வெள்ளி, 27 ஜூன், 2014

தேடுதல்

யாத்திரை கேள்வி கேட்டு, தேடி, துழாவுவதில்தான்
ஆரம்பமாகிறது. ஆரம்பிக்க வேறு எந்த வழியும் இல்லை. வாழ்வின்
பொருள் என்ன என்று கேள்வி கேட்காத வரை, இந்த பிரபஞ்சத்தின் அடி ஆழ
மையத்தை தேடாத வரை, நீ துளி கூட நகர்வதேயில்லை. ஒரு அடி கூட
எடுத்து வைப்பதேயில்லை. அப்போதுதான் அந்த தேடுதல் துவங்குகிறது.
நீ பணத்தை தேடுகிறாய் என்றாலே பதவியை,
அதிகாரத்தை, கௌரவத்தை தேடுகிறாய் என்றுதான் பொருள்.
தேடுதலும் ஒரு வகையான மெலிதான ஆசைதான்.
உன்னிடம் எல்லாமும் உள்ளது, ஆனாலும் நீ எல்லா
இடத்திலும் தேடுகிறாய் என்பது வேடிக்கையான ஒன்றுதான்.
நீ எதையாவது செய்ய முயற்சிக்கும்போது, நீ உனது
அகம்பாவத்திற்கு தீனி தேடுகிறாய் என்று அர்த்தம்.
உன்னால் எங்கு உருவாக்க முடிகிறதோ அந்த திசையில்
தேட துவங்கு.
---ஓஷோ ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக