செவ்வாய், 22 ஜூலை, 2014

கர்பலாவே காட்சியாக!


கர்பலாவில் ...

கர்பலா போர்க்கள கூடாரத்தில் தங்கி இருந்த
இமாம் ஹுசைனாரின் நிறைமாத 
கர்ப்பிணி மனைவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அழகுக் குழந்தையை தன் கைகளில் ஏந்தி 
" அப்துல்லாஹ் " என பெயர் சூட்டி
குழந்தையின் காதில்
" பாங்கு " சொல்லிக் கொண்டிருந்தார் இமாம் ஹுசைன் ( ரலி ).
அந்த நேரத்தில் எதிரி எய்த அம்பு ஒன்று
குழந்தையின் கழுத்தில் பாய்ந்து ....
அதன் உயிரைப் பறித்தது !

கர்பலா போர்க்களக் கொடுமைகளை நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேன் .
காட்சியாக இப்போதுதான் பார்க்கிறேன் !

யா அல்லாஹ்....
உன்னிடம் முறையிட
என்னிடம் வார்த்தைகளில்லை !
ஹஸ்ஸான் இப்னு தாபித் ( ரலி ) சொன்னதைப்போல ...
" நான் சொல்லாற்றலில் ஏழை !
ஏழை எப்போதும் தோற்று விடுகிறான் !"
அதனால்...
நான் எதுவும் சொல்லப்போவதில்லை !

நாங்கள் காணும் காட்சிகள் சொற்பம் !
அனைத்தையும் காண்பவன் நீ !
ஏன் ? எதற்கு ? என்று
அறிந்தவன் நீ !

ஆத்திரப்பட்டு
ஆதங்கப்பட்டு
அவசரப்பட்டு
யூதர்களின் அழிவுக்கு
நாங்கள் கொஞ்சம் போல்
துஆ செய்து விடுவோமோ
என்று அச்சமாக இருக்கிறது !

அதனால் ...
கடல் அளவு
கை ஏந்தி
உன்னிடம் நாங்கள்
பிரார்த்தித்ததாக
ஏற்றுக்கொள் !

இறைவா !
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு
கருணை காட்டு !
யூதர்களுக்கு
உண் கருணையின்
எதிர் புறத்தை சாட்டு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக