வெள்ளி, 4 ஜூலை, 2014

தியானம்

தியானம் செய்யுங்கள் தியானம் என்பது சும்மா இருப்பது அன்று .

தியானம் என்பது நீ தினமும் செய்யும் 

ஒவ்வொரு வேலையையும் இன்னும் அழகாக , 

இன்னும் கவனமாக , இன்னும் நேர்த்தியாக , செய்வது. 

எதையும் உணர்வுடன் செய்யும்போது

ஒரு விருப்ப அனுமதித்தல் அங்கே நிகழும்; 

உணர்வுடன் பணி புரியும் போது 

தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருப்பாய்.

இப்போதே ஆரம்பி. 

நடக்கும்போது உணர்வுடன் நட. 

பேசும்போது உணர்வுடன் பேசு. 

பணிபுரியும் போது உணர்வுடன் பணி புரி ..

உண்ணும் போது உணர்வோடு உண் ..

இப்படி நீ ஒவ்வொரு கணத்திலும் 

எந்த ஒரு வேலை செய்தலும் முழு உணர்வுடன் செய் .

ஆனந்தம் அருவியாய் உன்னுள் பாயும் ஒவ்வொரு கணத்திலும் ..

--- ஓஷோ ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக