கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூன், 2016

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்

இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா. 

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கடிதங்களுக்கு ஒரு இணையதளம்

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை.
வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை கோர கடிதம் எழுதி தர வேண்டும்.இவ்வள‌வு ஏன் செல்போன் இணைப்பு மாற்றம் அல்லது பில்லிங் தொடர்பான சந்தேகம் எனறால் கூட ஃபார்மலா ஒரு கடிதம் கொடுங்க‌ளேன் என்று கேட்கப்படலாம்.

இப்படி இன்னும் கூட பல நேரங்களில் கடைதம் எழுதும் தேவை இருக்கவே செய்கிறது.கொஞம் ஆர்வம் உள்ளவர் என்றால் அமெரிக்க அதிபருக்கோ அல்லது இங்கிலாந்து மகாராணிக்கோ உலக நடப்பு குறித்து கடிதம் எழுத விரும்பலாம்.

பலருக்கு அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதும் நிர்பந்தமும் ஏற்படலாம் என்பது மட்டுமல்ல இந்த வகை கடிதங்களை எழுதுவதற்கு என்று ஒரு முறை உள்ளது.ஒரு இலக்கணம் இருக்கிற‌து.அதோடு ஆங்கில புலமையும் தேவவைப்படும்.

ஒரு கடிதத்தை எப்படி துவங்குவதில் இருந்து என்ன மாதிரியான வாசகங்களை போடுவது என்பது வரை பல நுட்பமான அம்சங்கள் ஒரு நல்ல கடிதத்தின் பின்னே இருக்கிறது.அதோடு முகவரியை எங்கே குறிப்பிடுவது ,கடிதம் பெறுபவரை எப்படி விளிப்பது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டு நல்ல கடிதத்திற்கான வடிவம் பிடிபடாமல் நீங்கள் தடுமாற நேரிட்டால் உங்களுக்கு வழிகாட்ட ‘நைஸ்லெட்டர்.காம்’ இணையதளம் இருக்கவே இருக்கிறது.

கடிதம் எழுதும் தேவை உள்ளவர்கள் இந்த தளத்தில் நுழைந்துவிடால் போதும் சுலபமாக எல்லா வகையான கடிதங்களையும் எழுதிக்கொள்ளலாம்.

அடிப்படையில் கடிதம் எழுதுவதற்கான செயலி என்று இதனை கொள்ளலாம்.இதன் மூலம் கடிதம் எழுதுவது இமெயில் அனுபவது போல மிகவும் சுலபமானது.

தளத்தின் முக‌ப்பு பக்கத்தில் உள்ள கடித படிவத்தில் பெயர்,நாள்,பெறுபவர் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்துவீட்டு அதன் கீழே கொடுக்கபடுள்ள இடத்தில் விவரத்தை டைப் செய்தால் போதும் கடிதம் ரெடி.மற்றபடி வடிவம் முறை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.ஒரே கிளிக்கில் கடிதம் அதற்குறிய வடிவில் தயாராகிவிடும்.அப்படியே டவுண்லோடு செய்யாலாம். அல்லது நம் கம்ப்யூட்டரில் மாற்றிக்கொள்ளலாம்.

கடித வடிவம் மட்டுமல்ல எழுதுவதே தகாராறு என்றாலும் கவலை வேண்டாம். இந்த தலத்திலேயே பல மாதிரி கடிதங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கொண்டு பெயரை பட்டும் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.

ராஜினாமா செய்வது முதல் வேலைக்கான நேர்க்காணலுக்கு பின் அனுப்ப வேண்டிய கடிதம் என பல விதமான கடித மாதிரிகள் உள்ளன.தேவை இருந்தாலோ அல்லது நேரம் இருந்தாலே சென்று பாருங்கள்..எளிமையான அழகான‌ பயனுள்ள‌ சேவை.
—-