புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -9

அலீ ரலி அவர்களின் நினைவு தின சிந்தனைகள்
ஒரு சமயம் பெண் அலீ ரலி அவர்களிடம் அலறி அடித்துக் கொண்டு வந்தாள்
" என் குழந்தை மோட்டு மீது ஏறிக் கொண்டு அங்கேயே இருக்கிறது நான் கூப்பிட்டால் குழந்தை வரமாட்டேன் என்கிறது அதை அப்படியே விட்டு விட்டால் கீழே விழுந்து விடுமோ என எனக்கு பயமாக இருக்கிறது இது ஆபத்து என்பதை புரிந்து கொள்ளக் கூடிய வயதும் அதற்கில்லை சைக்கினை காட்டினால் அதை அது புரிந்து கொள்ள இயலவில்லை பல முறை அதற்குப் புகட்டும் பாலைக் காட்டினேன் அது தன் முகத்தை திருப்பிக் கொள்கிறது என் மனம் ரொம்பவும் பதறுகிறது" என்றாள்
அவளைப் பார்த்து அலீ ரலி அவர்கள் "இன்னொரு குழந்தை அந்த மோட்டு பக்கம் காட்டும் போது அந்த குழந்தை இந்தக் குழந்தையின் பக்கம் வந்து
விடும் மேலும் தன் தாயின் கையில் இன்னொரு குழந்தையைப் பார்க்கும் போது உடனே தன் தாயுடன் சேரவே விரும்பும்"" என்றார்கள்
அவ்விதமே செய்யப்பட்டு குழந்தையும் காப்பாற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக