சனி, 28 மே, 2016

பலஸ்தீன கவிதை

மஹ்மூத் தர்வேஷ் கவிதை
பலியாள் இலக்கம் 18
பதிவு - ஹெச்.ஜி.ரசூல்


அவனது நெஞ்சில் ஒரு  ரோஜாமலர் விளக்கையும்
ஒரு நிலாவையும் கண்டனர் அவர்கள்.

அவன் கொலையுண்டு கற்களின்மீது வீசப்பட்டான்.
அவனது பையில் அவர்கள் கண்டெடுத்தவை
சில நாணயங்கள்
ஒரு நெருப்புப் பெட்டி
ஒரு அடையாள அட்டை
அவனது புயத்தில்
பச்சை குத்திய தடங்களின் இருந்தன.
அவனது தாயோ அவனை இழந்தாள்
ஆண்டுதோறும் அஞ்சலி செய்தாள்
அவனது விழிகளில் முட் செடி முளைத்தது.
இருள் மிக அடர்ந்தது.
அவனது தம்பி இளைஞனாகி
வேலைதேடி நகர்ப்புறம் சென்றான்.
அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர்.
அடையாள் அட்டை அவனிடம் இல்லை.
தெருவில் அவனிடம் இருந்ததெல்லாம்
ஒரு குப்பை பெட்டியும் வேறு சிலவும்.
என் தாய்நாட்டின் குழந்தைகளே
இவ்வாறுதான் நிலா இறந்தது.

(தமிழில் எம். நுஹ்மான்)

பலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்வேஷ்
காலம்(1941 - 2008 )




> *கவிதை இழை
> ஹெச்.ஜி.ரசூல்*
> 
> அன்புச் சகோதரர்களே..
> 
> நமது குழுமத்தில் கவிதைஎழுதவும் வாசிக்கவும் பழக்கம் உள்ள நண்பர்கள் பல
> இருக்கலாம்.
> இந்த இழையில் தாங்கள் எழுதிய மரபு அல்லது நவீன கவிதைகளையோ அல்லது வாசித்ததில்
> பிடித்த கவிதைகளையோ அல்லது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளையோ
> அறிமுகப்படுத்தி உரையாடிக் கொள்வதற்கும் சாத்தியம் இருக்கிறது. எனவே ஆர்வம்
> உள்ள கவிஞர்கள் இதில் தொடர்ந்து எழுதினால் தமிழ்சூழலிலும் உலகச் சூழலிலும்
> முஸ்லிம் கவிஞர்கள் குறித்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்
> 
> *என் சட்டைப் பையிலிருந்த ஒரு குருவி
> நிஸார் ஹப்பானி*
> 
> எனது கவிதைகளைப் படித்துக் காட்ட
> அராபியதாயகத்தில் பயணம் செய்தேன்.
> கவிதை மக்களின் உணவு என்ற நம்பிக்கை எனக்கு
> சொற்கள் மீன்கள் மக்களோ தண்ணீர் என்ற நம்பிக்கை எனக்கு
> 
> ஒரே ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தான்
> என் அராபியதாயகத்தில் பயணம் செய்தேன்
> ஒரு காவல்நிலையத்திலிருந்து
> மற்றொரு காவல் நிலையத்திற்கு அலைக்க வைக்கப்பட்டேன்.
> படைவீரர்கள் என்னை அலைக்கலைத்தனர்.
> என்னிடம் இருந்ததெல்லாம்
> என் சட்டைப்பையிலிருந்த ஒரு குருவி மட்டும்தான்.
> அதிகாரி குருவியின் கடவுச் சீட்டைக் கேட்டான்.
> எனது நாட்டில் சொல்லுக்கு
> ஒரு கடவு சீட்டு வேண்டுமாம்,
> அனுமதிசீட்டுக்காக காத்திருந்தேன்.
> மணல் மூட்டைகளை பார்த்தபடி
> அவை பேசின
> ஒரேதாயகம் ஒரேமக்கள் பற்றி
> எனது தேசத்தின்
> நுழைவாயிலில் தூக்கி எறியப்பட்டேன்
> உடைந்த கண்ணாடி போல.
> (தமிழில் .கீதா,எஸ்.வி.ராஜதுரை)
> 
> நிஸார் ஹப்பானி
> சிரியக் கவிஞர்
> காலம்: 1923 - 1998


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக