இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2014

அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா



அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல்அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ! மௌலவீ HMM இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும் . ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே, 01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள் . இவர்கள் அனைவரும் வலீமார்களேயாவர். அவர்களில் மூன்றாமவரே நமது ஞானக்கடல், ஆஷிகுர் றஸூல் குதுபுஸ்ஸமான் அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களாகும் .

தந்தை சுலைமான் வலீ , இவர்களுக்கு “சதகத் ” என்று தமது தந்தையின்பெயரையே சூட்டினார்கள் . கல்வி தங்களது ஏழு வயதில் தன் தந்தையிடம்திருக்குர்ஆனை ஓதி முடித்து, அதை மனனம் செய்து மார்க்க அடிப்படைச் சட்டங்களைக் கற்ற சதகத் ( றஹ் ) அவர்கள் உயர் கல்விக்காக தன் தந்தையின் பள்ளித் தோழரும் கீழக்கரை தாறுல்  உலூம் அறபுக் கல்லூரியின் அதிபருமான மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் திறன் படக்கற்று தலை சிறந்த ஆலிமாகத் திகழ்ந்தார்கள். திருமணம் திருமண வயதையடைந்த மகான் அவர்களுக்கு பெற்றோர் மேலைப்பாளயத்தைச் சேர்ந்த இறை நேசர் பரம்பரையில் தோன்றிய மர்யம் எனும் மங்கையைத் திருமணம்செய்து வைத்தனர். மனைவியுடன் காயல்பட்டணம் வந்த மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அங்கு வாழ்ந்து, ஒரு ஆண் பிள்ளையையும் ஐந்து பெண் மக்களையும் பெற்றார்கள் . அவர்கள் முறையே, அஷ்ஷெய்கு முஹம்மது லெப்பை றஹ்மதுல்லாஹ்அலைஹி, கதீஜா, ஆமினா , ஸைனப்,உம்மு ஹானீ , ஸாறா ஆகியோராவர் .

இப்படியும் ஓர் அற்புதம் ஷெய்குனா சதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அதிக காலங்களில் மக்காவுக்குச்சென்றே ஐந்து வக்துக்களையும் தொழுது வந்தார்கள் . ஒரு நாள் வீட்டில் ஒரு குழந்தையைத் தூக்கியவர்களாக இருக்கும் நிலையில் கஃபாவுக்குச் செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது . ( இந்நிலை அவ்லியாஉகளுக்கும் , நபீமார்களுக்கும் ஏற்படும் நிலையாகும் .) குழந்தையுடன் சென்ற அவர்கள் கஃபாவில் ஒரு இடத்தில் குழந்தையை வைத்து விட்டு இறை முனாஜாத்தில் இருந்து அவர்கள் அந்த ஆன்மீக நிலையிலேயே ஊர் வந்து விட்டார்கள் .

ஊர் வந்த போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நிலை தணிந்து தான் தூக்கிச்சென்ற குழந்தையின் நினைவு வந்தது . அதை அங்கிருந்த  முஹிப்பீன்களிடம் சொல்லும் போது அவர்களுக்கு பணிவிடை செய்யும் “காதிமஹ் ” பணிப்பெண் அதைக்கேட்டு உடன் அவர் மக்கா சென்று குழந்தையைத்தூக்கி வந்தார் .இது அனைவருக்கும்வியப்பை ஏற்படுத்தவே அப்பணிப்பெண்ணிடம் இந்த உயர்நிலை உமக்கு எப்படி ஏற்பட்டது ? என்று இருந்தவர்கள் கேட்டனர் .அதற்கு அப்பணிப் பெண்“எமது சங்கைமிகு ஷெய்கு நாயகத்திற்கு நான்இக்லாஸுடன்பணி செய்து வந்துள்ளேன் .”அவர்கள் அணிந்து கழட்டிய உடைகளை நான் கழுவுவது வழக்கம் .அவர்களது உடையைக் கழுவும் போதெல்லாம் கழுகிய தண்ணீரில் பறக்கத்தை நாடி நான் குடித்து வந்தேன். அதன் காரணத்தால்தான் அல்லாஹ் எனக்கு இந்தநிலையைத் தந்தான். எனது தறஜஹ்வை உயர்த்தினான்என்று சொன்னார்கள் .பணிவிடை செய்த பெண்ணுக்கே இந்நிலையென்றால், அவ்லியாஉகள் குத்புமார்களுடைய மாண்பு எப்படி இருக்கும்.

மீக்காயீல் (அலை ) அவர்களும் சதகதுல்லாஹ் அப்பாவும் !

ஒரு நாள் அவர்கள் காயல் நகரிலுள்ள இரட்டைக் குளம் பள்ளியில்அமர்ந்து மார்க்க ஞான போதம் செய்து கொண்டிருக்கும் போது அந்தமான் தீவில் மழையை இறக்குவதற்காகச்சென்று கொண்டிருந்த மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சதகதுல்லாஹ் அப்பாவிடம்வந்திறங்கி உரையாடினார்கள். அப்போது அவர்களிடம் இந்தவூரில்மழையின்றி பஞ்சத்தால் மக்கள்நலிகின்றனர் . இங்கும் மழையை இறக்கிச்செல்லுங்கள் என்று வேண்டினார்கள் . அதன்படி மீக்காயீல் மழையை இறக்கிச்சென்றார்கள். மக்களின் பஞ்சம் சதகதுல்லாஹ் அப்பா அவர்களால் மறைந்தது. மேலும் அவர்கள் அப்பள்ளியில் வைத்து மக்களுக்கு உபதேசம் செய்த போது பள்ளியின் தூண் அழுததாகவும்அதில் நீர் சுரந்ததை மக்கள் கண்டதாகவும்சான்றுகள் சொல்கின்றன .மாண்பும் மகத்துவமும் இமாம் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹ் அல் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் சாதாரண அறிவுடையவர்களல்லர் . காயல் நகர் மற்றுமுள்ள உலமாஉகளிடமும்உங்களில் அறிவால் சம்பூரணத்துவம் பெற்றவர் யார் ? என்று கேட்பின் அனைவரும் ஒரே குரலில் சதகதுல்லாஹ் என்றே சொல்வார்கள், தர்க்கலைப் பீர்முஹம்மது வலியுல்லாஹ்விடம் மார்க்க விவாதம் செய்ய உலமாஉகளால்அனுப்பப்பட்ட அறிவுப் புலி. ஷரீஅத்மேதை .பதினான்கு வகை ஞானங்களையும்அறபு மொழிக்கலைகளையும் கற்றறிந்த மாமேதை . இந்திய தேசத்தின் மாண்புக்குரிய காழி நீதிபதியாக இருந்தவர்கள் . மக்காவிலும் மதீனாவிலும் உள்ள மாமேதைகளுக்குக் கிதாபு ஓதிக்கொடுத்தவர்கள். கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ( ஷெய்கப்துல் காதர்) அவர்களின் மெய்ஞ்ஞான குரு. உமறுப்புலவர் அவர்களின் ஸீறாவுக்கு உரை கொடுத்த பெருந்தகை. அண்ணல் நபீ ( ஸல்) அவர்களில் அன்பு கொண்டு “பனா ”தன்னை மறந்தவர்கள்.அல்லாஹ்வை அறிந்த ஆரிபீன்களில் ஒருவர் . மலக்குகளுக்கும் ஜின்களுக்கும் ஓதிக் கொடுத்தவர்கள்.அவர்களின் மகத்துவம் அனந்தம், மாண்புகள் அதிகம்!

“ வித்ரிய்யஹ் ” தந்த பரிசு !
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ( ஸல்) அவர்கள் மீது அதிக அன்பு கொண்டு வாழ்ந்த அப்பா அவர்களுக்கு பக்தாதைச் சேர்ந்த முஹம்மத் பின் அபீ பக்ரில் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் அறபியில் எழுதப்பட்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அதில் அறபு அட்சரங்கள் 29 எழுத்துக்களுக்கும் 21 இரண்டடிப்பாக்கள் வீதம் எழுதியிருந்தார்கள் . அதை சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள் . கனவில் நபிகள் கோமான்! மாதிஹுர் ரஸூல் இமாம் முஹம்மத் பின் அபீ பக்ர் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் 1218 கவிதையடிகளைக் கொண்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வைப் பூர்த்தி செய்த அன்றிரவு ஹிஜ்ரி 652 “உந்துலிஸ்” ( ஸ்பெய்ன்) தேசத்தில்  “குர்னாத்தா ” எனும் ஊரில் இருந்தார்கள் . அவர்கள் சொல்கிறார்கள் -அன்றிரவு கனவில் நபி ( ஸல் ) எனது கிதாபைக் கையில் வைத்து பக்கம் பக்கமாகப் பார்த்து மகிழ்ந்து எவ்வளவு அழகாக எனது மத்ஹை எழுதியுள்ளீர் . மிக அழகாக இருக்கின்றதென்று அருகில் நின்ற தோழர்களிடமும் அதைப்பார்க்கும்படி கொடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சஹாபாக்களில் ஹழ்றத் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹுஅவர்களை மட்டுமே கனவில் இன்னார் என்று தெரிய வந்தது . மற்றவர்கள்
யாரென்பது புரியவில்லை .கண்விழித்து விட்டேன் . எனது மத்ஹை றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டேன் . என்று ! சதகதுல்லாஹ் அப்பாவின் ஆசை !
அண்ணல் நபீ மீது காதல் கொண்டு மகான் முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் எழுதப்பட்டிருந்த ( 29 x 21 = 609 x 2 = 1218 அடிகள்) வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை மீண்டும் மீண்டும் ஓதிய எங்கள் மகான் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நபிகள் மேல் காதல் அதிகரித்தது . அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்த அறபு மொழி ஆற்றல் அவர்களையும் எழுதும் படி சொன்னது .

“நபீகளின் புகழ் ” எனும் காதலால் உந்தப்பட்ட மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் இப்னு அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி எழுதிய இரண்டிப் பதத்துக்கும் மூன்றடிப் பாக்களைச் சேர்த்து ஐந்தடிப் பதமாக அமைத்ததுடன் 21 பைத்துக்களுடன் மேலும் ஐந்தடிப் பதங்கள் கொண்ட எட்டு பைத்துக்களும் சேர்த்து எழுதினார்கள். அத்துடன் “மீம்” என்ற எழுத்துக்கு மட்டும் ஏனைய எழுத்துக்களுக்குப் போல் 29 பைத்துக்களை எழுதாமல் ஐயடிகள் கொண்ட ஒரு பைத்தைக் கூடுதலாக எழுதி முப்பது பைத்தாக்கினார்கள். மொத்தமாக அவர்கள் எழுதிய பைத்துக்கள் 1496 ஆகும். இவை 2992 கவிதை அடிகளாகும். எனவே, முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கவிதை அடிகள் 1218 இமாம் சதகதுல்லாஹ் அவர்கள் எழுதிய 2992 அடிகளும் சேர்ந்து மொத்தம் 4210 கவிதையடிகளாகும். அறபு மொழியில் 29 எழுத்துக்களுக்கும் பைத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாலும் 29 என்பது ஒற்றைப்பட உள்ள எண்ணாகையாலும் “ஒற்றைப்படையானது” என்ற பொருளில் இதற்கு “வித்ரிய்யஹ் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் கவிதை நயமும் பொருட் செறிவும்கொண்டுள்ளது.

கவிதைகளில் நபீ புகழ் ஓதும் இக்காப்பியம் போல் நீண்டதோர் காப்பியம் இதுவரை தோன்றவில்லை என்பது அறிஞர்களின் முடிவாகும். இக்காப்பியத்தில் நபிகளின் “முஃஜிஸாத் ” அற்புதங்கள், நபிகளின் அகமியங்கள் நடந்தயுத்தங்கள், சஹாபாக்களின் மாண்புகள், நபிகள் தமதும்மத்தின் மீது கொண்டிருந்த கருணைகள், நபியன்பின் முக்கியத்துவங்கள் , சஹாபாக்களின் வீரச்செயல்கள் நிறைந்துள்ளன . அத்துடன் அவர்கள் அல்லாஹ்வுடன் செய்த முனாஜாத்துக்களும் உள்ளன . இதில் மகானவர்கள் தன்னை ஒரு பெரும் பாவிபோல் கருதி தான் பெரும்
குற்றமிழைத்தவனென்றும் தன்னை மன்னித்து நபிகளுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் . குற்றவாளிகளின் இழி நிலையை தமதாக்கிக்கொள்கிறார்கள். பாவிகளுக்கு கைகொடுக்கும் நாயகமே இந்தப்பாவிக்கும் கைகொடுங்களென்று நபிகளிடம்கேட்கிறார்கள் . அந்த உத்தமர் தன்னை தாழ்வாக்க் கருதி தன்னை இழிமைப்படுத்திக்கொள்வதை என்னென்று சொல்வேன். மாணிக்கம் மலத்தில் கிடந்தாலும் அது மாணிக்கம்தான்.
மகான் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் பாவிகளையும் அவர்களது பாவங்களையும் தாமாகவும் தாம் செய்ததாகவும்சொல்லியிருப்பது தன்னை , தனது நப்ஸை இழிவுபடுத்துதற்கேயாகும் . அத்துடன் பெரும் பாவிகளுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் நபிகள் நாயகத்தின் அன்பும் உண்டென்று காட்டுவதற்காகவுமேயாகும் . இதை விளங்காத சிலர், இறை ஞான வழியைப் புரியாத பலர் அவர்களைக் கீழ்த்தரமானவர் என்பதும் புனித வித்ரிய்யஹ்வைத் தரம் குறைத்துப்பேசுவதும் அவமதிப்பதும் ஆன்மிக குற்றங்களாகும் . இதனால் தண்டனை கிடைக்கும். இதற்குத் தண்டனை மௌத்தாகும்போது கலிமா இல்லாமல் மரணிக்கும் நிலை ஏற்படுவதாகும் . இத்தகையவர் ” ஸூஉல் காதிமஹ் ” கெட்ட முடிவைக்கொண்டு சோதிக்கப்படுவார் . நஊதுபில்லாஹ்! 

மக்பூல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை எழுதிய இமாம்கள் இருவரும் நபிகள்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறை கண்டுள்ளார்கள் .கனவிலும் நனவிலும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு நாள் மக்காவில் சதகதுல்லாஹ்அப்பா நிற்கும்போது ஒரு கனவு கண்டார்கள் .மதீனாவில் இருந்து சிலர் ஒரு ” சுன்தூக் ” ( சன்தூக் ) கில் ஒரு ஜனாஸாவை வைத்து மக்காவுக்குக்கொண்டு வந்து ஜனாஸா பெட்டியுடன் கஃபாவைத் தவாபு செய்கின்றனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாப் பெட்டியிலிருந்து வெளிவருகின்றார்கள் . அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு ஒருவர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கிறார் . இதைப்பார்த்த சதகதுல்லாஹ் அப்பா அவர்களும் ஒரு கேத்தலில் “ஸம்ஸம் ” நீர்கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வுழு எடுக்கக்கொடுக்கிறார்கள். கனவுகளைந்துவிட்டது.இக்கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு முதலில் நீர் கொடுத்தது மாதிஹுர் றஸூல் முஹம்மத் இப்னு அபீபக்ர் பஃதாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும், இரண்டாவது நீர் கொடுத்தது திஹுர் றஸூல் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும்அவ்விருவரும் கொடுத்த நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்களென்றும் அதேபோல் நாம் வெளிப்படுத்திய வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை நபிகள் ஏற்றுக்கொண்டார்களென்றும் சதகதுல்லாஹ் அப்பா அவர்களே விளக்கம் சொன்னார்களாம் .


அவர்களது வித்ரிய்யஹ் ஷரீபஹ்வில் சொல்லப்பட்டுள்ளபடி நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறைகள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் கண்டுள்ளார்கள் .எனவே, மகான் சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கறாமத்துக்களும், அறிவு ஞானங்களும் அனந்தம். அவர்களது புகழ் இன்றும் உலகெங்கும் நிறைந்துள்ளது . இறுதியில் மகானவர்கள் ஹிஜ்ரி 1115 ம்ஆண்டு ஸபர் பிறை 5 வியாழன் இரவு தங்களின் 73ம் வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவை அடைந்தார்கள் .இவர்களது ஜனாஸா கீழக்கரை ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னுள்ளது .இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

புதன், 27 நவம்பர், 2013

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!



( ஆபிதா அதிய்யா )


   

நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )

முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.

ஆகவே, புனிதமிக்க இந்த ஜம்ஜம் தண்ணீரில் அப்படி என்ன தான் சிறப்பு இருக்கிறது என்றால் அதில் அனைத்தும் இருக்கின்றது.

வறண்ட பாலைவனத்தில் உதித்த இந்நீரூற்று பல நூறு ஆண்டுகளாய் வற்றாமல், மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. என்றைக்குமே வற்றாத நீரூற்றாகத் தொடர்ந்து ஒலித்தோடிக் கொண்டிருக்கிறது.

இது ஐந்தடி ஆழமுள்ள கிணறு. இதற்கு அருகில் எந்த நீர் நிலைகளும், நீராதாரமும் மிக்க எந்த வழிகளும் கிடையாது. இந்தக் கிணற்றின் நீர் எப்போதும் தானாகவே பொங்கி வரக்கூடியதாகவும், கோடிக்கணக்கான ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவதோடு, தங்கள் தேவைகளுக்காகத் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கும் நீர் சுரக்கின்றது.

இதில், கால்சியம், மெக்னீசியம் இருப்பதன் காரணமாக நோயைக் குணப்படுத்துகிறது.

இயற்கையாகவே, இதில் ஃபுளூரைடு கலந்திருப்பதால் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய தன்மைகள் உண்டு என்று மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிதவெப்பமான காலத்தில் நீர் நிலைகளில் ‘ஆல்கே’ என்ற பாசி படியும். ஆனால் இக் கிணற்றில் எவ்விதப் பாசியும் படிவதில்லை. மேலும் இது உயிர் – வேதியியல் காரணிகளின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

ஜம் ஜம் தோன்றிய வரலாறு
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், தனது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பருகக் கொடுப்பதற்காக, இந்தப் பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக ஸஃபா, மர்வா எனும் இரு மலைக் குன்றுகளுக்குக்கிடையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் தனது அருட்கொடையினால் இந்த நீரூற்றை ஓடச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“அல்லாஹ் தனது மிகப்பெரும் கருணையை இஸ்மாயீல் (அலை) அவர்களது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மீது பொழிவானாக ! அன்னை ஹாஜரா அவர்கள் அந்த ஜம்ஜம் தண்ணீரை (ஊற்றை) அது எவ்வாறு இருந்ததோ அதன்படி, (அதில் தொட்டி போன்று எதனையும் கட்டாமல்) அதிலிருந்து நீரூற்றாக ஒலித்தோடும்படி விட்டு வைத்தார்கள். ஜூர்ஹூம் என்ற அரபு கோத்திரதார் ஹாஜரா (அலை) அவர்களுடன் வந்து, நாங்கள் இங்கே உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, ஆம் ..! (தங்கிக் கொள்ளலாம்) ஆனால், இந்த நீரூற்றின் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. (என்றால் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்) என்றார்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். (புகாரி)

இவ்வாறே உயிர் வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் அற்ற அந்தப் பாலைப்பெருவெளியில் மனிதர்கள் குடியேறத் துவங்கினர்.

ஜம் ஜம் நீரூற்றின் மறுபிறப்பு !
மக்காவில் முதன் முதலில் குடியேறி ஜூர்ஹூம்கல் நீதமாகவும் நேர்மையாகவும் நடப்பதை விட்டுவிட்டு அடக்குமுறையாளர்களாக மாறிய போது, மக்காவை விட்டும் அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இப்புனித நீரூற்றின் மகத்துவத்தினைப் பற்றி அக்கறையில்லாத காரணத்தால், ஜம்ஜம் நீரூற்று அதன் அருட்கொடைகளை அம்மக்களுக்கு வழங்க மறுத்தது. நீரூற்றை பூமி இழுத்துக் கொண்டது. அதன் பின்பு ஜம்ஜம் திறக்கப்படாமலேயே மறக்கப்பட்டதாகவும் ஆகிப் போனது.

இவ்வாறு பல தலைமுறைகள் வந்து போயின. பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் தலைமுறை வரைக்கும் இவ்வாறிருந்தது. அதன் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் இந்த நீரூற்றை மீண்டும் தோண்டினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மூடப்பட்ட நிலையில் கிடந்த கிணற்றைத் தோண்டுவது போலக் கனவு கண்டார்.

அன்று மக்காவாசிகளிடம் இருந்த கடுமையான இறை நிராகரிப்பின் காரணமாக, ‘இந்தப் பாழ் பட்டுப்போன இடத்திலா தண்ணீரைத் தேடுகிறீர்கள்’ என்று அப்துல் முத்தலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்தார்கள். பின் அந்தத் தொன்மையான கிணறு கஅபாவிற்கு மிக அருகில் தான் உள்ளது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுவதற்காக மக்கா வரும் பயணிகளுக்கு ஜம்ஜம் நீர் எளிதாகக் கிடைப்பதற்குண்டான வழிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றுக் கொண்டார்.

அப்துல் முத்தலிபின் முயற்சியால் ஜம்ஜம் நீரூற்று புதுப்பொலிவை அடைந்தது. அது புனிதமானது என நம்பினார். முக்கியப் பிரச்சனைகளின் பொழுது, ஜம்ஜம் நீரைப் பருகிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கக் கூடியவராக இருந்தார்.

அல்ஹாரித் இப்னு கலீஃபா அஸ்ஸாதீ என்பவர் அறிவிக்கின்றார்கள்:

“குறைஷிகள் தங்களது எதிரிகளைச் சந்திக்கச் செல்லுமுன், அதற்கான தயாரிப்புகளுக்கு முன்பாக ஜம்ஜம் நீரைப் பருகும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தம்முடைய பிரச்சனையின் தீவிரத்தை வெளிக்காட்ட விரும்பும் ஒருவர், ஜம்ஜம் கிணற்றின் அருகிலிருக்கும் பானைகளைச் சேகரிப்பதன் மூலம் அதனை வெளிப்படுத்துவார். பிரச்சனைகளின் போது இந் நீர் தங்களுக்கு அருட்கொடையை வழங்கும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும், பல நேரங்களில் அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாகவும் நடந்திருக்கின்றன.

கிணற்றின் அமைவிடம்
கஅபாவிற்குச் சில அடி தூரத்திலும், மகாமே இபுராஹீமிற்குப் பின்புறத்திலும் இக்கிணறு அமைந்துள்ளது. இப்பொழுது இந்த இடத்தை வட்ட வடிவ அமைப்பிலான மார்பிள் கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும் கஅபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து கீழே அமைக்கப்பட்டுள்ளது. மாசுகளிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்ஜம் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு, இதே பெயரினைக் கொண்ட கிணறுகள் மதீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான அத்தாட்சிகள்

ஜம்ஜம் கிணறு அமைந்துள்ள ‘ஹரம்’ பள்ளிவாசல் தான் உலகிலேயே ஓரிறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் புனிதமிக்க பள்ளிவாசலாகும். இப் புனிதத்துடன் இன்னும் பல அடையாளங்களையும் இவ்விடத்தின் மீது அருட்கொடையாக இறைவன் வழங்கியிருக்கிறான்.

இறைவன் தன் இறைமறையிலே கூறுகின்றான் : “(இறைவணக்கத்திற்கென) மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வீடு, நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரகத்து (அருள்வளம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (இப்ராஹீம் நின்ற இடம்) மகாமே இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்புப் பெறுகிறார்.” (3 : 96-97)

ஜம்ஜம் கிணறுகூட தெளிவான அத்தாட்சிகளில் உள்ளதாகும். வரலாற்றுக் குறிப்பின்படி, இப்ராஹீம் (அலை), தனது மனைவியையும், குழந்தையையும் அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் விட்டுவிட்டுச் செல்லும்பொழுது, இறைவனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார்:

“எங்கள் இறைவனே ! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே ! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக ! மேலும், இவர்களுக்கு உண் பொருள்களை வழங்குவாயாக ! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!” (அல்குர்ஆன் 14:37)

வாழ்வாதாரத் தேவைகளில் இறைவன் வழங்கியிருக்கின்ற எல்லாவற்றிலும் முதன்மையானது ஜம்ஜம்.

வற்றாத நீரூற்று

ஜம்ஜம் நீரூற்றின் மற்றொரு சிறப்பம்சம். இது வற்றாத நீரூற்றாகும். இது மக்காவிற்கு, ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வரும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ் தனது முழுமையான அருளை அன்னை ஹாஜரா மீது பொழிவானாக ! அவர்கள் இவ்வற்றாத ஊற்றிலிருந்து (ஜம்ஜம்) நீரை வழிந்தோடும் படிச் செய்வதற்குக் காரணமாக அமைந்தார்கள்.”

(அஹ்மத்)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பில்லியன் கணக்கான மக்கள் இந்நீரைப் பருகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளி அமைந்திருக்கும் மதீனாவிற்கும் இந்நீர் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஜ், உம்ரா செய்பவர்கள் மில்லியன் கணக்கான லிட்டர்கள் இந்நீரை எடுத்துச் சொல்கிறார்கள்.


இதன் சிறப்பு என்னவெனில், எந்த அளவு இந்நீரைப் பருகுகின்றோமோ, அந்த அளவுக்கு அது ஊறிக் கொண்டேயிருக்கும்.

நன்றி : நம்பிக்கை மாத இதழ், மலேசியா, நவம்பர் 2010

கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை

வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது.
     
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். அல்குர்ஆன் 2:282


இந்த வசனத்தின்படி கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி

சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம். வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம். அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும். எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.

யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி

மற்றொரு ஹதீதில்

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி

கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக!

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்?

வியாழன், 19 செப்டம்பர், 2013

மகத்தான நற்பாக்கியங்கள்!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை அழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.
 நன்றி சுவனத்தென்றல் & Engr.Sulthan