புதன், 2 அக்டோபர், 2013

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

நத்தர்ஷா வலியுல்லாஹ் தர்கா பகுதியில் உள்ள சகோ தரர் ஜே.கே.வஜீர் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண் டிருப்பவர்.திருமண நாளில் வர இயலாமல் சேலம் மாநாட்டில் பங்கேற்க வேண்டியதாயிற்று. எப்படியாவது, தனது இல்ல விழாவில் என்னையும் பங்கேற்கச் செய்திட வேண் டும். என்று விடாப்பிடியாக இருந்து, 

27.9.13 வெள்ளிக்கிழமை மாலையில் திருமண வரவேற்பு விழா என்று ஏற்பாடு செய்து, நம்மையெல்லாம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை அளித்தி ருக்கிறார்.

இந்த விழாவுக்கு வர வேண்டுமானால் மாநகர் மாவட்டப் பொருளாளர் தம்பி அமீருத்தீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்த போது வேலைப்பளு மற்றும் உடல்நிலை காரணமாக வர இயலாதே என கூறி விழாவுக்கு வாழ்த்து கூறினேன். 


ஆனால், எழுத்தரசு ஏ.எம். ஹனீப் சாஹிப் தொலைபேசி யில் என்னை விழாவுக்கு வந் திட வேண்டும் என்றார். அவரின் அன்பான அழைப்பை ஆணை யாக மதித்து இங்கே உங்கள் முன் நிற்கிறேன்.

காரணம் நான் பேராசிரியர் தான். ஆனால், எனக்கு ஹனீப் சாஹிப் ஆசானாக இருந்து இயக்கத்தில் ஈடுபடச் செய்த பெருமைக்குரியவராவார்.


நத்தர்வலி தர்காவும் முஸ்லிம் லீகும்

இ.யூ.முஸ்லிம் லீக் இயக்க வரலாற்றில் திருச்சிக்கும், தர்கா பகுதிக்கும் சிறப்பான இடம் உண்டு. காயிதே மில்லத் திருச்சிக்கு வரும் போதெல் லாம், அவர்களை திருச்சி ஜங்சனில் இருந்து பாலக்கரை மறுமலர்ச்சி அலுவலகத்துக்கு அழைத்து வருவதற்குச் செல்கிறவர் களில் அதிகம் பேர் தர்கா பகுதியைச் சேர்ந்த வர்களாகவே இருப்பார்கள்.

எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் இதே தர்கா பகுதியில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட வரலாறு இருக்கிறது. மௌலவி குத் புதீன் ஹஜ்ரத் போன்ற பெரிய வர்களின் வழிக்காட்டு தலில் வளர்ந்த ஹனீப் சாஹிப், முஸ்லிம் லீகை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறார். இப்பகுதியில் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பெரும் துணை யாக இருந்த சகோதரர் ஷபியுல் லாஹ் போன்றவர்களை இன்றைக்கு காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இங்கே சகோதரர்கள் ஜி.எம். ஹாஸிம், மூசாகோயா வாழ்த் துரை வழங்கினார்கள். 1982-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்த இருவரும் அப்போது தான் இ.யூ.முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர். முஸ்லிம் லீகில் இணைந்த வர்கள், கட்சி மாறுவதில்லை. இந்த முப்பது ஆண்டுகளில் பிற கட்சிகளை பார்க்கிறோம். பலப்பல கட்சி களில் தாவிக் கொண்டி ருப்போர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், முஸ்லிம் லீகில் இணைந்தவர் கள் யாரும் எங்கும் போனதாக வரலாறு இல்லை. இத்தகைய சேவையா ளர்களை இ.யூ. முஸ்லிம் லீகிற்கு தந்த பெருமை தர்கா பகுதிக்கு உண்டு.

ஹஸ்ரத் சுஹர்வதி, ஜமால் முஹம்மது கல்லூரியில் உர்து, பார்சி பேராசிரியராக இருந் தவர். தர்காவுக்கு உரியவர். திருக்குறளை முதன்முதலில் உர்துவில் மொழி பெயர்த்து வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லாஹ் அவர்களின் மஜாரில் ஜியாரத் செய்து விட்டு இதே வளாகத்தில் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது இரண்டு வகைகளில் என்று வரலாறு கூறுகிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமது முன்னோர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். வாள் எடுத்து போர் புரிந்து வாகை சூடிய பாதுஷாகள், ஷகின் ஷாகள், நிஜாம்கள், நவாபுகள், பரப்பிய இஸ்லாம் மார்க்கத்தை நமது முன்னோர்கள் ஏற்க

வில்லை, நமது முன்னோர்கள் வார்த்தைகள் மூலம் - நபிமார் களும், ஸஹாபாகளும், வலிமார் களும் அவர்களின் வழியில் வந்த - வாழ்ந்து வழி காட்டிய ஆன்மீக மேதைகளின் வார்த் தைகளைக் கேட்டு, அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வு முறையைப் பார்த்து நம்முன்னோர் இஸ்லாத்தை ஏற்றார் கள். இஸ்லாம் மார்க்கத்தின் அமைதித்தன்மை, சாந்தி சமாதான போக்கு, எதையும் இதய சுத்தியோடு நோக்கும், பண்பு நமது முன்னோர்களிடம் இருந்து நாம் பெற்றிருக்கிறோம்.

வாளின் வலிமையைப் பேசாமல், சுத்தசத்திய நித்திய வார்த்தையின் வலிமையை போற்றும் முஸ்லிம்களாக, இந்தியாவின் தென் கோடியான தமிழகம், கேரளம், இலங்கை, மாலத்தீவு, மலேசியா, இந்தோ னேஷியா போன்ற பகுதிகளில் இன்றைக்கும் வாழுகின் றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத சிங்கங்கள் போலவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியில் அணி வகுத்து செல்லும் தீரர்கள் போலவும், தென்கிழக்கு ஆசிய முஸ்லிம்களாக நாம் இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். நம்மை உண்மையான முஸ்லிம்களாக வாழச் செய்துள்ள வலிமார் களின் வளாகங்களில் இன் றைக்கு இத்தகைய நிகழ்ச்சி கள் நடப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும். 
அன்பியாகளும், வலிமார் களும், இமாம்களும் காட்டிய பாதையில் திருக்குர்ஆன் ஒளியில் - திருநபி (ஸல்) அவர் களின் வழியில் செல்லும் இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு உண்மையான இஸ்லாமிய அடையாளங்கள் எவை? நாம் அணிந்திருக்கும் ஆடைகளா? போட்டிருக்கும் தொப்பியா? வைத்திருக்கும் தாடியா? என்றால் இவையெல்லாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங்கள் ஆகிவிடுவது இல்லை.

மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், வக்ஃபுகள், கப்ருஸ்தான்கள், தர்காகள், ஷரீஅத் சட்டங்கள், நமது வணக்க வழிபாட்டு முறைகள் போன்றவைகள்தாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங் கள் ஆகும்.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப் பதற்குதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் இந்த பேரியக்கத்தை நமது முன் னோர்கள் உருவாக்கி தந்தி ருக்கிறார்கள்.

முஸ்லிம் லீகின் எழுச்சி

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது. 

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் இதில் பங் கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது. 

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் மகஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறு மையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். 

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை. 

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள். 

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது. 

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். 

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார். 

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:

`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெ மில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்கள். 

வார்டு தலைவர் ஷேக் பாவாதீன் நன்றி கூறினார். மவ்லானா உமர் பாரூக் மஹலரி துஆ ஓதினார். வஜீர் குடும்பத் தினர் எல்லோருக்கும் விருந்து உபசரிப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக