புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -4

அலீ ரலி அவர்கள் இவ்வளவு அறிவுஞானத்திற்கு மூலக் காரணமாக இருந்தது திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்தவர்களாகவும் குர்ஆனின் ஆழ்ந்த கருத்துக்களையும் தெளிவாக புரியக்கூடியவர்களாகவும் அதே சமயம் குர்ஆனின் வசன நடை நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்
திருக்குர்ஆன் வசனத்தை விளக்குவதற்கு அதே திருக்குர்ஆன் இன்னொரு வசனம் இன்னொரு வசனம் என்று அடிக்கிக் கொண்டே போவார்கள்
திருக்குர்ஆனுக்கு விளக்கம் திருக்குர்ஆனாகத் தானே இருக்க முடியும் என்பார்கள்
அலீ ரலி அவர்கள் கணிதம் மருத்துவம் ,மனோ தத்துவம் ,இயற்பியல் வானவியல் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மீக ஞானம் அதிகம் பெற்று திகழ்ந்தார்கள்
அலீ ரலி அவர்களை இரண்டாம் சுலைமான் என்று நபித்தோழர்கள் குறிப்பிடுவதுண்டு
நபி சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்து ஈடு இணையற்ற அறிஞராய் இருந்தார்கள் அவர்களுக்கு பின் அவர்களைப் போன்ற அறிஞர் என்றால் அது அலீ ரலி அவர்கள்தாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக