அவ்ரங்கசீப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவ்ரங்கசீப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 செப்டம்பர், 2015

அவுரங்கசீப் VS அரவிந்தர் நீலகண்டர்

by ஹமீது ஜாஃபர்
வரலாற்று நிகழ்வுகளில் கண்டறியப்படும் உண்மைகள் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருந்தால் அது கட்டுக்கதை; சொன்னவர்கள் இடது சாரிகள், தாலிபான்கள், ஸ்டாலினிஸ்டுக்கள் etc., etc., பாதமாக இருந்தால் அவைகளே உண்மை; சொன்னவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள். இது ஆர் எஸ் எஸ் காரர்களின் ஓயாத ஒப்பாரி. இஸ்லாத்தைப் பற்றி தாக்கி எழுதினால் அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்; அதுவும் ஒரு முஸ்லிம் எழுதினால் இவர்களுக்கு அல்வா தின்பது மாதிரி. மார்க்க அறிஞர்கள் சிலர் செய்த தவறை சுட்டிக்காட்டி 'இவர்கள் அறிவீனர்கள் ' என்ற தலைப்பில் எழுதியதை தன் வலைப்பக்கத்தில் இட்டு மகிழ்ச்சியடைந்த மஹா புருஷர் திரு அரவிந்தன் நீலகண்டன். இவரால் எப்படி நடுநிலையாகப் பார்க்கமுடியும் ? முஸ்லீம்களுக்கு ஆதரவாக எழுதும் எல்லோருமே இடதுசாரிகள்தான் Nationaly and Internationaly. நல்ல Concept !
மொகலாய மன்னர்களில் அவுரங்கசீப்பை வம்புக்கு இழுக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது. பாவம் அவுரங்கசீப் செய்த ஒரே குற்றம் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது. புனிதமான ஆலயத்தில் பகவான் முன்பு மகா புனிதமான காரியம் நடந்தேறியுள்ளது.. அது ஒன்றும் பிசகல்ல! வர்ணாசிரமத்தில் பிராமணர் எதுவும் செய்யலாம், ராணியை கைங்காரியம் செய்தாலும் புனிதமானதுதான். ஏன் ? மனு தர்மப்படி அவாள் பிரம்மாவின் வாயிலிருந்து படைக்கப்பட்டவாள் ஆச்சே! அதனால்தான் பிரம்மானந்தாக்கள் பிரம்மாநந்தமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் மதவெறியர்கள் அதிலும் குறிப்பாக அவுரங்கசீப் மதவெறியன்; இந்துக்களை கொடுமைப் படுத்தினான்; இந்து கோயில்களை இடித்தான்; ஜெஸ்யா வரி விதித்து இந்து மக்களை கொடுமைக்கு ஆளாக்கினான் என்றெல்லாம் இந்துத்துவாக்களின் குற்றச்சாட்டு.
ஐயா, உங்கள் கூற்றுபடி அவர்கள் மதவெறியர்களாக இருந்திருந்தால், அவர்களின் 1000 ஆண்டுகால ஆட்சியில் இந்தியத் திருநாட்டில் ஒரு அரவிந்த சாமியையோ ஒர் நீலகண்ட சாஸ்திரிகளையோ காணமுடியாது மாறாக ஒரு அப்துல் காதரையும் ஒரு அஹமது ஹஸனையும்தான் காண முடியும். ' யாதும் ஊரே யாவரும் கேளீர் ' என்ற பண்பாட்டைக் கட்டிக்காத்ததினால்தான் இன்று வாய் கிழியப் பேசுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதுபோல் அவ்ரங்கசீப் மதவெறியன்தான். எப்படிப்பட்ட மதவெறியன் என்று பார்ப்போம். ஆனால் எங்கள் பாஷையில் அதற்கு மதஇனக்கம் என்று சொல்வார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் அவருக்கு மனத்ததால் மத நெறியாளர் என்றுகூட சொல்லலாம்.
1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள் ' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதுவும் இடதுசாரி வரலாறாக இருக்குமோ ?
திரு P. N. பாண்டே (தாலிபானிஸ்ட் ?) அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும் ? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது
மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய ' 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-
Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti... பேராசிரியர் எந்தசாரி என்பது நமக்கு விளங்காத விஷயம்!
கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும் ? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்துகிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும் ? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி ? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. ஆனால் இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்ன மிஸ்டர் பாண்டே இடதுசாரியாச்சே! யாரோ ஊர்பேர் தெரியாத முல்லா நசுருதீன் சொன்ன கதையை நம்பியவரை நம்பி மோசம் போய்விட்டார், அவர் என்ன நம்மைப் போல் அறி வாளியா ?
அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை ? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!! ஆனால் இவைகள் புளுகு மூட்டைகளே, இந்து மன்னர்கள் எல்லாம் பக்திமான்கள்.
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி 'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ' '.
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.
அவுரங்கசீப்புக்கு யார் யார் எதிரி:-
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி + அரவிந்தன் நீலகண்டன் எதிரி.
அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை ' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஒளரங்கசீப்பின் மாண்புகள்



ஒரு வீரன் போர்க்களத்தில் கொல்லப்படுகிறான் அவன் இந்துமதத்தின் ஒரு உட்பிரிவை சார்ந்தவன். எரிமேடையில் விறகுகளுக்கு நடுவில் அவன் கிடத்தப்படுகிறான். சிதை மூட்டப்படுகிறது நெருப்பு திகு திகுவென எரியத்தொடங்குகிறது.. 

அவனது மனைவியை நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த ஊர் கும்மியடிக்கிறது. அவள் கதறி அழுகிறாள் அவர்கள் பிடியிலிருந்து திமுறிப்பார்க்கிறாள்.. இழுத்துப்பார்க்கிறாள் ஆனால் தப்பமுடியவில்லை.

ஊரார் சிலர் அவளை சிதையருகே இழுத்துபோய்விட்டனர் இதோ இன்னும் சில விநாடிகளில் அவள் கணவனோடு சேர்ந்து எரியப்போகிறாள்

தனது படையில் யார் இறந்தாலும் நேரில் சென்று மரியாதை செய்வதை முடிந்தவரை கடைபிடித்து வந்த முகலாய பேரரசர் ஒளரங்கசீப் தனது இறுதி மரியாதையை செலுத்த அங்கும் வருகிறார்...

ஊராரின் செயலால் அதிர்சியடைந்த அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெண்ணை தீயில் தள்ளுவதிலிருந்து தடுக்கமுயல்கிறார்

மாமன்னர் ஒளரங்கசீப் தங்கள் மதத்தின் நம்பிக்கையில் தலையிடுவதாக ஊர்க்குடுமிகள் ஓப்பாரிவைக்கிறார்கள்

ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத பேரரசர் ஒளரங்கசீப் உறுதியாக இருந்து அந்த வீரனது மனைவியை உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றிவிடுகிறார்

அதோடு நிற்க்காமல் தனது ஆளுகைக்கு உட்பட்ட எந்தப்பகுதியிலும் உடன்கட்டை ஏறும் இந்த கொடூரப் பழக்கம் இருக்கக்கூடாது என்று தடை உத்தரவும் போட்டுவிட்டு போகிறார்.

- ஒடியன்

முகலாய மன்னர்களிலேயே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்... எப்போதும் வெள்ளை ஆடையை மட்டுமே அணிபவர்... அதில் எந்தவிதமான பட்டினால் ஆன வேலைபடுகளோ இருக்காது... ஒரே ஒரு முத்துமாலையை தவிர வேறு எந்த நகைகளையும் அணிகலன்களையும் அணியாதவர்... மிக குறைவாகவே உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்...

அரசரை காணவேண்டுமானால் மக்கள் அரசர் காட்சி தரும் தர்பார் மண்டபத்தின் ஜன்னல் அருகே நாள்கணக்காக காத்திருக்கும் வழிமுறை இருந்தது, அதை முற்றிலும் தளர்த்தி தன்னை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் சந்திக்கலாம் என்று பிரகடனம் செய்தவர்...

தான் மரணித்துவிட்டால் தனக்கு இறுதி அடக்கத்திற்கான செலவை தான் தொப்பி செய்து விற்ற காசில் தான் செய்யவேண்டும் என்றும், தன் அடக்கத்தலத்தின் மீது எந்தவித கட்டிடமோ அலங்காரமோ செய்யகூடாது என்றும் உறுதியாக அறிவித்து சென்றவர்....

#ஒளரங்கசீப்

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?



அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயாராகுங்கள்..!
அதிர்ச்சி 1
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
அதிர்ச்சி 2
மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அதிர்ச்சி 3
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
அதிர்ச்சி 4
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
அதிர்ச்சி 5
ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.
அதிர்ச்சி 6
அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.
அதிர்ச்சி 7
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
அதிர்ச்சி 8
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.
அதிர்ச்சி 9
''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை.
இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர்.
மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால்,‪#‎கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி‬ மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத ‪#‎தோஷம்பட்டக்கட்டிடம்‬(அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு.
நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.
-----முனைவர் அ. தஸ்தகீர்.
(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)
வரலாற்று ஆதாரம்:
பிஷம்பர் நாத் பாண்டே,
சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்
'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71
மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
P.N.Pande
“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”
P.N.Pande, Islam And Indian Culture, Page 55
இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி :
தொகுப்பு : சகோ. சுவனப்பிரியன்

செவ்வாய், 9 ஜூன், 2015

கோழை சிவாஜி -வீர சிவாஜி


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்:

*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி.
பிறகு "எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,
அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்" என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி.
*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி.
புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,
அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்.
*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார்.
"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன்,
எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீர???சிவாஜி.

*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி.
*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார்.
அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார்.
*நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்" என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி.
*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,
தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்.
*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,
அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்.
என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்" எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!

*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது.
1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது.
சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர்.
அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல்,
கவசமும் அணியாமல்,
இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார்.
*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்.
வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி,
இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள்,
ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி.
*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்.
அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,
திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார்.
இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,
மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்.
வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர்.
அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி.
ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி.
*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப்.
புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்.
பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.
பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்.
அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது.
200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர்.
கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி.
அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார்.
பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார்.
உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர்.
ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது,
ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார்,
உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)

*இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த "வீர" சிவாஜி.
*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப் .
ஆண்டு 1665 ஜனவரி.
பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்.
திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு கடிதம் எழுதினார்.
இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து "சரணடையத்தான் வந்துள்ளேன்.
மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்" எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.
*பிறகு "இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன்.
2000 யானைகளை தருகிறேன்.
அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்.
தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்.
பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்.
உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி.!!!!

கோழை சிவாஜி கோழைத்தனம் தொடரும்....

ஆதார நூல்கள்:
The mughals by Chop singh verma,prakash books 2004,
the fall of the mughal empire of hindustan by Hg Keene.
oxford 1887,
the maraathas 16001818,series: the new cambridge History of india,
by stewart gordon. university of michigan ann arbor.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரிகளைக் குறைத்து மக்களை வாழ்வித்த மன்னர் அவ்ரங்கஸீப்!

ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வரும் முன்னர் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அவற்றைச் சொன்ன நினைவே இல்லாதது போல் நடந்துகொள்வதும் பல முறை மக்கள் பட்டு அனுபவிப்பதுதான்....
அவ்ரங்கஸீப்(ரஹ்…) அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்த உடனே ஏற்கனவே பலகாலமாக இருந்து வந்த சுமார் 80வகை வரிகளைத் தாமாகவே நீக்கி ஆச்சர்யப்படுத்தியவர்.
அவை ஆறுவகைப்படும்.அவற்றுள் இந்து சமய மக்களின்மீது விதிக்கப்பட்ட வரிகள் குறிப்பிடத் தக்க ஒருவகை. (ஆதாரம்:அறிஞர்கள் காஃபீகான் ,மனுச்சி& மோர்லாந்த் மற்றும் Sarkar in Mugal Administration,ref.from “Mirat-I Alam”)
அவர் நீக்கிய வரிகளின் நீண்ட பட்டியலில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சில :-
1. கங்கையில் நீராடும் யாத்ரீகர் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட ஆறேகால் ரூ.வரி;
2.எரிக்கப்பட்ட சடலங்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க விதிக்கப்பட்ட வரி;
3.வட்டி இல்லாக் கடன்கள் மீது விதிக்கப்பட்ட வரி (அவர் காலத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய கடன்களுக்கு வட்டி இல்லை );
4. கீழ்ஜாதி இந்து விதவையைத் திருமணம் செய்துகொண்டால் செலுத்த வேண்டிய வரி.
5.தீபாவளி,பரா அத் இரவுகளில் செய்யப்பட்ட விளக்கு அலங்கார வரி .
6.முஹ்தர்ஃபா’ எனும் தலை வரி; 7.பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கான வரி.
8.கைத்தறி துணிகள் மீதான வரி;
9.தாசில்தார் வரி…. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்திக் காட்டிய மன்னர் அவ்ரங்கஸீப்!








ஆங்கஸ் மேடிஸன் என்னும் பொருளாதார வரலாற்று அறிஞர் அண்மைக் காலத்தில் எழுதிய நூல்கள் மற்றும் ஆய்வேடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட முந்திய பதிவிற்கு நட்புநூல் சகோதரர்கள் காட்டிய ஆர்வம் அசாதாரணமானது! அல்ஹம்துலில்லாஹ்.
அவர் காலத்திற்கு முன்னரே எழுதப்பட்ட“History of India as told by its own Historians vol-2” (எலியட் & டாவ்ஸன்) என்ற நூலில் இருந்து:- அவ்ரங்கஸீப் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு,இங்கிலாந்தின் நாணய மதிப்பைவிட அதிகமாக இருந்தது.
அதாவது 01பவுனுக்கு 08 இந்திய ரூபாய். (பவுன்,ஷில்லிங்,பென்ஸ் என்பன இங்கிலாந்து நாணய முறை)
[பெர்னியர்,தேவ்னோ, பக்த்வார்கான், மனுச்சி, ரமூசியோ ஆகிய வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மற்றும் தஸ்தூர் அமல்(அரசுக் கையேடு) ஆகியவற்றின் அடிப்படையில்] அவ்ரங்கஸீப்பின் ஆட்சிக்கால ஆண்டு வருவாய் 20,32,80,000 முதல் 34,84,00,000 கோடி ரூ. வரை உயர்ந்தே வந்துள்ளது.
“Land Revenue Administration under the Mughals”- என்ற நூலில் மாநிலவாரியான வருவாய் விவரங்கள் 164 முதல் 171வரை உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
நிலவரி வருவாயும் ஏற்றுமதி-இறக்குமதி வருவாயும் அரசின் முதன்மையான வருவாய்களாக இருந்துள்ளன.
----------------------------------------------------------
படத்தில்: அவர் காலத்து தங்க,வெள்ளி,செப்பு நாணயங்கள்.

இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் காட்டிய மன்னர் அவ்ரங்க ஸீப்!


”அகன்ற பாரதத்தை அமைத்தவர் யார்?-அதை
அழகாய் ஆட்சி புரிந்தவர் யார்?
மொகலா யர்களின் வழியினில் வந்த
முஸ்லிம் அவ்ரங்க ஸீப் அல்லவா?”
---இது நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாடல் ஒன்றின் பகுதி.
அவர் ஆட்சியின் சிறப்புகளில் ஒன்று:-
”கி.பி.1700-இல் மொகலாயப் பேரரசர் அவ்ரங்க ஸீபின் ஆட்சிக் காலத்தில் அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது….அவ்ரங்கஸீபால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து,அதற்குப் பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது…”
---ஆங்கஸ் மேடிஸன் என்னும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார வரலாற்று அறிஞர் எழுதிய ஆய்வு நூல்களை மேற்கோள் காட்டி தி இந்து (17-02-2015) நாளிதழில் `பொருளாதாரம் அறிவோம்’ பகுதியில் த. நீதிராஜன்.
நன்றி திரு த. நீதிராஜன் அவர்களே.