சனி, 19 மே, 2012

சமுதாய மரபுகளில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது முஸ்லிம் லீக் வேண்டுகோள்


ஈதுப் பெருநாள் அறி விப்பு செய்வது தலைமை காஜிதான். அதை பின் பற்றித்தான் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவர். தமிழக முஸ்லிம் சமுதா யத்தில் தொன்று தொட்டு நீடித்து வரும் சமுதாய முறைகள், சன்மார்க்க மரபு கள் எத்தகைய குழப்பங் களும் இல்லாமல் தொடர வேண்டும். அதற்கு சமுதாய மக்கள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எருக்கஞ்சேரி யில் நடைபெற்ற வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட் டத்தை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசுகை யில் அவர் குறிப்பிட்ட தாவது-

முஸ்லிம் சமுதா யத்தைப் பொறுத்தவரை பக்ரீத், ரமளான் பெரு நாட்கள் எப்போது வரு கிறது? எந்த நாளில் இதைக் கொண்டாட வேண்டும்? என்பதை அறிவிப்புச் செய்யும் அதிகாரம் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்ட தலைமை காஜியி டம் மட்டுமே உள்ளது. மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளோ, சங்கைக் குரிய உலமாக்களோ, நம் பத்தகுந்த நபர்களோ அவர் கள் வசிக்கும் பகுதிகளின் தலைப்பிறையை பார்த்தா லும் அந்தத் தகவலை முறைப்படி தலைமை காஜிக்கு தெரிவித்து அதை அவர் ஊர்ஜிதம் செய்து அதன் பின்பே பெரு நாட் களை பற்றிய தகவலை அல்லது ரமளான் முதல் நோன்பை அறிவிப்புச் செய்கிறார்.

பக்ரீத் பெருநாள் வரும் 17-ம் தேதிதான்
இந்த அடிப்படையில் இந்த வருடம் பக்ரீத் பண்டிகை என்னும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வரும் 17-ம் தேதி புதன்கிழமை என்று தலைமை காஜி டாக்டர் முஃப்தி ஸலா ஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு ஒட்டு மொத்த சமுதாயமும் பெருநாள் கொண்டாட ஆயத்தமாக உள்ள நிலையில், சிலர் தங்களை விளம்பரப் படுத்திக் கொண்டு சமு தாயத்தில் குழப்பம் விளை வித்து ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக் கோடு பக்ரீத் பெருநாள் 16-ம் தேதி என்றும், 18-ம் தேதி என்றும் அறிவிப்பு களை வெளியிட்டு பெரு நாள் தொழுகை நடத்து வதற்கான ஆயத்தங்களை யும் செய்து வருகின்றனர்.

சமுதாயத்தின் ஒற்றுமையை மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை அடியோடு தகர்ப்பதற்கு செய்யப்படும் இந்த விஷமத்தனத்தை சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவது சமுதாயத்தின் கட்டாய கடமையாகும். எனவே தலைமை காஜி அறிவித்த 17-ம் தேதிக்கு முன்போ அல்லது பின்போ பக்ரீத் பெருநாள் என்று பொது இடத்தில் தொழுகை நடத்த யாரா வது அனுமதி கேட்பார் களேயானால் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை அதனை ஏற்காமல் அனுமதி மறுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கி றோம்.

தீபாவளி இன்னொரு நாள் என்று, இந்துவோ கிறிஸ்துமஸ் மறுநாள் என்று கிறிஸ் தவரோ அறிவித்து விட்டு அவர்கள் நடமாட முடியாது. அந் தந்த மதங்களைச் சார்ந்த வர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், முஸ்லிம்களில் மட்டும் யார் வேண்டு மானாலும் எத்தகைய அறிவிப்பையும் செய்து விட்டு சமுதாயத்தை கேலிப் பொருளாக் குகிறார்கள். இதனால் சமுதாய ஒற் றுமை கேள்விக்குரிய தாகின்றது.

ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா போன்ற இந் துத்துவ அமைப்புகள் செய்ய முடியாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் சிலரே செய்யத் துணிகிறார்கள் என்றால் அதை பொறுத் துக் கொண்டிருக்க முடி யாது. சமுதாய கண்ணியத்தை காப்பாற்றுவோம்
முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தை காப் பாற்றுவதும், மஹல்லா ஜமாஅத்தின் ஐக்கியத்தை நிலை நாட்டுவதும் இப் போது நமது தலையாய கடமையாகி விட்டது.

எனவேதான், டிசம்பர் 11-ம் தேதி சென்னை தாம்பரத்தில் நடத்துகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டின் காலை அமர்வை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியாக நடத்தி அதிலே சமுதாயப் புரவ லர்கள், சன்மார்க்க அறிஞர் கள், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையெல்லாம் பங்கேற்கச் செய்து மஹல்லா ஜமாஅத் கட்டுப் பாடு, ஷரீஅத் பஞ்சாயத்து, பைத்துல்மால், கவி அபி விருத்தி போன்ற தலைப்பு களில் கருத்தரங்கமும் நடத்தவிருக்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு விளம் பரம் தேடுவதற்கு இந்த மாநாடு அல்ல. சமுதாய ஒற்றுமை மூலமே சமுதா யத்தின் மானம் மரியாதை காப்பாற்ற முடியும். சமு தாய ஒற்றுமை நிலைக்க வேண்டுமானால் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு என்பது பலம் பொருந் தியதாக அமைய வேண் டும்.

எனவே, ஒவ்வொரு மஹல்லாவைச் சார்ந்த வர்களும் குடும்பத்தோடு இந்த மாநாட்டில் பங் கேற்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக