வியாழன், 16 ஜூன், 2016

மழையில் என் வீடு

மழையில் தனியாக வீடு திரும்பிகொண்டிருக்கிறேன்
சட்டெனெ குழந்தைகளை
நினைத்து விடுகிறேன்.
அது ஆழமான திடுக்கிடலை
உருவாக்குகிறது
கட்டுப்படுத்த முடியாத இருமலில்
நடுங்குகிறேன்.
காரோட்டி கருணையுடன்
தண்ணீர் தருகிறான்
மழையில் என் வீடு
எங்கோ வெகு தொலைவில்
இருக்கிறது.
அல்லது
அப்படி ஒன்று இருப்பதாக
நம்ப விரும்புகிறேன்.
- மனுஷ்ய புத்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக