புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -2

உமர் அலி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வந்து உமர் ரலி அவர்களின் சமூகம் வந்து " எனக்கு திருமணம் ஆகவில்ல ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை" என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள் தன் வாளை உருவி " செய்த தப்பை மறைக்க முடியாமல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தப்பிக்கலாம் என்று எண்ணி வந்தாயோ " என்று கூறி அவளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க எண்ணினார்கள்
அந்தப் பெண்ணும் " கலீபா அவர்களின் தீர்ப்பு நான் மனமுகந்து ஏற்கத் தயார் ஆனாலும் இறைவனின் மீது ஆணையாக நான் எந்த ஆணுடனும் தொடர்பு கொண்டதில்லை " என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள அலி ரலி அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்
அலி ரலி அவர்கள் அந்த பெண்ணிடம் , மூன்று மாதங்களுக்கு முன் நீ எங்கே இருந்தாய் ?
" அக்காள் வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது அங்கு போய் இருந்தேன் என்றாள்
"போகும் வழியில் நடந்து பற்றி விபரமாக சொல் "
இயற்கையின் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க ஒதுக்குபுறமான ஒரு மரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு அந்த மரப் பொந்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்
உடனே உமர் ரலி அவர்களிடம் " மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்து என்பது பற்றி அரசாங்க பதிவொட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா ? என்று கேட்டார்கள்
உடனே உமர் ரலி அவர்கள்
பதிவேட்டை பார்த்து போது சிறு யுத்தம் நடந்தது யுத்தம் முடிந்ததும் முன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது 5 பேர்கள் தங்கி இருப்பது போர் மரபு என்றார்கள் உமர் ரலி அவர்கள்
"தங்கியிருந்தவர்களை அழையுங்கள் நான் விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள் அலி ரலி அவர்கள்
5 இளம் சஹாபிகளிடம் விசாரணை செய்யும் போது அதில் ஒரு இளம் சஹாபி ஒருவர் "அமீருல் மூமின் அவரகளே . . . . . அன்றிரவு யுத்த கள பாதுகாப்பில் இருந்த போது என்னை அறியாமல் என் விந்து வெளிப்பட்டு விட்டது யுத்த களத்தில் சஹாபிகளின் இரத்தம் சிந்திய பூமி என் விந்து பட்டு கண்ணிய குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து ஒரு மரப் பொந்தில் நான்தான் வைத்தேன் விடிந்ததும் அதை எடுத்து யுத்த களத்தை தாண்டி அப்புறப்படுத்த இருந்தேன் மறுநாள் காலையில் அந்த மரப் பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்கள்
அலி ரலி அந்த பெண்ணின் செய்கை எடுத்து சொன்னார்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் இது இறைவன் சேர்த்த மணப் பொருத்தம் என்றார்கள்
இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது
உமர் ரலி அவர்கள் " இந்த அலீ ரலி அவர்கள் இல்லை என்றால் உமர் நாசமாக போயிருப்பான் என்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக