சனி, 19 மே, 2012

ஓராண்டு அதிமுக ஆட்சி

கோவில்களில் நீதி போதனை ; 6ம் வகுப்பிலேயே சாதிச்சான்றிதழ் வரவேற்புக்குரியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்படாதது வருத்தத்திற்குரியது அ.இ.அ.தி.மு.க ஓராண்டு ஆட்சி பற்றி தலைவர் பேராசிரியர் கருத்து 


கோவில்களில் நீதிபோ தனை, 6ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் என்ற அறிவிப்புக்க ளெல்லாம் வரவேற்பிற்குரியவை. முஸ்லிம் களுக்கு தனி இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்காதது வருத்தத் திற்குரியது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் நவ்ரங் எம். சகாபுதீன் இல்ல திருமண விழாவில் பங்கேற்றக் சென்ற அவர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.

ஜெயலலிதா தலைமையி லான அ.இ.அ.தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஆட்சி பற்றி இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் மதிப்பீடு என்ன என்று அவரிடம் செய்தி யாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியதாவது.

செல்வி ஜெயலலிதா தலை மையில் அமைந்துள்ள அ.இ. அ.தி.மு.க அரசு செய்யும் அத் தனையும் தீங்கும் அல்ல, அத் தனையும் நன்மையும் அல்ல, 

ஒவ்வொரு இந்துக் கோவில் களிலும் வாரம் ஒருமுறை நீதி போதனை வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்; சாதி, இருப்பிட , வருமான சான்றிதழ்கள் 6ம் வகுப்பிலேயே பள்ளியில் வழங் கப்படும் என்ற திட்டங்களெல் லாம் மகிழ்ச்சியைத் தருகிறது.

இத்தகைய நீதிபோதனை வகுப்புகளால் நல்ல விளைவுகள் ஏற்படும். சாதி, வருமான சான்றி தழ்கள் பெற வருவாய் துறையில் செய்யப்படும் அலைச்சலும் சிரம மும் அறவே நீங்கும். ஆகவே வர வேற்க கடமைப் பட்டுள்ளோம்.

அதே சமயம் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை யெல்லாம் முடக்குவதை ஏற்க முடியாது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ள புதிய தலை மைச்செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டை யில் இயங்கிய செம்மொழி தமிழாய்வு நூலகம் இவைகளை முடக்கி போடுவதை எப்படி வரவேற்க முடியும்? தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்து செம் மொழிக்காகவே உலகளாவிய மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் டாக்டர் கலைஞர் எனவே தமிழ் மொழி வளர்ச்சி என்பதை கிடப்பில் போடக்கூடாது.

இந்துக்களின் புனித யாத்திரைக்கு மானியம்

இந்து யாத்தீர்கள் சீனாவிற் கும், நேபாளத்திற்கும் புனிதப் பயணம் செல்ல மானியம் வழங் கப்படும் என்று முதல்வர் ஜெயல லிதா நேற்று அறிவித்துள்ளார் இதை நாங்கள் வரவேற் கிறோம்.

இந்தியா என்பது ஆன்மீக பூமி; அதன் வெளிப்பாடே மதத் தின் வழியில்தான் உள்ளது. ஆண்டவனை அடைய ஒவ் வொரு மதமும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள் ளது. கணவன் மனைவி, தோழன், எஜமான் என்ற நிலைக ளெல்லாம் பல மதங்களில் உள்ளன. சில மதங்கள் இறை வனுக்கு நாம் அடிமைகள் என தெளிவாகக் கூறுகின்றன.

எனவே இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மதத்தவரும் இறைவழிபாட்டில் செல்வதை தங்கள் வாழ்வின் கடமையாகக் கொண்டுள்ள னர். ஏக இறைவனை வழிபடு கின்ற முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டு மென ஆசைப்படுகின்றனர். இப்படிச் செல்கின்றவர்களுக்கு அந்தந்த வசதிகளை செய்து கொடுப்பதை யாரும் குறை கூற முடியாது.

இந்த ஹஜ் பயணத்திற்காக இந்திய அரசு வழங்கும் விமான கட்டண சலுகையைத்தான் மானியம் என்கின்றனர். இது கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை.

ஒரு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். மக்கள் தொகை பெருகி விட்ட இந்தக் காலத்தில் 45 லட்சம் பேர் வரை கூடுகின்றனர். திறந்த மைதா னம்; மேலே சூரி யன் கீழே தரை. அத்தனை லட்சம் பேரும் ஒரே இடத்தில் கூடுகின்றனர். ஹஜ் தொடர்புடைய விஷயங்கள் சில நாட்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் இருந்து ஒன்னே முக்கால் லட்சம் பேர் செல்கிறார்கள் என்றால் இந்திய பிரஜைகளுக்கான அவர் களுக்கு மருத்துவம் போக்கு வரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை.

நாங்கள் மானியம் கேட்க வில்லை; மானியம் வாங்கி முஸ்லிம்களும் ஹஜ் பயணம் செல்ல மாட்டார்கள்! விமான கட்டண சலுகையை மானியம் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஹஜ் செல்ல மானியம் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிறது. புனிதப் பயணம் செல்ல இந்துக்களுக்கு மானியம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவிக்கிறார்.

ஜெயலலிதாவின் இந்த துணிச்சலை நான் பாராட்டு கிறேன்.

வேகத்துடன் விவேகமும் வேண்டமா?

நிர்வாகத்தை கொண்டு செல்வ தில் வேகம் காட்டுகிறார் ஆனால் விவேகம் இருக்கிறதா என தெரியவில்லை. வேகத் துடன் விவேகமும் இருக்க வேண்டும் அப்போது சரியான அரசாக அது அமையம்.

தமது ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அவர் சட்டப்பேரவையில் உறை யாற்றிய போது அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளாக வெளியிடப்பட்ட திட்டங்க ளெல்லாம் தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதைத்தான் நிறைவேற்றியுள்ள தாக சொல்லியுள்ளார்.

கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு கலைஞரின் தி.மு.க அரசு 3.50சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனை உயர்த்தி தர வேண்டு மென கோரிக்கை வைத்தோம். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவதாக கலைஞர் வாக்களித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டங் களில் உறையாற்றிய ஜெயல லிதா அம்மையாரும் மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ் லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என உறுதி யளித்தார். ஓராண்டு நிறைந்து விட்ட நிலையிலும் முஸ்லிம் களின் இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்பட வில்லை என்பது வருத்த மளிக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

பேட்டின் போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தூத்துக் குடி மாவட்ட தலைவர் பி.மீராசா, செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதல் ஹஸன் மாநில தணிக்கைகுழு உறுப்பினர் இபுராஹிம் மக்கி காயல்பட்டினம் நகர தலைவர் வாவு நாசர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக