செவ்வாய், 22 ஜூலை, 2014

நான் ஒரு பாலஸ்தீனியனாக பிறந்திருந்தால்..!

நான் ஒரு பாலஸ்தீனியனாக 
பிறந்திருந்தால்...
இந்நேரம் 
ஷஹீதாகி இருப்பேனே...!
கேள்வி கணக்கே இல்லாமல் 
சுவனம் போயிருப்பேனே !
அதற்குமுன்னால் 
பத்து யூதனையாவது 
சாவூருக்கு அனுப்பி இருப்பேனே !

போர்க்களச்சாவு என்ன
எல்லோருக்குமா வாய்த்து விடுகிறது ?

இறைவா ...
முஸ்லிம்களெல்லோரும்
சகோதரர்கள் என்று
சொல்லப்பட்ட மார்க்கத்தில்
அரிசி விலையையும்
காய்கறி விலையையும்
சிந்தித்து சிந்தித்தே
சிந்தை சேதாரம் ஆகிப்போனவர்கள்
மத்தியில்
ஒரு சகோதரனுக்காக ...
தலை சிதறி
செத்துப்போன
அவன் மகளுக்காக
கண்ணீர் சிந்தும்
இரக்கத்தையாவது
எனக்குத் தந்தாயே...
நீ கருணையுள்ளவன் !

" அடுத்தவர்மீது
அன்போ இரக்கமோ
இல்லாதவர் மீது
இறைவனின்
அன்போ இரக்கமோ
ஏற்படுவதேயில்லை "
என்று சொன்ன
உத்தம நபிகளின்
உம்மத்தாய் என்னை
ஆக்கி வைத்த
இறைவா ....
நீ
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக