ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்







பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை அதிகமிருந்தது.

எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

Sathyam --->50 x 28.50 = 1425
RNRL ------>8 x 52.50 = 420
GVK -------->7 x 20.80 = 125

முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

1. விலை குறையும் போது வாங்க வேண்டும்.
அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
2. அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
3. அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
5. தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.


அதேபோல SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம்.இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/


ஆங்கில இணையதளங்கள் :

http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

உங்களுக்கு தெரிந்த இணையதளங்களை பற்றி பின்னூட்டம் இடவும் நண்பர்களே!அவை இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும்.





பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2






1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.
பணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.

2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு
எண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.

3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்
ஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading
கணக்கிலேயே இருக்கும்.

4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்
போதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை
வாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.
இவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.
குறைந்த அளவு தான் இருக்கும்.

5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்
உங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா
என்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.

http://www.cdslindia.com/publication/dplist.jsp

6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்
வசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்
நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

State Bank of India Demat :http://demat.sbi.co.in/index.jsp
Icici Direct : http://www.icicidirect.com/

பங்குசந்தையின் சில நுட்பங்கள் :

1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO
( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,
ஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லதுஒரே பங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து
முதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங் களுக்கு
சோதனை வராது.

5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்
தான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா ? இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல
லாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.

எப்படி என்று பார்ப்போம் .

உதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா? வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்கு 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு
500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.

நீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.

6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்
நீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .
இவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.

Mutual Fund பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள் :

1. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள்
- 1
2. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே! நன்றி.


பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1



பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்
எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்
பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்
கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு
எழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் :

முதலில் செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது
புரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட
முடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்
பேசியோ கற்றுக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான
நடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன் உள்ளது. இந்த
தளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
http://pangusanthai.com/


எனக்கு தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய"அள்ள அள்ளப்பணம் " என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடியசொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்றுபாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால்மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.

இந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :
http://thoughtsintamil.blogspot.com/2005/01/blog-post_04.html

இந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க :http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html
2. Pan card பெறுதல் :

PAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

அடுத்தது நீங்கள் PAN Card ( Permanent Account Number ) வருமான வரி எண்
அட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.

தேவையான சான்றுகள் :

1. ஒரு 2.5 width X 3.5 height inch புகைப்படம்
2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )
3. உங்கள் புகைப்படம் உள்ள சான்று ( Voter Identity or Driving license )



இதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.
https://tin.tin.nsdl.com/pan/index.html

இந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு "NSDL - PAN" என்ற பெயருக்கு Demand draft அல்லது
Cheque எடுத்து கொள்ளவும்.


3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )
கணக்கு தொடங்குதல் :

டீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

நமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.

உங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
இங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.

Trading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.
Demat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.

இதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது
உங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்
Power of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்
விற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.

தேவையான சான்றுகள் :

1. Pan card
2. Ration card
3. Bank Passbook


Thanks:


K.A.Mujeebur Rahman








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக