புதன், 21 மார்ச், 2012

ஆண் நட்பை அறவே வெறுப்பீர் தோழிகளே !

பெண்களை இவ்வாறு அறைகூவல் விட்டு அழைப்பவர் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா. அம்மையார் கட்டுரையில் சொன்னதைப் பார்ப்போமா வாசகத் தோழிகளே !

• ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத் தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில் இந்த நாளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

• ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெற்றோர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா காது அறுந்துபோகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

• ஆனால், ஆண் இந்த விஷயத்தில் தந்திரமானவன், நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துக் கொண்டு பெண் தன்னைத் தவிர்த்து விடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி, அவளது நன்மதிப்பை சம்பாதித்தபின் மிகக் கீழ்த்தரமாக நடந்துக் கொள்பவன்.

• தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்யவே மாட்டான், ஆனால் தோதான வாய்ப்பின் போது எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான் ! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான். எனவே புற்றில் பாம்பு இருக்கிறதா எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண், அதில் கையை விட்டு பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, அது தேவையற்ற ரிஸ்க்

• ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவையில்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன ? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கி பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும் அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய், அபத்தத்திலும் அபத்தமான கருத்து.

• ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனாலெல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றி விட முடியாது !

அய்யய்யோ....போதும் பாட்டி போதும், முடியல, இது ஏதோ நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரையன்று, இன்று சுடச்சுட தினமணியில் வந்தக் கட்டுரை From FB MR. 
Raja Rajendran 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக