சனி, 10 டிசம்பர், 2011

இல்முல் கயிப் (மறைவான ஞானம்)

இல்முல் கயிப் (மறைவான ஞானம்) – தலைப்பு அறிமுகம்

எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டாயிருந்துதா? ஆம். சந்தேகமின்றி !. எங்கள் நபி நாதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) மீது அருளப்பட்ட இந்த இல்முல் கய்ப், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களில் மிக தலைசிறந்ததும் தனி சிறப்பு பெற்றதுமாகும். இந்த முஃஜிஸாத் எனும் அற்புதம் மற்ற 124000 நபிமார்களுக்கு வழங்கப்பட்ட முஃஜிஸாத்துகளை விடவும் மிக வருசையானதாகும். இல்முல் கய்பிளிருந்து சிலதை இந்த எல்லா நபிமார்களுக்கும் வெவ்வேறான அளவில் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டாலும் எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு அந்த எல்லா நபிமார்களுக்கு அருளப்பட்டவைகளையும், இன்னும் ஒப்பிட முடியாத, அளவற்ற ஞானங்களையும் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா அருளினான். ஆனால் தவ்ஹீது வாதிகள் என்று தம்மை தானே அழைத்துக்கொள்ளும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் இதை மறுக்கிரார்கள். ஏனெனில், எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவாக எண்ணுதல் அவர்களின் பொழுது போக்காயிட்டுதே.!

ஞானம் என்றால் என்ன? அது இரு வகையாகும். முதலாவது .Zஸாத்தீ என அழைக்கப்படும் தானாகவே பெற்ற ஞானம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமாகும். இரண்டாவது அத்தாஈ என அழைக்கப்படும் இன்னொருவரால் வழங்கப்பட்ட ஞானம். அல்லாஹ்வை தவிர மற்றவர்கள் பெற்றிருக்கும் ஞானத்துக்கு பெயர் தான் இது. அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான Zஸாத்தீ எனும் ஞானம் மற்ற எவருக்குமொ உண்டென்றொ அல்லது அல்லஹ்வுக்கும் அத்தாஈஎனும் இல்மு உண்டென்றோ யாராகிளும் ஒருவர் கூறினால் அவன் உடனே இறை மறுப்பவனாக ஆகிவிடுகிரான். இன்னும் அல்லாஹ் தஆலா தன் திரு மறையில் மறைவான ஞானத்தை பற்றி கூறும் போது, அது நம்மை நோக்கி கூறுவதல்லாமல் அவன் அவனை நோக்கி கூறுவதல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அவன் எல்லாம் அறிந்தவன். அவனுக்கு மறைவான எதுவும் இல்லை.

குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டும் சிலதை மறுப்பது கொண்டும் மிகுதமானோர் வழி தவறி போகின்றனர். அதே போல், நபி நாதரின் இல்முல் கய்பை மறுப்போரும் கிழ்கானும் குர்ஆன் வசனத்தை ஒப்புக்கொண்டாலும்……

قل لا املك لنفسي نفعا ولا ضرّا الا ما شاء الله. ولو كنت اعلم الغيب لاكثرت من الخير وما مسني السوء . ان انا الا نذير وبشير لقوم يؤمنون.

நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதை தவிர எனக்கே எவ்வித நன்மை(யை செய்வதற்க்)கும் தீமை(யை தடுத்துக் கொள்வதற்க்)கும் நான் சக்தி பெற மாட்டேன். மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே நான் அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன். தீமை என்னை தொட்டிருக்காது. நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் விசுவாசம் கொண்ட சமூகத்தினருக்கு நன்மாராயங் கூருபவனேயன்றி வேறில்லை. 7/188

கீழ்கானும் இவ்விறை வசனத்தை மறுக்கிறார்கள்…

عالم الغيب فلا يظهر على غيبه احدا. الا من ارتضى من رسول

(என் இறைவனாகிய) அவன் மறைவானவற்றை அறிகிரவன், எனவே தான் மறைத்திருப்பதை ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான். தூதரில் தான் (தேர்வு செய்து) பொருந்திக்கொண்டவருக்கே தவிர (72/26)

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுக்குவொர் எழுப்பும் நச்சுக் கருத்துகள் எந்தளவுக்கு மனம் தடுமாறச்செய்யக் கூடியது என்று ஆலோசனை செய்தால், அதே முறையிலே அல்லாஹ்வைப் பற்றி உள்ள இறைவசனங்களையும் புரிய முயர்ச்சித்தால், அது எங்களை படுகுழியில் விழுத்தாட்ட காரணமாகுமென குறிப்பிட தக்கது. (நஊது பில்லாஹி மின்ஹா.- அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக). அவர்கள் தன் கருத்துகளுக்கு சார்ப்பாக முன் வைக்கும் குர்ஆன் வசனங்களும் , அவர்கள் எவ்வாறு வழி தவறி இருக்குரார்கள் என்பதையும் இவ்வாறு மேற்கொள் காட்டுகின்றோம்.. உதாரணமாக, அல்லாஹ் தன் திருமறையில் கூருகின்றான்.

وما تلك بيمينك يموسى . قال هي عصاي اتوكؤا عليها واهش بها على غنمي ولي فيها مأرب اخرى . فال القها يموسى .فالقـها فاذا هي حيّة تسعى

( மேலும் , மூஸாவே உனது வலது கையில் இருப்பது என்ன? (என்றும் கேட்டான் அதற்க்கவர், இது என் கைத்தடி நான் அதன் மீது சாய்ந்துக் கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (தழைகுழைகளை மரங்களிருந்து) பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல தேவைகளும் இருக்கின்றன. என்று கூறினான் அ(தற்க்கு அ)ல்லாஹ் , மூஸாவே நீர் அதை (த் தரையில்) போடுவீராக. என்று கூறினான். அப்பொழுது அவர் அதனைப் போட்டார். அச்சமயமே அது நெளிந்து செல்லும் ஒரு பாம்பாக ஆயிற்று ) ( 20/18,19,20,21)

وإذ قال الله يعيسى ابن مريم أأنت قلت للناس إنخذواني وامي الهين من دون الله قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق أن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب

( அன்றியும், அல்லாஹ், ( மறுமை நாளில் ஈஸாவிடம்) மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹுவைதவிர என்னையும் எனது தாயையும் இரண்டு நணக்கத்திற்க்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா என்று கேட்பான். (அதற்கு) நீ பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் உரிமையில்லாததை நான்(ஒரு பொதும்) கூறுவதற்க்கு எனக்கு தகுதி இல்லை. அவ்வாரு நான் கூறி இருந்தால், நீ அதனை அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தாந் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்.(5/117)

அவர்கள் இந்த வசனங்களை மேற்கொள் காட்டி இவ்வாறு கேள்வி எழுப்புகின்ரார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அவர்களின் கைத்தடி ஒர் பாம்பாக மாற்றப்படும் என அவர்கள் அறிந்திருக்க வில்லையே ! மேல் குறிப்பிடப்பட்ட இரண்டாம் வசனத்தை மேற்கொள் காட்டி . ஈஸா (அலைஹிஸ்ஸலாமு) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன். எனக் கூற அவசியமில்லையே !

இனி நாமும் அவர்கள் மோழிபெயர்த்துக் கூறும் முறையிலே கேல்விகளை எழுப்புவோம். மூஸாவின் கையில் ஏது இருக்கிரது என்று அல்லாஹ் கேட்பதின் மூலம் அல்லாஹ்வுக்கும் மறைவான ஞானம் இல்லை என ஒரு நாளில் நீங்கள் கூற மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன வாக்குறுதி? அது ஒரு கைத்தடி என்று அவன் அறியவில்லையா? அதில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) சாய்ந்திருப்பதாகவும், தன் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பதாகவும் அவன் அறிய வில்லையா?

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சம்பந்தப்பட்ட மற்ற வசனத்தில், அல்லாஹ்வை விட்டு விட்டு, அவர்களையும் அவர்களின் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக்கொள்வீர் என மனிதர்களுக்கு கூறினீரா என அல்லாஹ் வினவுகின்றான். அல்லாஹ் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) விடம் அவ்வாறு வினவக் காரணம் அவ்வாறு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சொன்னார்களா இல்லையா என அவன் அறிந்திருக்க வில்லை என இன்னொரு நாளைக்கு நீங்கள் கூறமாட்டீர்களா?

இல்முல் கய்பை மறுக்குவோர் எழுப்பும் இவ்வாறான, கற்பனைக்கு பொருந்தாதளவு கேலியான, தொடர்ப்பற்ற, மனதை குழப்பும், தவறான வழிகாட்டும், நச்சுக் கருத்துகள் ஏராளம் உண்டு. உதாரணமாக, நபி நாயகம் அவர்களுக்கு ஒரு தொழுகையில் தொழுதப்பட்ட ரக்அத்துகள் எத்தனை என்று மறந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்ப்இருந்திருந்தால் அப்படி மறந்திருக்கமாட்டார்களே ? என வினவுகின்ரார்கள். உம்முஹானீ ( ரலியல்லாஹு அன்ஹா) நபிகளாரின் வீட்டுக்கு வந்த வேளையில் அவர்கள் ஒர் திரைக்குப் பின் இருந்ததாகவும், வந்தது யார் என அவர்கள் கேட்டதாகவும் நான் உம்மு ஹானீ என உம்மு ஹானி ( ரலியல்லாஹு அன்ஹா)கூறியதாகவும் புகாரியில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸை மேற்கொள் காட்டி, அவ்வாறு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் வந்தது யார் என கேட்க அவசியமில்லையே ? என கேட்கிறார்கள். இன்னும் நஞ்சூட்டப்பட்ட வஜீபனத்தை அருந்தாமல் இருந்திருக்கலாமே எனவும் கேட்கிறார்கள்.

ஆதலால், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை ஒர் மாயவித்துக்காரனின் வாள்வு போல் அமைந்திருக்க அவர்கள் நாடுகிரார்களோ? அப்படியென்றால் அவர்களின் வாள்க்கை சரிதை எப்படி உம்மத் மார்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். ? அன்று, தொழுகையில் மறதி ஏற்படாவிட்டால் அதைப்பொல் ஓர் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென செயல்முறையாக காட்டுவது எவ்வாறு? அவர்கள் அன்று நஞ்சூட்டப்பட்ட உணவை அருந்தாமலிருந்தால், அவர்களின் சரிதையில் அந்த அற்புதம் பதியப்பட மாட்டாதே? இஸ்லாம் ஒரு மார்க்கம். அதே போல், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை வழிமுறையுமே. அவர்கள் வாள்வில் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாவிட்டால், எங்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிமுறையில் எவ்வாறான விசேஷமும் கிடையாதே. வஹ்ஹாபிகளின் முயர்ச்சியே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களைப் போன்ற சாதாரண மனிதனாக கருதுவதாகும்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிகரான கேள்விகள் நமக்கும் கேட்க்கலாமே!நாங்கள் செய்யும் நல்லமல் களையும் தீமைகளையும் ரக்கீப் அத்தீத் ( அலைஹிமஸ் ஸலாம்) அவர்களால் ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? நாங்கள் எந்த நன்மைகள் எந்த தீமைகள் செய்தோமென அல்லாஹ் அறிய மாட்டானா? முன்கர் நக்கீர் (அலைஹிமுஸ் ஸலாம்) அவர்களால் ஏன் நாம் கப்ரில் கேள்வி கேட்க்கப்பட வேண்டும்.

இந்த மறுமொழி தான் நாங்கள் கொடுப்போமென அவன் அறிய மாட்டானா? மறுமையில் நம்மை ஏன் விசாரணை செய்யப்பட வேண்டும்? இவ்வுலகத்தில் நாம் செய்த நன்மை தீமைகளும் எங்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில்களும் அவன் அறிய மாட்டானா? நம் நன்மை தீமைகளை மீதான்தராசியில் ஏன் நிறுக்கப் பட வேண்டும்? அல்லாஹ் அதன் பாரங்களை அறிய மாட்டானா? ஸிராத்துல் முஸ்தக்கீம் எனும் பாலத்தை நாம் ஏன் கடக்க வேண்டும்? யார் யார் நரகத்தில் விழுவார்கள் என்று எல்லாம் வல்லவனான நாயன் அறியமாட்டானா?‘குன்’ எனும் தனி சொல்லைக் கொண்டு எல்லாம் உண்டாக்க வல்லமை பெற்ற நாயன் ஒவ்வொரு வேலைகளுக்கும் மலக்குகளை சாட்டப்பட்டிருப்பதற்க்கு அவசியம் ஏது?

இவ்வாறான, மீண்டும் ஒரே இடத்தை வந்தடையும் வட்ட வடிவமான தர்க்கங்களால் ஒருவன் வழிகேடில் விழுகிரதைத் தவிர வேறொரு புண்ணியமும் ஏற்படுவதில்லை (நஊது பில்லாஹி மின்ஹா – அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக) எனவே, மேல் எடுத்துக் காட்டப் பட்ட 2 வது குர்ஆன் வசனமும் கீழ் கானும் வசனங்களும் எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு மறைவான ஞானம் இருந்தது என்பதற்க்கு ஆதாரமால்லவா ?

وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء

மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை (இதனை அறிவிக்க ) தேர்ந்தெடுக்கிறான் ( 3/179)

وانزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما

” (மேலும் அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன. 4/ 113)

நம் நபி நாதர் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மறைவான ஞானமாக எது எதுகளை பெற்றார்களொ, அதெல்லாம் அல்லாஹ்வால் கற்றுக்கொடுக்கப் பட்டதென்பதையும், அந்த ஞானத்தில் நின்றும் எந்த பகுதியானாலும் அறிவிக்கப்படாமல் இல்லை என்பதையும் மேல் கானும் திரு குர்ஆன் வசனங்கள் வலியுறுத்துகிறது. அவர்கள் அறியாவற்றை அவன் கற்றுக்கொடுத்தான் என அல்லாஹ்வே கூறும் பொது, நாயகத்துக்கு அவ்வாறான ஞானம் இல்லை என்று கூறும் வஞ்சகம் நிறைந்த கல் நெஞ்சுடையோரைப் பற்றி கவலை படுகிரதா இல்லா விட்டால் அவர்களை வெறுப்பதா என்பது நமக்குள்ள கேள்விக்குறியாகும். இன்னும் அல்லாஹ் அதை அவனின் பெரும் பேரருள்களில் நின்றும் உள்ளதாக அறிவிக்கின்ரான். அவனின் பேரருளைப் பற்றி அறிவிக்கும் இந்த இறை வசனங்களை யாரால் மறுக்க முடியும்?

ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

அது அல்லாஹ்வுடைய பேரருளாகும். அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்ரான். மேலும் அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன் (62/3)

இந்த இறை வசனங்களை சரியாக புரிய தேடினாள், இல்முல் கய்ப் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு கீழே உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவனின் அந்த ஞானத்தை அவனின் அடியார்களில் ஒருவருக்கும் வழங்க மாட்டான் என்றோ அவனின் அந்த ஞான பொக்கிசத்தின் கதவுகள் ஒருவருக்கும் திறக்கப் பட மாட்டும் என்றோ கூறப்பட்டிருக்கிரதா? யாராலும் ஒருவன் அவனின் ஞானத்தை இன்னுமொருவருக்கு அவனுக்கு கொடுக்க முடியாதென கூரினால் அவர் அல்லாஹ்வுக்கு இயலாமை எனும் முஸ்தஹிலான ஸிபத்தெனும் வர்ணிப்பை சூட்டினதற்க்காக அவர் இறை மறுப்பவராக ஆகிவிடுகிரான். இல்முல் கய்பை பற்றி தன் சொந்த கருத்துகள் கூறி வழி தவறி விடாமல் இருப்பதற்க்கு இவ்விசயத்தில் மிக முக்கியமான கவணம் செலுத்த வேண்டுமென்பதை வற்புறுத்துகின்ரோம்.

எனவே, யாராகிலும் ஒருவர், குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டு மற்றும் சிலதை மறுத்து, அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்களேயானால், அல்லது சந்தேகிப்பார்களேயானால் அவன் முஸ்லிம் என்ற பட்டியலிருந்து அகன்று விடுகிரான். ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளைகளை மனப்பூர்வமாகவும் நிபந்தனைகளுமின்றி முற்றாக அடிபனிவதே ஒரு முஸ்லிம் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்ரான்…

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

விசுவாசங்கொண்டோரே ! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ! அன்றியும் செய்த்தானின் அடிச்சுவறுகளை பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். ( 2/208 )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்பெனும் மறைமுகமான ஞானம் உண்டாயிருந்தது என்பதற்க்கு ஆதாரமாக அனேகமான ஹதீஸ்களும் பதியப்பட்டிருக்கிரது. இந்த தலைப்பின் கீழ் அதுகளை நாங்கள் ஒன்றொன்ராக எழுத நாடுகின்றோம். இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக