வெள்ளி, 19 டிசம்பர், 2014

பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களைப் பற்றி லால்பேட்டை சல்மான்



தலைவரின் கட்டளைக்கு இணங்க தன் ஆவேசப் பேச்சை அமைதி பேச்சாக, அறிவார்ந்த பேச்சாக மாற்றிக் கொண்டவர்.....
ஏழை மாணவர்களின் கல்விக்காக பொருளாதார ரீதியாக உதவிகள் பல புரிந்தவர்.....
சமுதாய நலனுக்காக தன்னுடைய பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்தவர்.....
கிறிஸ்தவ அறிஞர்களிடத்தில் திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துக் கூறி அதை ஒப்புக்கொள்ள வைத்தவர்.....
"தாருல் குர்ஆன் " மூலம் தமிழ் கூறும் முஸ்லிம்களுக்கு மத்தியில் திருக்குர்ஆனின் மாண்புகளை பரப்பியவர்.....
லிபியாவில் நடைபெற்ற முஸ்லிம் அறிஞர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களைப் பற்றி உரையாற்றியவர்.....
பாபர் மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து திருச்சியில் திரண்ட முஸ்லிம்கள் மத்தியில் அமைதியாக கலைந்துச் செல்லுங்கள், ஆவேசப்பட வேண்டாம் என்று காவல்துறையின் வாகனத்தில் உள்ள மைக்கிலேயே பேசி அனைவரையும் கலைந்து போகச் செய்ததன் மூலம் தமிழகம் என்றைக்கும் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்பதை நிரூபித்தவர்.....
சமுதாய ஒற்றுமை மாநாட்டின் "ஹீரோ "வாக வலம் வந்தவர்.....
இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு அதை அத்வானி அவர்களே திறந்து வைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அத்வானியின் முகத்திற்க்கு நேராகவே முழங்கியவர்.....
இஸ்லாமிய மதரசாக்கள் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்று காவி வெறியர்களால் பரப்பப்பட்டபோது.....
இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை.....
இஸ்லாமிய மதரசாக்களும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை.....
அந்த மதரஸாக்களில் இருந்து வந்தவன் தான் நான் என்று கூறியும்.....
இஸ்லாமிய மதரசாக்களில் போதிக்கப்படும் ஒழுக்க மாண்புகளை, பண்பாட்டு நெறிமுறைகளை, வாழ்வியல் தத்துவங்களை நீங்கள் தீவிரவாதம் என்று சொன்னால், அந்த தீவிரவாதத்தை நாங்கள் தொடர்ந்து செய்துக் கொண்டே இருப்போம் என்று பாராளுமன்றத்தில் முழங்கியவர்.....
இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை இந்த நாட்டிற்க்கு எடுத்துச் சொன்ன.....
நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷன்
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவைகள் ஆட்சியாளர்களால் அமைக்கப்படுவதற்க்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர்.....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
பேரியக்கத்திற்க்கு சொந்தமாக அலுவலகம் கட்டுவதற்க்கு பெருமுயற்சி எடுத்து அதிலே வெற்றியும் கண்டவர்.....
சமுதாயத்தின் ஒரே தமிழ் நாளிதழான மணிச்சுடர் நாளிதழை திறம்பட நடத்துபவர்.....
சிறையில் வாடக்கூடிய அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் நன்னடத்தைகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று ஆட்சியாளர்கள் முன்னிலையில் மேடையில் முழங்கியவர்.....
கோவையில் நடைபெற்ற
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில்
அரபு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவை ஆய்வு செய்து உரையாற்றியவர்.....
பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்கள்.....
அரபுக்கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்கள்.....
கல்வி நிலையங்களின் ஆண்டு விழாக்கள்.....
சமுதாய பெருமக்களின் திருமண விழாக்கள்.....
இப்படியாக சமுதாயத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டு அறிவார்ந்த அழகிய உரையை தருபவர். ....
தன்னுடைய மாணவர்களை சமூக சிந்தனையாளர்களாக உருவாக்கியவர்.....
சங்கைக்குரிய உலமா பெருமக்களிடமிருந்து
"முனீருல்மில்லத் " என்ற பட்டத்தை பெற்றவர்.....
கண்ணியத்திற்குரிய
காயிதேமில்லத் (ரஹ்) அவர்கள் காட்டிய வழியில் தன்னுடைய லட்சியப் பயணத்தை தொடர்பவர்.....
அறிஞர் பெருமக்களால் "பேராசிரியர் " என்று அழைக்கப்படுவர்.....
தாய்ச்சபை முஸ்லிம் லீக் தொண்டர்களால்
"வாழும் காயிதேமில்லத் " என்று போற்றப்படுபவர்.....
இந்திய முஸ்லிம் சமுதாயத்தை
தாய்ச்சபை முஸ்லிம் லீகில் ஒன்றிணைத்திட நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்.....
சமுதாய மேம்பாட்டிற்க்காக பாடுபடுபவர்.....
சமூக நல்லிணக்க நாயகர்.....
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தேசியப் பொதுச்செயலாளர்.....
தமிழக தலைவர்.....
தியாகச் சீலர்.....
மதிப்பிற்க்குரிய
கே.எம்.காதர் மொஹித்தீன் சாஹிப் Ex.M.P. அவர்கள் தலைமை வகித்திடும்.....
தாய்ச்சபை
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில்.....
உங்களை உறுப்பினராக இன்றே இணைத்துக் கொள்ளுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக