திங்கள், 30 ஏப்ரல், 2012

26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்!

26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்! வெள்ளி விழா சிறப்பு மலர் தயாராகிறது

1987 ஏப்ரல் 29, புதன்கிழமை, ஹிஜ்ரி 1407 

ரமளான் பிறை 1.

அந்த புனித நந்நாளில் `மணிச்சுடர்� நாளிதழின் முதல் இதழ் தமிழ் கூறும் நல்லுலகில் வெளி வந்தது.

முதல் இதழில் `மணிச்சுடர் சுடர் வீசுகிறது!� என்ற தலைப்பில் சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்கள் எழுதிய தலையங்கத்தில், 

``தமிழரின் நலன் நாடும் நாளேடுகள் ஐம்பதுக்கு மேல் வெளியிடப்படுகின்றன. அறிவுச்சுடர் கொளுத்தும் அந்தப் பணியில் `மணிச்சுடர்� தன் பங்களிக்க முன்வந்திருக்கிறது.

மணிச்சுடருக்கு ஏதும் தனித்தன்மை உண்டா, என்றால் உண்டு; இதுவரை வெளியில் காட்டப்படாத தமிழ் முஸ்லிம் கலாசார, பண்பாட்டு வாழ்விலும் அது சுடரேற்றி காட்டும்

செய்திகள் புனிதமானவை; கருத்துக்கள் சுதந்திர மானவை என்ற சொற்றொடரில் அதற்கு ஆழமான நம்பிக்கை உண்டு; வாழும் சமுதாயங்களுக்கிடையே சமத்துவ சகவாழ்வை நிலை நாட்ட அது அயராது பாடுபடும்.�� என குறிப்பிட்டிருந்தார்கள். அதன்பின், 1-6-1987 இதழில் `மக்களின் மணிச்சுடர்� என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில்,

`இதுவரை குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்த `மணிச்சுடர்� தமிழ்நாட்டு பொதுமக்கள் அனைவருக் கும் வழங்கும் முயற்சியை இன்று முதல் தொடங்கியுள்ளோம்.

நிறைந்த மூலதனத்துடனும், மூளை பலத்துடனும் நடந்து வரும் நாளேடுகள் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன. `மணிச்சுடர்� எந்தப் பத்திரிகைக்கும் போட்டியாக வெளிவரவில்லை; தமிழ் நாளேடுகள் அதிகமாக காண முடியாத முஸ்லிம் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு `மணிச்சுடர்� ஒலிகூட்டும்.

பத்திரிகை தொழில் எதிர் நீச்சலை போன்றது என்பார்கள். நம்மைப் பொறுத்தவரை அது கிடுகிடு பள்ளத்தாக்கிலிருந்து இமயமலையின் கொடுமுடியில் ஏறுவதுபோல் சிரமமாகப்படு கிறது.

என்றாலும் இந்தப் பணியில் சமுதாயம் எங்களை உற்சாகப்படுத்துகிறது. வாசகர்கள் ஊக்குவிக்கிறார்கள். வணிகப் பிரமுகர்கள் விளம்பரம் என்ற ஊன்றுகோலை தரமுன் வந்திருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைவனின் பெருங்கருணையை துணை கொண்டு எங்கள் பணியை மேற்கொண்டு விட்டோம்�� என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சமுதாயத்தின் நீண்ட கால கனவான `தினத்தாள்� தொடங்கும் முயற்சியில் 1987-ல் சிராஜுல் மில்லத் ஈடுபட்ட போது, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவிய வர்கள் ஆப்பனூர் ஜனாப் காஜா முகைதீன், ஏ.எஸ். அலியார், எஸ்.கே. முஹம்மது ஜபருல்லாஹ் ஆகியோர் ஆவர். இவர்களின் ஒத்துழைப்பு 1992 வரை நீடித்தது.

அதன்பின், ஆலிம் முஹம்மதுசாலிஹ் பொறியியல் கல்லூரி நிறுவனர் எஸ்.எம். ஷேக் நூருத்தீன் காகா, எஸ்.என்.எம். ஹுசைன் அப்துல் காதர், எஸ்.என்.எம். அஹமது சம்சுதீன் ஆகியோரை இயக்குநராகக் கொண்டு `மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்� சார்பில் மணிச்சுடர் வெளிவந்தது. தொடர்ந்து சிராஜுல் மில்லத்அவர்கள் ஆசிரியராக பணியாற்றி வந்தார்கள்.

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோட்டில் இயங்கி வந்த மணிச்சுடர் 14-2-1992 முதல் வாலஸ் தோட்டம் 3-ம் தெரு கட்டிடத்தில் வெளிவரத் தொடங்கியது. சிராஜுல் மில்லத் அவர்களோடு அவரது புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்கள் வெளியீட்டாளராக பொறுப்பேற்று கடமையாற்றினார்கள். 

25 ஆண்டுகளுக்கு முன் தலையங்கத்தில் சிராஜுல் மில்லத் குறிப்பிட்டதைப் போல், `கிடுகிடு பள்ளத்தாக்கி லிருந்து மலை உச்சிக்கு ஏறும் பயணமாகத்தான்� மணிச்சுடர் பணி தொடர்ந்தது.

புயலும், சூறாவளியும் நிலை கொண்டு தத்தளித்த நேரத்தில் தான் 1996-ல் திருச்சியில் இருந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை சென்னைக்கு அழைத்து மணிச்சுடரை நடத்தும் பொறுப்பை சிராஜுல் மில்லத் அவர்கள் ஒப்படைத்தார்கள். மணிச்சுடருக்கு மட்டுமல்ல; தாய்ச்சபைக்கும் அது சோதனையான கால கட்டம்! எனவே, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடும் பணியாகவே பேராசிரியருக்கு அப் பொறுப்பு அமைந்தது.

மணிச்சுடரின் அலுவலகமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமையகமும் வாலஸ் தோட்டத்தில் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. 

பேராசிரியரின் கடின உழைப்பால் இன்று `மணிச்சுடர்� தடையின்றி வருகிறது. சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் நின்று நிமிர்ந்து பார்க்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தை புதுப்பித்து உருவாக்கி காயிதெ மில்லத் மன்ஸில் என பெயர் சூட்டி அதில் `மணிச்சுடர்� அலுவலகத்தையும், அச்சகத்தையும் அமைத்தார் பேராசிரியர்.

`மணிச்சுடர்� இடையில் சில மாத காலம் வெளி வராமல் தடைப்பட்டது. அது கணக்கிடப்பட்டு `` மணி��, ``சுடர்�� குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் மணிச்சுடர் வெளிவந்த 1987 ஏப்ரல் 29 ஐ கணக்கிட்டால் 25 ஆண்டுகள் முடிந்து 26-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. எனவே, இன்று முதல் மணி 26; சுடர் 1 என்ற கணக்கு தொடங்கும்.

வெள்ளி விழா ஆண்டில் `மணிச்சுடரின்� இன்றைய நிர்வாக இயக்குநர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் முயற்சியில் `மணிச்சுடர்� இ.பேப்பராக வெளிவருவது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. 

எல்லோருடைய அவாவையும் பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் பக்கங்களுடன் கலரில் `மணிச்சுடரை� கொண்டு வரும் முயற்சியில் பேராசிரிய ரின் ஆலோசனையில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை நிர்வாகிகளான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

மணிச்சுடர் சமுதாயத்தின் காலக் கண்ணாடி! அதில் இடம் பெறும் உலகளாவிய இஸ்லாமிய செய்திகளும், அன்றாட அரசியல் நடவடிக்கைகளுக்கான விமர்சனங் களும் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியவை. 

எனவே, மணிச்சுடரை பரப்ப வேண்டிய கடமை சமுதா யத்தைச்சார்ந்தது. ஊர்கள்தோறும் - பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் என முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மணிச்சுடரை வரவழைக்கச் செய்ய வேண்டிய கடமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு உண்டு.

வெள்ளி விழா கண்ட மணிச்சுடரின் 25 ஆண்டுகள் இடம் பெற்ற செய்திகளின் முக்கியத்துவம்வாய்ந்தவை தொகுக்கப்பட்டு காலச்சுவடுகளாக உங்களுக்கு தரும் வகையில் `வெள்ளி விழா சிறப்பு மலர்� உருவாகி வருகிறது. இதற்காக அனைவரின் ஒத்துழைப்பையும் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

பேராசிரியரின் தலைமையின் கீழ் மணிச்சுடரில் நாங்கள் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

மணிச்சுடரை இன்னும் சிறப்பாக்க இந் நாளில் நாங்கள் உறுதி ஏற்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக