செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன்

1923 – ஏப்ரல் மாதம் 26-ல் தஞ்சாவூர் ஜில்லா கூத்தாநல்லூரில் பிறந்தார்.

1936 – இவரது  “ஜினானா ஜெயந்தி கீதம்” என்ற முதல் படைப்பு அச்சுப் பிரசுரமாக வெளிவந்தது.

1937 – டி.எம்.எம். அஹ்மத் எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு “சாரணபாஸ்கரன்” என்ற புனைப்பெயரை ந.மு.வேங்கடசாமி நாட்டார் வழங்கினார்.

1945 – காரைக்காலிருந்து வெளிவந்த “பால்யன்” வாரப் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

1946 – இவரது முதல் கவிதைத் தொகுப்பு “மணியோசை” என்ற பெயரில் வெளிவந்தது.

1947 – முதல் 1951 வரை – ‘சாபம்’, சங்க நாதம்’, கவிதை தொகுப்புகள் வெளிவந்தது.

(மலாயா) பினாங்கில் ‘தேசநேசன்’ தினசரி ஆசிரியராக பணியாற்றினார்.

1949 –  ‘களஞ்சியம்’ தினசரி (மலேயா) வார இதழ் ஆசிரியராக பணியாற்றினார்.

1950 –  ‘முஸ்லிம் முரசு’ பத்திரிக்கை நடத்திய சிறுகதைபோட்டியில் முதற் பரிசு பெற்றார்.

1951 –  இதயக் குமுறல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

1956 –  ‘யூசுப் – ஜுலைகா’ எனும் புகழ் பெற்ற காப்பியத்தை எழுதி முடித்தார்.

திருச்சி வானொலி நிலையத்தார் லெ,ப.கரு. ராமநாதன் அவர்கள் தலைமையில் கூட்டிய கவியரங்கில் “வாழ்க்கை வளமுற – உணர்வு” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

1957 –  திருச்சியிலிருந்து வெளிவந்த ‘சன்மார்க்க சங்கு’ மாதமிருமுறை பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றினார்.

1959 – ‘மணிச்சரம்’ கவிதை நூல் வெளியானது

1960 – ஜனவரி 14, பொங்கலை முன்னிட்டு திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்த கவியரங்கில் “நாடு நகரம்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்.

ஏப்ரல் 9, காரைக்குடி கம்பன் விழாவில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவனார் தலைமையில் “கம்பனில் காணும் சமயக் கருத்துக்கள்” என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் “கம்பன் கண்ட இஸ்லாம்” என்ற கவிதையைப் பாடி பாராட்டினைப் பெற்றார்.

1961 – ‘நாடும் நாமும்’ கவிதை நூல் வெளிவந்தது

1963 – ஜனவரி 13, நம் நாட்டின் மீது சீனா துராக்கிரமிப்பு செய்ததை ஒட்டி ‘வீறு கொண்ட பாரதம்’ பற்றி சுவாமி சித்பவானந்தர் தலைமையில் திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பிய கவியரங்கில் “தியாகம்” என்ற தலைப்பில் பாடினார்.

1968 – ஜனவரி 8, சென்னையில் கூடிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவியரங்கில் “வணிகன்” என்ற தலைப்பில் கவிதை பாடினார்

ஜனவரி 14, அன்றைய ஊராட்சித்துறை அமைச்சர் பாவலர் முத்துச்சாமி தலைமையில் நடந்த கவியரங்கம், திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது. “பால்” என்ற தலைப்பில் கவிஞர் பாடினார்.

1969 – சென்னையில் நடந்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் மாநாட்டின் உபதலைவராக இருந்தார்.

1971 – ஏப்ரல் 16, திருச்சி வானொலி நிலையம், நாடக விழாவை முன்னிட்டு “பிரிவை மாற்றிய பிரிவு” எனும் அவருடைய நாடகத்தை ஒலிபரப்பியது. அதில் ஈராக்கிய மன்னர் ஹாரூன் முதலான ஏழுபேர் நாடக பாத்திரங்கள்.

அக்டோபர் 13 “வரம்பு கடந்த வாழ்வில் – அன்பு” என்ற தலைப்பில் அவரது இலக்கிய சொற்பொழிவை திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பியது.

1972 –  திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற்ற முதல் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் இவரது தமிழ்ச் சேவையினை பாராட்டி புகாழாரம் சூட்டப்பட்டது. “வாழ்வியல்” என்ற தலைப்பில் கவிதை படித்தார்.

1977 – அவருடைய மொத்த கவிதைகளையும் உள்ளடக்கியத் தொகுப்பாக “சாரணபாஸ்கரனாரின் கவிதைகள்” வெளிவந்தது.

1986 – நவம்பர் 25-ல் கவிஞர் திலகம் மறைந்தார்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக