புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -7

அலி ரலி அவர்கள் கோவேறு கழுதையில் வேகமாக பயணம் செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு பெண் " என் உடன் பிறந்தவன் இறந்து விட்டான் அவன் இறக்கும் போது 600 திர்ஹம் சொத்து விட்டுச் சென்றான் அதில் என் பங்கு ஒரு திர்ஹம்தானே எனக்குரிய பங்கு . ? என்று அவள் கேட்டாள்
உடனே அலி ரலி அவர்களின் இயற்கையாக அமைந்த கணித அறிவு துரிதமாக வேலை செய்தது
ஒருவனுக்குத் தங்கையான இவள் ஒரு திர்ஹம் பங்கு பெற வேண்டுமானால் இவளுடன் யார் யார் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டு அக்கணமே அவர்கள் பதில் அளித்தார்கள
" உன் உடன் பிறந்தவன் 600 திர்ஹம்களையும் இரு பெண் மக்களையும் , தன் தாயையும், மனைவியையும் , 12 சகோதரர்களையும் , உனக்கும் விட்டுச் சென்றான்
அந்த 600 திர்ஹம்களில் இரண்டு மக்களுக்கும் இறைவன் குர்ஆனில் சொல்லிபடி 400 ம் , தாய்க்கு 100 ம் , மனைவிக்கு 75 ம் , சகோதரர்கள் பன்னிரண்டு பேர்களுக்கும் 24 ம் , உனக்கு ஒரு திர்ஹம் வருகிறது . இது குர்ஆனில் கூறியபடி மிகச் சரியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது
நண்பர்கள் அந்த குர்ஆன் வசனத்தை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக