு மன கஷ்டம்?

abdul malick
welawareness@gmail.com
117.206.64.74

இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்று பி.ஜே ஆதாரமாக காட்டவேண்டிய அவசியம் என்ன? குர்ஆன் மற்றும் ஹதீஸ் இவை இரண்டைத்தவிர யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மார் தட்டிய பி.ஜே, இப்னு குதைபாவை ஏற்றுக் கொண்டது எப்போது? ஏன்? அப்படியானால் இப்னு குதைபாதான் இவர்களின் இமாமா? இந்த இப்னு குதைபா யார்? இந்த பி.ஜே யார்? பி.ஜேயின் கொள்கைதான் என்ன? அவரின் ஆதரவாளர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா? அவரின் ஆதரவாளர்கள் செம்மறி ஆட்டு மந்தைகளா? ரசூல் (ஸல்) அவர்களை நம்மைப்போன்று சாதாரண மனிதர் என்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுது அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அல்லாஹ்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.

abdul malick
welawareness@gmail.com
117.206.70.248

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பது போல தனது புதுப்புது அபத்தமான கற்பனைகளை மார்க்கத்தில் புகுத்த முயன்ற முயற்சி தோல்வியை தழுவியதும் கடைசியில் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்ற அறிவுக்கு ஒவ்வாத கற்பனையை மார்க்கத்தில் திணிக்க முயலுகிறார் பி.ஜே.

கண்மணி நாயகத்தை நம்மைப்போன்ற மனிதர் என்று சொல்லும் போதே பின்னாளில் குர்-ஆனிலும், அல்லாஹ்விடத்திலும் கை வைப்பார் என்று நினைத்தேன். நான் நினைத்தது சரியாகி விட்டது. தர்ஜுமா எழுதுவதின் மூலம் குர்-ஆனில் கை வைத்தார். இப்பொழுது உருவம் உண்டு என்பதன் மூலம் அல்லாஹ்விற்கே ஆப்பு வைத்துவிட்டார். ஆப்பு வைத்த அசதியில் ஓ(ஆ)ய்வுக்கு சென்று விட்டார். ஓ(ஆ)ய்வின் முடிவில் அல்லாஹ் இல்லை என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

Mohamed Hussain
hussainmr94@gmail.com
117.206.65.202

நண்பர் இப்ராகிம் அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜே அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.
அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள்.

என்று பல வசனங்களை ஆதாரம் காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை, கால், முகம், கண், செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிருத்தி அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்.

கை, கால், முகம், கண், செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதை வைத்து அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று முடிவுக்கு வரும்போது மேற்கண்ட வசனங்களின்படி ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததை நேரடியாக தான் (அல்லாஹ்) செய்ததாக சொல்லி காட்டுவதால் “ரசூல் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வின் உருவம்” என்று ஏன் சிந்திக்க கூடாது என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். விளக்கம் சொல்ல தெரியவில்லை என்றால் உடனே “வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள்; பாவமன்னிப்பு தேடுங்கள்” என்று யோக்கியன் போல சொல்ல கூடாது.

அல்லாஹ்வை பற்றி உலகுக்கு சொல்லவந்த ரசூல் (ஸல்) அவர்களே அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று சொல்லவில்லை. கண்மணி நாயகம் அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்ல பி.ஜேக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அரபு மொழி தெரிந்து விட்டால் எது வேண்டுமென்றாலும் சொல்லலாமா? உயிரிலும் உயிரான, உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தை ‘போஸ்ட்மன்’ என்றும் ‘நம்மை போல மனிதர்’ என்றும் சொன்னவர் பி.ஜே. மிஃராஜை (விண்ணுலக பயணத்தை) மறுத்த பி.ஜே. பின்னர் அதை ஒத்துக்கொள்கிறார். இது போன்று மாற்றி மாற்றி பேசுவதை எல்லாம் உம்மை போன்ற அவருடைய ரசிகர்கள் வேண்டுமென்றால் ஏற்றுக்கொண்டு அவருக்கு வெண்சாமரம் வீசலாம்.

மேலும் இதுபோன்ற சிந்தனைக்கு மூல காரணமே அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்று பி.ஜே சொன்னதுதான். முதலில் அதை புரிந்து கொள்ளும். ஒரு கருத்துக்கு கமென்ட் கொடுக்கும் போது அதில் என்ன எழுத பட்டிருக்கிறது என்று முழுமையாக படித்து அதன் கருத்தை உணர்ந்து கமென்ட் கொடுக்க வேண்டும். அரைவேக்காட்டுதனமாக கமென்ட் கொடுக்க கூடாது.

உங்களால் மட்டும் தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் சிந்திக்க முடியும்.

jmbatcha
jmbatcha.wordpress.com
jmbatcha@gmail.com
86.96.227.101

அன்பர் இப்ராஹிம் அவர்களுக்கு, ஸலாம்! தாங்கள் இந்த இடுகையை கண்டு கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள், நன்றி! 1400 வருடங்களாக எவருமே பேசாத..எண்ணாத, இறைவனுக்கு உருவம் உண்டு… கைகால்கள் உண்டு… என்று பி.ஜே என்ற நபர் மக்கள் மன்றத்திலே சர்வ சாதாரணமாக பேசி எல்லா மக்களையும் குழப்பி ஈமானை கொன்ற பின்னரே இத்தகைய சிந்தனைகள் எல்லாம் வரத்தொடங்கியுள்ளன, இறைவன் எந்த உருவத்தில் இருப்பான் என்ற கருத்தே உங்களை உணர்வு ரிதியாக பாதித்தது என்றால் இறைவனுக்கே பகிரங்கமாக உருவம் கற்பிக்கும் அந்த மூலகர்த்தா பீ..ஜே குறித்து என்ன சொல்ல போகிறீர்கள்? ஆக இறைவன் எந்த உருவத்தில் இருக்கிறான் அல்லது இருப்பான் என்ற எண்ணத்தை இன்றைய மக்களின் நெஞ்சத்திலே வினாவாக பதித்த அன்னார் பி.ஜே பற்றிய.. அவரின் இச்செயல் பற்றிய தங்களின் கருத்தை தாங்கள் முதலில் அறியத் தாருங்கள் ஏனெனில் தான் ஒரு மேதை என்று காட்டுவத்ற்காகவும் தன் பக்த கோடிகள் தங்களின் அறிவை இவரிடம் அடகு வைத்துவிட்ட காரணாத்தினால் நாம் என்ன வேண்டுமானாலும் குர் ஆன் ஹதீஸ்பெயரில் விளக்கம் கொடுக்கலாம் இச்சமூகத்தை கெடுக்கலாம் என்ற அவரின் மனப்போங்கு இவைகள் குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீகள்.. அங்கே தொட்டு இங்கே தொட்டு கடைசியில் ஆண்டவனையும் அவன் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் கூட விட்டு வைக்காத அந்த மகா அறிறி..ஞர் உங்கள் பார்வையில் குற்றவாளியா..? அல்லது அறிவாளியா..?

asma
asmabismi@gmail.com
86.96.227.102

அற்புதமான கவிவரிகள்.. பாராட்டுக்கள்

ibrahim
akmibrahim105@gmail.com
86.96.227.93

அட பாவிங்களா, எப்படிப்பா உங்களுக்கு இப்படி பேச எண்ணம் வந்தது. மனிதன் ஒரு பிறவி. அவனுக்கு இப்படித்தான் கை இருக்கும், கால் இருக்கும். மற்ற பிறவிகட்கு ஒவ்வரு மாதிரி அமைப்புகளை அல்லா படைத்து உள்ளான்.
இறைவனின் அருளலால் கண்மணி நாயஹத்திற்கு அற்புதங்கள செய்தான். அதற்ககாக இப்படியா கற்பனை செய்வது ? உங்களுக்கும் இந்த கிருஷ்துவனுகும் என்னடா வித்தியாசம் ?? அவனுக தான் ஈஸா (அலைஹை ) அவர்களை தேவர்ன்னும் (தெய்வம்) சொல்வான். தேவதூதர் ன்னும் சொல்வான். இந்த சிந்தனை மனிதனுக்கு தேவை இல்லாதது. இது மோசமன அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும். உங்க இந்த தேவையற்ற சிந்தனயை உங்களோடோ வச்சுக்காம மற்ற வர்களை கெடுப்பது மிகப் பெரும் பாவத்தில் விட்டு விடும்.
இப்ராகிம்.

Mohamed Hussain
hussainmr94@gmail.com
117.206.67.223

சகோதரரே!

அல்லாஹ், தனக்கு உருவம் இருப்பதாக குர்-ஆனில் எங்காவது சொல்லி இருக்கிறானா? அல்லது ரசூல் (ஸல்) அவர்களாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை.
ஆனால் கை, கால், முகம் என்று அல்லாஹ் சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு அவனுக்கு உருவம் இருக்கிறதாக தன்னுடைய கற்பனையை பதிவு செய்திருக்கிறார் பிஜே. இது உங்களுக்கு எப்படி நியாயம் என்று படுகிறதோ அதேபோன்று மேற்படி குர்-ஆன் வசனத்தில் அல்லாஹ் சொன்னதை வைத்துக்கொண்டு ரசூல் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் உருவமாக இருக்கிறார்கள் என்று சிந்திப்பது எங்களுக்கு நியாயமாக படுகிறது. உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.67.223

நண்பரே!

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பது பிஜேயின் கூற்று
இக்கூற்றில் பிறந்ததுதான் இப்புதிய சிந்தனை ஊற்று
இரண்டும் ஒன்றெனும் சித்தமகிழ் ஆன்மீக காற்று
அதை உகப்புடனே சுவாசித்து உன் ஈமானை தேற்று
நபிகளார் பாசறையில் தோழர்கள் தேர்ந்தனர் கற்று
அத்தூயவழி மார்க்கம் தந்த இமாம்கள் வழி பற்று
இதற் கெதிரான மக்கிப்போன உன் எண்ணத்தை மாற்று
உணர்வே இல்லாவுன் கொள்கைகள் விரைந்தோடி போகும் தோற்று
வருங்கால உன் சந்ததிகளையும் சொர்க்கத்தின் ஏணியில் ஏற்று

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.74.174

நண்பரே!

அல்லாஹ்வின் அடிமை என்று மொட்டையாக பதிவு செய்திருக்கிறீர்கள். உருவமுள்ள அல்லாஹ்வின் அடிமையா அல்லது உருவமில்லா அல்லாஹ்வின் அடிமையா என்ற விளக்கமில்லை என்றாலும் மேற் கூறப்பட்ட குர்-ஆனின் வசனத்திற்கு விளக்கம்தான் என்ன என்பதையாவது தாங்கள் விளக்கி இருக்கலாமே. பி.ஜே. சொன்னபடி அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லை. ரசூல் (ஸல்) அவர்கள் தான் அந்த உருவம் என்பதில் தான் உங்களுக்கு பிரச்சினை; அப்படித்தானே? அப்படியென்றால் நீங்கள் தான் வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள். முதலில் நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்.

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்னால் தப்பில்லையாம் நாம் இப்படி சொன்னால் மட்டும் ஷிர்க்காம்; பாவமன்னிப்பு தேட வேண்டுமாம்.

jmbatcha
jmbatcha.wordpress.com
jmbatcha@gmail.com
195.229.237.42

ஸலாம்! மு.சாதிக் (புனைப்பெயர் இறையடிமை musaddiq_abdul@yahoo.com) அவர்களே மேற்கூறப்பட்ட கருத்துக்கள் என்னுடையது என எண்ணுகிறீர்கள் போலும், மாறாக இத்தளமே நான் இத்தடாகம் பற்றி.. என்ற பகுதியில் குறிப்பிட்டவாறு இது ஒரு செய்திகளின் திரட்டுக்கான பக்கமே அன்றி வேறில்லை, இங்கே இதை ஏன் நான் பதிவு செய்திருக்கிறேன் என்றால் பி.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் கற்பித்து சமீபகாலமாக பேசி வருவதால் அவரின் கூற்று பிரகாரம் இப்படி ஓர் சிந்தனைக்கு அது வித்திட்டிருக்கிறது, அவ்வாறு காணக்கிடைத்ததையே உங்களின் சிந்தனைக்கும் தந்தேன், மேலும் இதில் இறுதி தீர்வு காணவேண்டியது நீங்கள் தான் அன்றி இது உங்களைக் குழப்புவது
அல்ல எனவும் புரிய வேண்டுகிறேன்.

அல்லாஹ்வின் அடிமை
musaddiq_abdul@yahoo.com
86.96.226.90

திருவாளர் முஹைதீன் அவர்களே! அல்லாஹ்விற்கு உருவம் உண்டு. ரசூல்(ஸல்) அவர்கள் உருவில் அல்லாஹ் என்று நீங்கள் புதிதாக குழப்புகின்றீர்கள். இதன்மூலம் நீங்கள் வழிகேட்டில், பித் அத்தில், ஷிர்கில் முழுமையாக நுழைந்து விட்டீர்கள். பாவமன்னிப்பு தேடுங்கள்.

குறிப்பு: ரசூல்(ஸல்) அவர்கள் உருவில் அல்லாஹ் என்று நீங்கள் புதிதாக குழப்புவதை பார்த்தால், நீங்கள் ‘திருவிளையாடல்’ படம் அதிகம் பார்க்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். மறு அவதாரம், கடவுளின் அவதாரம் எல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

முகம்மது ஹுஸைன்
hussainmr94@gmail.com
117.206.70.188

“அல்லாஹ்விற்கு உருவம் உண்டு” என்று பி.ஜே. சொன்ன கருத்து சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. மேலே கண்ட இறை வசனத்தின் படி கண்மணி நாயகத்தின் வடிவில் (உருவில்) தான் அல்லாஹ் செய்திருக்கிறான். அந்த வகையில் பார்த்தால் “அல்லாஹ்வின் உருவமே ரசூல் (ஸல்) அவர்கள் தான்” என்பது தெளிவாகிறது. குர்-ஆனுக்கு தர்ஜுமா எழுதிய பி.ஜேக்கு இந்த உண்மை தெரிந்ததால் தான் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். ரசூல் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வின் உருவம் என்ற செய்தியை உடனே வெளிப்படையாக சொன்னால் தனது ரசிகர்கள் கூட்டம் ஏற்றுக் கொள்ளாது. ஆதலால் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று முதலில் சொல்லி பின்னர் படிப்படியாக மூளை சலவை செய்து தனது ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைக்கத்தான் இத்திட்டம். பி.ஜேயின் ரசிகர்கள் பாவம்.

முகம்மது ஜாஃபர் சாதிக்
jaffarmama@gmail.com
117.206.68.252

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த குர்ஆனின் வசனத்தைப் பார்க்கும் போது ரசூல் (ஸல்) அவர்கள் செய்த செயல்கள் அல்லாஹ் செய்ததாகத்தான் இருக்கிறது. அதாவது ரசூல் (ஸல்) அவர்களின் உருவில் அல்லாஹ் செய்திருக்கிறான். அப்படியென்றால் அல்லாஹ்வின் உருவம் ரசூல் (ஸல்) அவர்கள் தான் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? இதைத்தான் பி.ஜே. சூசகமாக சொல்லியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக