ஞாயிறு, 30 நவம்பர், 2014

சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?

கேள்வி: அருள்தந்தை அவர்களே, சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?
வேதாத்திரி மகரிஷியின் விடை: "சத்து" என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். "சித்து" என்பது உயிரைக் குறிக்கும். "ஆனந்தம்" என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். ஆக "மெய்ப்பொருள் - உயிர் - மனம்" இந்த மூன்று நிலைகளையும் "சத்து - சித்து - ஆனந்தம்" என்றும், அவற்றைச் சேர்த்து "சச்சிதானந்தம்" என்றும் வழங்குகிறோம்.
இதில் "சித்து" என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள்.
ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக