ஆன்மீகம்(சூஃபிஸம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம்(சூஃபிஸம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆன்மீகம் அறிவோம் .... - ஷஃபிய்யா காதரிய்யா

ஆன்மாவைப் பற்றி பேசும் கலைக்கு ஆன்மீகம் என்று பெயர்.உடலைவிட ஆன்மா உயர்ந்தது.ஏனென்றால் உடல் அழியும் தன்மையுள்ளது.ஆன்மா அழியாதது.
‘’ உடல் பலத்தைவிட ஆன்ம பலம் மேலானது ஏன் தெரியுமா ? உடல் பலம் கல்லை உடைக்கும் இரும்பை பிளக்கும் ஆனால் , ஆன்மா பலம் சந்திரனையே பிளக்கும் “”
படைப்பின் நோக்கம் :-
இறைவன் அருள் மறையில் கூறுகிறான் :
மனித இனத்தையும் ஜின் இனத்தையும் என்னை வணங்குவத்ற்காகவே தவிற படைக்கவில்லை [ 51=56 ]
ஆனால் குர்ஆனின் விரிவுறையாளர்களின் தலைவர் ஹஜரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இந்த ஆயத்தில் இடம் பெற்றவுள்ள “ லியஃபுதூன் “ [ வணங்குவதற்காக ] என்ற வார்த்தைக்கு “ லியஃரிஃபூன் “ [ என்னை அறிந்து வணங்குவதற்காக ] என்று பொருளாக்கம் செய்துவுள்ளார்கள்
எனவே நம்முடைய அமல்கள் இறைவனிடத்தில் அங்கீிகரிக்க வேண்டுமே ஆனால் இறைஞானம் கலந்த வணக்கம்மாக இருக்க வேண்டுமே தவிர ! ஏதோ சடங்காக ,சம்பிரதாயமாக இருக்க கூடாது .
இறைஞானம் என்பது வெரும் வாய்வார்த்தையால் மட்டும் முழங்குவது அல்ல !
நம்முடைய வாழ்கையின் உயீர் நாடி துடிப்பு என்பதை விளங்கவேண்டும். இதனால் தான்
கல்விகடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :-
“ ஒரு மனிதன் இவ்வுலகில் எல்லாம் பெற்று இறைஞானம் மட்டும் பெறவில்லையானால் எதையும் பெறாதவனைப் போன்றவனாவான்.அதே நேரத்தில் இறைஞானம் மட்டும் பெற்ற வேறு எதைப் பெறாவிட்டாலும் எல்லாம் பெற்றவனைப் போன்றவனாவான்.
இறைஞானத்தின் முக்கியதுவம் :-
நமது இமாமுன இமாமுல் அஃழம் அபூஹனீஃபா [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களிடம் தாங்களு வயது என்ன ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இமாமவர்கள் :- “ இரண்டு “ என்று பதில் கூறினார்கள்.இந்த பதிலைக் கேட்ட அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப், இமாம் முஹம்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இமாம் அஃழம் அபூஹனீஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் திருப்பவும் கேட்டார்கள். இமாம் அவர்களே ! தலைமுடி தாடியெல்லாம் பஞ்சைப் போன்று நரைத்து முதிர்ந்த நிலையில் இருக்கும் தாங்கள்வயது இரண்டு என்கிறீர்களே அதற்கான விளக்கம் யாது என்றார்கள்.அப்போது இமாமுல் அஃழம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான இமாம் ஜஃபார் ஸாதிக் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சமூகத்தில் இரண்டு ஆண்டு தங்கியிருந்து அகமிக ஞானங்களைப் படித்தேன் எனவே அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வாழ்வில் பொற்காலமாக கருதுவதுடன் அந்த இரண்டு ஆண்டுகளைத்தான் என் வயதாகவும் நினைக்கின்றேன் என்று கூறினார்கள்
சூஃபியாக்கள் சொல்லிக்காட்டுவார்கள் :-
“”என்று நீ பிறந்தாயோ அன்றிலிருந்து உனது வயது தொடங்குவதில்லை.எப்போது இறைவனை அறிய முற்படுகிறாயோ அப்போதிலிருந்து உனது வயது ஆரம்பிக்கிறது.””
முதல் பணி :-
இறைஞானத்தை பெறவேண்டும் என்று பயணம் புறப்பட்ட மனிதன் தனது இலக்கை அடைய வேண்டுமானால் முதன் முதலாக அவன் செய்ய வேண்டிய முதல் பணி உள்ளத்தை தூய்மைப்படுத்துவது தான் இறைவன் அருள் மறையில் பதினோரு சத்தியங்கள் செய்துவிட்டு “” உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் வெற்றி கண்டார் ,உள்ளத்தை மாசுபடுத்தியவர் தோல்வி அடைந்தார்”” என்று குறிப்பிடுகிறான்.குர்ஆனில் வேறு எதைச் சொல்வதற்க்கும் இத்தனை சத்தியங்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறைவன் 11 சத்தியம் இடுகிறான் என்றால் அந்த செய்தி எவ்வளவு முக்கியமாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.உள்ளத்தை சுத்தப் படுத்துவது மிக முக்கியமான விசையமா என்று பார்த்தால் இறைவன் தன் தூதர்களை அனுப்பிய நோக்கம் பற்றி கூறிகாட்டும் போது இப்படி சொல்லுகிறான்
“ இறைத்தூதர் மக்களுக்கு இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.மேலும் ஞானங்களை கற்றுக் கொடுப்பார் மக்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்துவார்.
[ 1 ] = ஓதிக்காட்டுவார்
[ 2 ] = ஞானத்தை கற்றுத்தருவார்
[ 3 ] = உள்ளத்தை தூய்மை படுத்துவார்
உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் என்றால் நெஞ்சைப் பிளந்து இதையத்தை வெளியே எடுத்து சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதல்ல பொருள் ‘ நான் – எனது ‘ என்ற ஆணவத்தை அழிப்பது தான் உளத்தூய்மை.
‘’ நான் மறையைக் கற்றவன் ஞானியில்லை தன்னுள் தான் மறைய கற்றக் கொண்டவனே ஞானி என்று தமிழ் கூறும் நல்லுலகம் இயம்பும். நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்துவிட்டால் மட்டும் ஞானியாகி விட முடியாது.
‘ நான் ‘ என்ற அகந்தை மமதையை தன்னுள் மறையகற்றுக் கொண்டால்தான் ஞானியாக முடியும்.
தகுதியுள்ள ஆசான் அவசியம் :-
உள்ளத்தூய்மை பெற்று இறைவனை அறிய கல்வி இருவகைப்படும்
[ 1 ] = தாளைப் படித்து பெருவது
[ 2 ] = ஆசானைப் பிடித்து பெருவது
இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள தாளைப் படிக்கக்கூடாது ஏன் என்றால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.எனவே ஆசானைத்தான் பிடித்து ஆகவேண்டும்.இன்றியமையாத அவசியத் தேவை தகுதியுள்ள ஓர் ஆசானைப் பெருவதுதான் இறைவன் குர்ஆனில் கூறினான்: - [25-59] ‘ ரஹ்மானைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ‘
நல்வழிகாட்டும் இத்தகைய ஆசான் ஒருவருக்கு கிட்டவில்லையானால் அது வழிகேட்டின் அடையாளமென்பதை இறைவன் எச்சரிக்கை விடுக்கிறான்.
இறைவன் யாரை வழிகெடுக்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் ஆசிரியரை [ நபியே ] நீங்கள் நிச்சயம் பெறமாட்டீர்கள். [ 18=17 ]
உலகப்பற்றை துறத்தல் :-
இவ்வுலகில் நாமிருந்தாலும் உலக ஆசை நமது இதயங்களில் நுழைந்து விடாமல் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஆன்மீகப் பாதை அவசியம் “ மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்க்கை “ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இவ்வுலகில் நாம் இருக்கிறோம் என்று சொல்லலாமே தவிர ,வசிக்கிறோம் என்று கூறக்கூடாது ஏனென்றால் ‘ வசித்தல் ‘ என்பதற்கும் ‘ இருத்தல் ‘ என்பதற்க்கும் வித்தியாசமுண்டு .அதனால் தான் வீட்டில் வசிக்கிறான் என்றும் ஜெயிலிலே இருக்கிறான் என்றும் கூறுகிறோம்.
ஏன் தெரியுமா ?
வீட்டிலே கதவுக்கு தாழ்ப்பாள் உட்புறமிருக்கும்.
ஜெயிலில் கதவுக்கு தாழ்ப்பாள் வெளிப்புறமிருக்கும்
வீட்டில் கதவை நாம் சாத்துவோம்.
ஜெயிலில் கதவை பிறர் சாத்துவார்கள்
வீட்டில் நம்விருப்பப்படி வாழ்கிறோம்
ஜெயிலில் பிறர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் !
இவ்வுலகில் நாம் தாமரை இலை நீரைப்போல் இருக்க வேண்டும்,நீர் இலையில் இருக்கும் ஆனால் ஒட்டாமல் இருக்கும்.படகு தண்ணீரில் இருந்தால் தவறில்லை.தண்ணீர் படகுகள் வந்தால்தான் ஆபத்து.
இவ்வுலகில் நாமிப்பது தவறில்லை,உலகம் நம் உள்ளத்துக்குள் வருவது தான் ஆபத்து.
இதனால் தான்
முஹையீதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள் :-
பூமியிலே உள்ள [ எனது தோட்டங்கள் மற்றும் ] செல்வங்கள் பூமியில்தான் உள்ளன. எனது உள்ளத்தில் இறைவன் மட்டும் இருக்கிறான்.
வணக்கம் எவ்வாறு அமைய வேண்டும் மென்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள் :-
இறைவன் நீ பார்ப்பது போன்று வணங்கவேண்டும்.நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடாவது வணங்க வேண்டும்
ராபியத்துல் அதவிய்யா ரழியல்லாஹூ அன்ஹா அவர்கள் இறைவனிடம் அடிக்கடி முறையிடுவார்கள்;-
இறைவனே ! நான் உன்னை வணங்குவது நீ படைத்திருக்கிற சொர்க்கத்தின் மீது ஆசைப்பட்டல்ல.நரகத்தை எண்ணி அஞ்சியுமல்ல நான் உன்னை வணங்குகிறேன் .ஏன் தெரியாது ? உன்னுடைய திருப்பொருத்தம் அடைய வேண்டமென்பதற்காக
வேண்டுகோள் :-
நாம் படைக்கப்பட்டதின் நோக்கமும் மறுமையின் வெற்றியும் நிறைவேற வேண்டுமானால் ஆன்மீகம் அவசியம் என்பதை அறிந்துள்ள சகோதரர்களில் சிலர் இன்றளவும் சொல்கிறார்கள்.
பக்குவம் அடைந்த பிறகு பைஅத் பெருகிறேன்.
நாம் கேட்பது
பக்குவம் அடைந்து விட்டால் பைஅத் எதற்கு ?
பக்குவடைவதற்க்கு தானே பைஅத் .
நோய் நீங்குவதற்குத்தானே மருந்து !
அதை விட்டுவிட்டு நோய் போன பிறகு மருந்துண்ணுகிறேன் என்றால் என்ன அர்த்தம்.
நீச்சல் தெரிந்தபிறகுதான் தண்ணீரில் இறங்குவேன் என்றால் நடக்கிற காரியமா ?
குழந்தை நடைபயில சாதனம் அவசியம்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர விளக்கு அவசியம்
இறைவனை அண்மிக்க ஆன்மீகம் அவசியம் அவசியம் அவசியம்..
வழி கெட்டோர் யார்ராயினும் அவர்களுக்கு நேர் வழி பெற துஆ செய்பவர்களாக நாம்மாக இருப்போம்

சனி, 17 அக்டோபர், 2015

அழகிய முடிவு

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்).
அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.
பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.
ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.
”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).
’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றார்கள் சூஃகபிள்.
மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் 1.அறிபவர்கள், 2.ஆற்றுபவர்கள், 3.ஆகுபவர்கள்.
Knowing ones; Doing ones; Being ones.
இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.
பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.
அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.
அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இல்மத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா”
(அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும், அழகிய முடிவும் அருள்வாயாக”
இறுதியில் அவனாகும் நிலையே அழகிய முடிவு.

ஞாயிறு, 15 மார்ச், 2015

சூஃபி தத்துவங்கள்'

'நான் கடவுளை நேசிக்கிறேன்' என்று சொல்வது எளிது.ஆனால், அதன்மூலம் தொடர்ந்து உங்கள் தற்பெருமையை, தான் என்கிற அகங்காரத்தை (Ego) நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.
' கடவுள் வடிவமற்றவர்,
நீங்களோ வடிவமுள்ளவர்.
அகந்தையே உங்கள்
வடிவமாயிருக்கிறது'
தண்ணீரும், பனிக்கட்டியும் இணைந்து ஒன்றாவதில்லை. ஆனால் பனிக்கட்டி தனது வடிவத்தை இழந்தால் மட்டுமே அவை இரண்டறக் கலந்து கொள்ள முடியும்.அப்படித்தான் உங்கள் விஷயத்திலும். உங்களுடைய தற்போதைய வடிவத்தில் நீங்கள் இறைவனுடன் இணைந்து கொள்ள முடியாது.அத்துடன் உங்களுக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று உங்களுக்குப் பிரியமானவரிடம் உங்களால் நேர்படச் சொல்ல முடியவில்லை. அப்படி உங்களைச் சொல்ல விடாமல் தடுப்பது எது ? அகந்தை. அது இருவரிடமும் இருக்கிறது.அது மோதலை உண்டு பண்ணுகிறது.அகந்தையின் மோதல்!
'அகந்தை ஒரு தீவு,அங்கே
தன்னையன்றி வெறு சஞ்சாரமில்லை
அகந்தை ஒரு பாலைவனம்
அங்கே எதுவும் வளர்வதில்லை '
பக்கத்தில் உள்ளவரிடம் தன்னுடைய நேசத்தைச் சொல்ல முடியாதவர்,' நான் இறைவனை நேசிக்கிறேன்' என்கிறார் !
உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இறைவனின் படைப்பு இருக்கிறது.உங்கள் இருவருக்கும் இடையே மனிதத்தன்மை இருக்கிறது.
மனிதர்களில் பலரும் மதத்தின் புறப் பகுதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் எல்லோருமே மத நம்பிக்கை -சமயப் பற்று கொண்டிருப்பதாய் உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆயினும் மதம் தன்னளவில் தனிச் சிறப்புடையதாகவே இருக்கிறது.எனினும் அங்கே மனிதத்தன்மையும் தேவைப் படுகிறது.மனிதர்கள் இறைவனின் படைப்பு. ஆனால், இறைவனுடன் நீங்கள் நேரடித் தொடர்பை ஏற்புத்திக் கொண்டுவிட முடியாது.இறைவனின் படைப்பின் மூலமே அவனை நீங்கள் நேசிக்க முடியும்
'இயற்கையை நேசிப்பது ,
உயிரினங்களை நேசிப்பது,
சக மனிதர்களை நேசிப்பது
இவற்றின் மூலமே அது சாத்தியம்'
உங்கள் அகந்தையின் அனேக பரப்புகளை கடந்து நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.
அகந்தையின் வழிகளை (செயல்முறை)நீங்கள் அறிந்திருந்தால்தான் நீங்கள் அதிலிருந்து விடுபட முடியும்.நீங்கள் அகந்தையிலிருந்து விடுபடாதவரை இறைவனுடனான தொடர்புக்கு சாத்திமில்லை.உங்களுக்கும் மெய்ம்மைக்கும் இடையில் அகந்தையே தடையாயிருக்கிறது.
" எங்கே அகந்தை முடிவுறுகிறதோ
அங்கே தொடங்குகிறது
சூஃபியின் ஞானவழி!"
(சி.எஸ்.தேவ நாதன் )

சனி, 20 செப்டம்பர், 2014

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

சனி, 10 டிசம்பர், 2011

ஹக்கும், கல்கும் ஒன்றா?

ஹத்தாத் இமாம் தரும் விளக்கம்.

இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் அவர்கள் ஹூசைன் (ரலி) அவர்களின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தம் மூதாதையின் பெயரால் “ஹத்தாதி” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1044 இல் தர்யம் எனும் ஊரில் பிறந்தார்கள். பல அறிஞர்களிடமும், குறிப்பாக காளி ஸஹல் இப்னு அஹ்மது பாஹஸன் என்ற பெரியாரிடம் கல்வி கற்ற இவர்கள், சிறந்த அறிஞராகவும், மார்க்க மேதையாகவும், மெஞ்ஞானியாகவும் ஆகி பெரிய இமாமென மக்களால் பிற்காலத்தில் பாராட்டுப் பெற்றார்கள்.


பெரியார்களின் அடக்க விடங்களைத் தரிசிப்பதில் பேரார்வம் காட்டிய இவர்கள், ஹூது (அலை) அவர்களின் அடக்க விடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசனம் செய்தார்கள். ஹிஜ்ரி 1080 இல் மக்கா, மதீனா ஆகிய நகரங்களல் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கினார்கள். அப்போது இவர்களிடம் ஏராளமானோர் தீட்சை பெற்றனர்.சிறந்த இறைநேசரச் செல்வரான இவர்கள் தம்மிடம் வருபவர்களின் மனதிலுள்ள விருப்பங்களை “கஷ்பின்” (ஞானோதயத்தின்) மூலம் அறிந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும், அதன் காரணமாக அவர்களின் விருப்பங்கள் நிறைவேறின என்றும் கூறுவர்.இவர்கள் ஹிஜ்ரி 1132 இல் காலமானார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் அன்னஸாயிஹூத்தீனிய்யா, ரிஸாலதுல் மஜீத், இத்திஹாபுஸ் ஸாயில், அல் கிஸ்முத்தாலிது பீ கலாமில் மன்சூர், ரிஸாலதுல் முஆவனா ஆகியவை, அவற்றில் இறுதியாக கூறப்பட்ட நூலின் ஒரு பகுதி தமிழில் காயல்பட்டணம் வள்ளல் வாவு ஷாஹுல் ஹமீது அவர்களின் நினைவாக அவர்களின் மக்களால் அச்சிட்டப்பட்டு வெளிவந்துள்ளது. ஹத்தாது (ரஹ்) அவர்களின் றாதிபு சிறப்பு மிக்கதாகும் அதனை ஓதிய மக்களின் நாட்டங்கள் இறையருளால் நிறைவேறுகின்றன.

இறைவழி நடக்கும் நல்லடியார்களின் ஆத்மீக முன்னேற்றத்தை மனதிற் கொண்டு அவர்கள் இயற்றிய றாதிபு வெள்ளிக்கிழமை தோறும் இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளிலும், குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஊர்களிலும் பக்திப் பரவசத்தோடு ஓதப்பட்டு வருகிறது.ஹத்தாது றாதிபு என்ற பெயரால் அழைக்கப்பட்டுவரும் றாதிபு, பல அவ்றாது ஒதல்களை உள்ளடங்கியதாக இருக்கின்றது. அதில் பல அவ்றாதுகளைச் சேர்த்த இமாமவர்கள் முனாஜாத்து அடிப்படையில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்கள். அவை ஏகத்துவ ஞான தத்துவங்களை விளக்கமாக கூறுகின்றன. அந்தப் பாடல்களிற் சில பின்வருமாறு.

இலாஹில் கல்கு மித்லஹூபாப் அலா மாஅன் லதல் அஹ்பாப் பமாஉன் பில் பனாஇ ஹூபாப் வஹால் பகாஹூ யா அல்லாஹ். பஐன அன இதா அந்தா பிதாதீ தாயிமன் குந்தா பமா பிந்து வலா பிந்தா வலா ‘தா’ பைனனா அல்லாஹ் இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமுழிபோன்றது. குமுழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான்.

அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான். இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்றபொழுது ‘அன’ நான் என்பது எங்கே? எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை. இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை. மேற்கூறப்பட்ட பாடல்கள் மூலம் இமாம் ‘ஹத்தாத்’ (ரஹ்) அவர்கள் தவ்ஹீத் ஏகத்துவ தத்துவத்தை ஒழிப்பு மறைப்பு இல்லாமல் யாரும் எழிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்கள்.

அப்பாடல்களைப் பாடுபவர்களில் அனேகர், அவைகளில் கூறப்பட்ட உண்மையான தத்துவத்தை அறியாமலேயே பாடலை மட்டும் பாடி மகிழ்கிறார்கள்.இவர்கள் பாடலின் இசையில் மயங்கி பலகோணங்களிலும் ஆடி அசைகிறார்களே அல்லாமல்அந்தப் பாடல் தரும் தத்துவத்தையுணர்ந்து பேரின்ப மது மயக்கத்தில் ஆடி அசைபவர்களாக இல்லை.அவர்களுக்கு அறபு மொழியின் பொருள் விளங்காமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் உலமாக்கள், மௌலவிகள் எனப்படுவோர் அறபு மொழியறிவு பெற்றிருந்தும் கூட அப்பாடல்களின் உண்மையை உணராமலிப்பது வேதனையாகவும், அவ்வண்மையை உணராமலேயே அதை மறுப்பது விந்தையாகவும் உள்ளது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் முதற் பாடில் ஹக்தஆலாவுக்கு நீரையும், அவனது படைப்புக்களுக்கு அந்த நீரில் உண்டாகும் குமுழிகளையும் உதாரணம் கூறியுள்ளார்கள்.

மேலும் குமிழி குமிழியாயுக்கும்போதும் அது தண்ணீர்தான். அது உடைந்த பின்னும் தண்ணீர்தான் என்ற தத்துவத்தையும் கூறியுள்ளார்கள். ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணம் காட்டுவதில் எவ்வித தவறுமில்லை. ஆயினும் அவனது படைப்புக்களில் எதையும் அவனுக்கு நிகரானதென்று கூறக்கூடாது. அவ்வாறு கூறுவது அசாத்தியமானதாகும். ஏனெனில் ‘ஷிர்க்’ இணை எண்பது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றேயாகும்.

அல்லாஹ்வுக்கு நிகராக எந்தவொரு வஸ்துவும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. ஆயினும் ஒருவரின் எண்ணத்தைப் பொறுத்துதான் ‘ஷிர்க்’ இணை ஏற்படுகிறதேயல்லாமல் ‘ஹகீகத்’ எதார்த்தத்தில் ‘ஷிர்க்’ என்பதே கிடையாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு,ஆனால் அவனுக்கு நிகரில்லை என்பதற்கு குர்ஆன் ஷரீபில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ‘வலில்லாஹில் மதலுல் அஹ்லா’ அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. என்று குர்ஆனில் ஒர் இடத்திலும், ‘வலஹூல் மதலுல் அஹ்லா’ அவனுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு என்று குர்ஆனில் மற்றோர் இடத்திலும் ஹக்தஆலா கூறியுள்ளான்.எனவே, ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணமாகக் கூறுவதில்த எவ்வித தவறுமில்லை. ஆனால் ‘மதல்’ என்ற உதாரணத்துக்கும், ‘மித்லு’ என்ற நிகருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு விளக்கமில்லாததால் ஒருவகை மயக்கம் ஏற்படுவதுண்டு. மேலே கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்காகிய அல்லாஹ்வுக்கு தண்ணீரை உதாரணமாகவும், கல்காகிய சிருஷ்டிகளுக்கு தண்ணீரினால் உண்டான குமுழியை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள்.

ஒன்றை இன்னொன்றுக்கு உதாரணம் கூறுவதானால் இரண்டுக்குமிடையில் எந்த வகையிலேனும் தொடர்பு இருத்தல் வேண்டும். இரண்டுக்குமிடையில் எவ்விததொடர்பில்லாமல் உதாரணம் கூறுதல் அர்த்தமற்றதாகும். முகம்மது சிங்கத்தைப் போன்றவன் என்று அவனை சிங்கத்திற்கு உதாரணமாக கூறினால் சிங்கத்துக்கும், முகம்மதுக்குமிடையில் எந்தவகையிலேனும் தொடர்பு இருந்தாக வேண்டும். முகம்மதுவிடம் சிங்கத்திடமுள்ள தன்மைகளில் ஒன்றான வீரம் இருக்குமானால் அவன் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறலாம். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்தஆலாவுக்கு நீரையும், படைப்புக்களுக்கு குமிழியையும் உதாரணம் கூறியிருப்பதால் அந்த உதாரணத்தில் எந்த வகையில் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ந்தறிதல் அவசியம். இறைவனுக்கும், அவனது படைப்புகளான பிரபஞ்சத்துகுமிடையில் உள்ள தொடர்பு நீருக்கும், குமிழிக்குமிடையிலுள்ள தொடர்ப்பு போன்றதென்பது இமாமவர்களின் உதாரணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விளக்கமாகும்.

நீருக்கும், குமிழிக்குமிடையிளுள்ள தொடர்பு எத்தகையதென்றால், நீர் இல்லையானால் குமிழி இல்லையென்ற அளவுக்கு அவ்விரண்டுக்குமிடையில் தொடர்பு உண்டு. அதாவது குமுழி என்பது நீர்தான் என்பதாகும், மேலும் நீரில்லாமல் குமுழி உண்டாகவோ அல்லது நிலைபெற்றிருக்கவோ முடியாது. குமுழி என்ற பெயரைப் பெற்றிருப்பது நீரேயல்லாமல் வேறொன்றுமில்லை.குமுழியின் உருவத்தில் தோன்றியது நீரேயல்லாமல் வேறெதுவுமில்லை. குமுழி நீரின் கோலமேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி நீருக்கு வேறானதென்று யாரும் சொல்லவும் முடியாது. அதேபோல் குமுழியில் நீர் இல்லையென்றோ, அல்லது குமுழியின் இன்ன இடத்தில் நீருண்டு இன்ன இடத்தில் நீரில்லை என்றோ நம்பவும் முடியாது.இதேபோல் குமுழிக்கு தனியான, சுயமான ‘வுஜுது’ உள்ளமை கிடையவே கிடையாது. ஆயினும்மந்தக் குமிழி நீரின் ‘வுஜுதை’ உள்ளமையைக் கொண்டுதான் நிலை பெற்றுள்ளது.எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் தத்துவமிக்க உதாரணத்திலிருந்து ‘ஹுபால்’ எனும் குமுழி, நீரின் வேறாக வெளிப்பாடு என்பதும், நீர்தான் குமிழிக்கு மூலம் என்பதும்,அந்தக் குமுழி தனக்கு மூலமான நீருக்கு எந்த வகையிலும் வேறானதல்ல என்பதும், குமுழி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீரைப்பிரிந்திருக்க முடியாது என்பதும், குமுழி என்ற பெயர் அதன் உருவத்துக்குரியதல்லாமல் குமுழி என்பது அதன் கருவான நீருக்குரியதல்லவென்பதும்,

குமுழியானது குமுழி என்ற பெயரிலும், உருவத்திலும் இருந்தாலும் எதார்த்தத்தில் அது நீரேயல்லாமல் வேறல்லவென்பதும் தெளிவாகிவிட்டது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ள இவ்வுதாரணத்தின் மூலம் ஹக்தஆலாவினது ‘வுஜுது’ உள்ளமை நீரைப்போன்றதும், அந்த வுஜுதிலிருந்து உண்டான சர்வ சிருஷ்டிகளும் குமுழி போன்றது மாகுமென்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் நீரின் மேலேழுந்த நாட்டியமாடும் குமுழிக்கூட்டம் நீரைப் பிரியாததாயும்,அந்த குமுழிகள் நீருக்கு வேறாகாதவையாகவும் இருப்பது போலவே ஹக்த ஆலாவின் ‘வுஜுது’ உள்ளமை என்ற உள்ளமை என்ற நீரின் மேலெழுந்த நடனமாடும் பலகோடி சிருஷ்டிகள் அந்த வுஜுதெனும் நீரைப் பிரியாதவையாகவும், அதற்கு எந்த வகையிலும் வேறாகாதவையாகவும் இருக்கின்றனவென்பதும், குமுழி குமுழியாயிருக்கும் போதும் அது நீர்தான், அது உடைந்த பின்னும் அது நீர்தான் என்பது தெளிவாகிவிட்டது. இமாமவர்கள் தங்களின் இரண்டாவது பாடலில் என்னுடைய தாத்தில் (என்னில்) நீக்கமற நீ இருக்கும்பொழுது நான் எங்கே? ஆகையால் (நீயே நானாக வெளியாகியிருப்பதால்) உன்னைவிட்டும் நான் பிரிவதோ அல்லது என்னை விட்டும் நீ பிரிவதோ இல்லை. அதனால் நமக்கிடையில் ‘தே’ இல்லை என்று கூறி, முந்திய பாடலில் கூறப்பட்ட உதாரணத்தை தெளிவாக்கிப் பாடியுள்ளார்கள். குமுழியானது தண்ணீரிடம், நீரே! நீதான் நானாக (குமுழியாக) இருக்கும் பட்சத்தில் குமுழி எனும் நான் எங்கே இருப்பது என்று கேட்பதுபோல், இறைவா! குமுழிக்கு உவமிக்கப்பட்ட சிருஷ்டியான நான், உனக்கு வேறாகாத, உன்னைப் பிரியாத வெளிப்பாடாயிருக்கும் பட்சத்தில் குமுழி என்ற பெயரில் இருக்கும் எனக்கு ‘வுஜுது’ ஏது? நானே இல்லாமலிருக்கும்போது எனக்கு ‘வுஜுது’ எங்ஙனம் இருக்கும்! நீரின் வேறாகாத வெளிப்பாடாக குமுழி இருப்பது போலும், குமுழியை விட்டு நீரைப் பிரித்தெடுக்க முடியாமலிருப்பதுபோலும் உன்னை விட்டு என்னை பிரிக்கவோ, என்னை விட்டு உன்னை பிரிக்கவோ முடியாது.ஏனெனில் பிரித்தல் என்பதற்கோ, சேர்த்தல் என்பதற்கோ குறைந்தது இரண்டு வஸ்துக்கள் தேவை.

ஒரேயொரு வஸ்துவை சேர்க்கவோ, பிரிக்கவோ முடியாது, அது அசாத்தியமானதாகும். பலகோடிக் குமுழிகள் பல கோடி உருவங்களில் இருந்த போதிலும் அவை அனைத்தும் தண்ணீரின் வேறு படாத, தண்ணீரை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிக்க முடியாதவைகளாயிருப்பதுபோல், பிரபஞ்சமெனப்படும் சர்வ சிருஷ்டிகள் அனைத்தும் ஹக்த ஆலாவின் வுஜுதுக்கு வேறுபடாதவைகளும், அவனுடைய பரிசுத்த ‘தாத்தை’ உள்ளமையை விட்டும் பிரிக்க முடியாதவைகளுமாகும். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், இறைவா! எனக்கும் உனக்குமிடையில் ‘தே’ என்பதே இல்லை என்று கூறியதன் விளக்கம் என்னவெனில், அறபு மொழியில் ‘அன’ என்ற சொல்லுக்கு நான், என்ற பொருள் உண்டு. ‘அன’ என்ற சொல்லுடன் அறபு அட்சரங்களில் ஒன்றான ‘தே’ என்பதை சேர்த்தால் ‘அனத’ என்ற சொல் உண்டாகும்.அறபு இலக்கண இலக்கியப்படி ‘அனத’ என்ற சொல்லை ‘அந்த’ என்று மொழிந்து ‘நீ’ என்ற பொருளைத் தரக்கூடிய முன்னிலையைக் காட்டும் சொல்லாக உபயோகிக்க வேண்டும். எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் ‘அன-அந்த’ நான்-நீ என்ற வேற்றுமைகளைவிட்டு, எல்லாமாய் நீ இருக்கும் பட்சத்தில் நீ என்றும், நான் என்றும் எங்ஙனம் பிரிக்க முடியும் என்று இறைவனிடம் கலிமாவின் உண்மையான ஏகத்துவ ஞானத்தை கூறுகிறார்கள். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் மேற்கூறப்பட்ட இரண்டு பாடல்கள் மூலம் கிடைக்கின்ற விபரத்தை சுருக்கமாக ஆராய்ந்தால் பின்வரும் விவரம் தெளிவாகும் அதாவது தண்ணீரினால் உண்டான குமுழிக்கு தண்ணீர்தான் வுஜுதாய் இருப்துபோன்று குமுழியானது தண்ணீரில் நின்றும் உண்டாகி அதைக்கொண்டே நிலைபெற்றிருப்பதைப் போன்றும் இன்னும் குமுழி தண்ணீரை விட்டும் எந்தவகையிலும் பிரியாமலும் அதற்குவேறுபடாமலும் இருப்பது போன்றும்தான் ஹக் தஆலா தனது படைப்புக்களுடன் இருக்கின்றான்.

அவனுடைய தாத் அல்லது வுஜுது உள்ளமை ஒன்றேயல்லாமல் அது பலதல்ல அந்த தாத்துக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ‘தன்ஸீஹ்’ ஒப்புவமையற்ற நிலை அது அரூபநிலை என்றும் சொல்லப்படும் மற்றநிலை ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை அது ரூபநிலையென்றும் அழைக்கப்படும். ‘தன்ஸீஹ்’ ஒப்புவமை அற்ற நிலை, அருப நிலை என்று அழைக்கப்டும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத கருப்பு வெள்ளை என்ற கட்டுப்பாடும் கட்டை நெட்டை என்ற கட்டுப்பாடும் மில்லாத எந்த அறிஞனாலும் அந்த வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத நிலையாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியாது. ‘அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள் ஆனால் அவனுடைய தாத்தை பற்றி சிந்திக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அந்த தாத்துடைய இந்த நிலை (தன்ஸீக்) பற்றித்தான் கூறினார்களேயல்லாமல்

அவனுடைய ஸிபத் தன்மையைப்பற்றி சிந்திப்பதை தடுக்கவில்லை. படைப்புக்கள் யாவும் அவனுடைய ஸிபாத் தன்மைகளேயாகும். ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை ரூப நிலையென்றழைக்கப்படும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டக்கூடிய நிறங்களைக்கொண்டும், கட்டை நெட்டையென்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய நிலையுமாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியும்.சிந்திப்பதும் கடமை. தஷ்பீஹ் ஒப்புவமை உள்ள நிலைதான் படைப்புக்களாக அவன் வெளியாகியிருக்கும் நிலையாகும் இந்த தஷ்பீஹ் உடைய நிலை பற்றி சிந்திப்பதற்கு நாம் ஏவப்பட்டுள்ளோமேயல்லாமல் தடுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறியது தஷ்பீஹ் உடைய நிலையேயாகும். மேற்கூறப்பட்ட ஹக்தஆலாவின் ‘தன்ஸீஹ்’ ‘தஷ்பீஹ்’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஈமான் விசுவாசிப்பது கடமை.

இந்த கடமை ஞான வழி நடக்கும் சூபிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல விசுவாசிகள் யாவரும் நம்பவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் இந்த காலத்தைப்பொறுத்த வகையில் ஹக்தஆலாவின் தன்ஸீஹ், ஒப்புவமையற்ற நிலையைதான் விசுவாசிக்கின்றார்களேயல்லாமல் அவனுடைய மற்ற நிலையான தஷ்பீஹ் ஒப்புவமையுள்ள நிலையை விசுவாசிக்கிறார்கள் இல்லை.ஒரு விசுவாசி காட்டாயமாக விசுவாசிக்கவேண்டிய இந்நிலையை ‘ஷிர்க்’ இணை என்று கூறுகிறார்கள். ஈமானை தலைகீழாகப் புறட்டிவிட்டார்கள் தன்ஸீஹ் உடைய நிலையை ‘அல் பாதின்’ உள்ளானவன் என்ற திருநாமமும் தஷ்பீஹ் உடைய நிலையை ’அள்ளாஹிர்’ வெளியானவன் என்ற திருநாமமும் காட்டுகின்றன. ஒரு விசுவாசி அவ்விரு திருநாமத்தையும் நம்புதல் வேண்டும். மேலும் அவ்விரண்டும் திருக்குர்ஆன் வசனங்களில் வந்துள்ளதால் அவ்விரண்டும் குர்ஆன் வசனங்களைச் சேர்ந்ததேயாகும். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்கள் யாவையும் நம்பியவன்தான் குர்ஆனை நம்பியவனாவான். சில வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டு மற்ற வசனங்களை நம்பாதவன் குர்ஆனை நம்பியவனாக மாட்டான். குர் ஆன் வசனங்கள் யாவையும் நம்பாதவன் முஃமின் விசுவாசியாய் இருக்க மாட்டான் காபிரீன்களில் சிலர் குர்ஆனை முழுக்க நம்பாவிட்டாலும் அதிலுள்ள சில வசனங்களை நம்பியும் வேறு சில வசனங்களை நம்பாதவர்களாகவும் இருந்தார்கள்.அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் “யுஃமினூன பிபஹ்லின் வயக்புறூன பிபஹ்லின்’ அவர்கள் (காபிரீன்கள்) சில வசனங்களை ஈமான் கொள்கிறார்கள் சில வசனங்களை நம்பாமல் விடுகிறார்கள். காபிராகிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளான். எனவே ஹக் தஆலாவுக்குள்ள இரண்டு நிலைகளையும் நம்புவது குர்ஆனை நம்புவதேயாகும். குர்ஆனை நம்பாதவன் விசுவாசியாக முடியாததுபோல் அவ்விருநிலைகளை நம்பாதவனும் விசுவாசியாக மாட்டான் மேற்கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் இவ்வுண்மையைதான் நீரையும் குமுழியையும் உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்கள்.ஹத்தாத் இமாம் என்று சகல மக்களாலும் போற்றப்பட்டு வருகின்ற இமாம் அவர்கள் என்ன கொள்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களின் பாடல் மூலம் தெளிவாகிவிட்டது. மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கத்தை அறிவில்லாதவர்கள் மறுப்பதுண்டு அவர்களே அந்த பாடல்களை றாதிபு மஜ்லிஸ் சபைகளில் பாடுவதும் உண்டு.

பணத்திற்காக வாழும் அறிஞர்களுக்கு கொள்கை எதற்கு ? -முற்றும்-

ஹக்கும், கல்கும் ஒன்றா?

ஹத்தாத் இமாம் தரும் விளக்கம்.

இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் அவர்கள் ஹூசைன் (ரலி) அவர்களின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தம் மூதாதையின் பெயரால் “ஹத்தாதி” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1044 இல் தர்யம் எனும் ஊரில் பிறந்தார்கள். பல அறிஞர்களிடமும், குறிப்பாக காளி ஸஹல் இப்னு அஹ்மது பாஹஸன் என்ற பெரியாரிடம் கல்வி கற்ற இவர்கள், சிறந்த அறிஞராகவும், மார்க்க மேதையாகவும், மெஞ்ஞானியாகவும் ஆகி பெரிய இமாமென மக்களால் பிற்காலத்தில் பாராட்டுப் பெற்றார்கள்.


பெரியார்களின் அடக்க விடங்களைத் தரிசிப்பதில் பேரார்வம் காட்டிய இவர்கள், ஹூது (அலை) அவர்களின் அடக்க விடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசனம் செய்தார்கள். ஹிஜ்ரி 1080 இல் மக்கா, மதீனா ஆகிய நகரங்களல் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கினார்கள். அப்போது இவர்களிடம் ஏராளமானோர் தீட்சை பெற்றனர்.சிறந்த இறைநேசரச் செல்வரான இவர்கள் தம்மிடம் வருபவர்களின் மனதிலுள்ள விருப்பங்களை “கஷ்பின்” (ஞானோதயத்தின்) மூலம் அறிந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும், அதன் காரணமாக அவர்களின் விருப்பங்கள் நிறைவேறின என்றும் கூறுவர்.இவர்கள் ஹிஜ்ரி 1132 இல் காலமானார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் அன்னஸாயிஹூத்தீனிய்யா, ரிஸாலதுல் மஜீத், இத்திஹாபுஸ் ஸாயில், அல் கிஸ்முத்தாலிது பீ கலாமில் மன்சூர், ரிஸாலதுல் முஆவனா ஆகியவை, அவற்றில் இறுதியாக கூறப்பட்ட நூலின் ஒரு பகுதி தமிழில் காயல்பட்டணம் வள்ளல் வாவு ஷாஹுல் ஹமீது அவர்களின் நினைவாக அவர்களின் மக்களால் அச்சிட்டப்பட்டு வெளிவந்துள்ளது. ஹத்தாது (ரஹ்) அவர்களின் றாதிபு சிறப்பு மிக்கதாகும் அதனை ஓதிய மக்களின் நாட்டங்கள் இறையருளால் நிறைவேறுகின்றன. இறைவழி நடக்கும் நல்லடியார்களின் ஆத்மீக முன்னேற்றத்தை மனதிற் கொண்டு அவர்கள் இயற்றிய றாதிபு வெள்ளிக்கிழமை தோறும் இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளிலும், குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஊர்களிலும் பக்திப் பரவசத்தோடு ஓதப்பட்டு வருகிறது.ஹத்தாது றாதிபு என்ற பெயரால் அழைக்கப்பட்டுவரும் றாதிபு, பல அவ்றாது ஒதல்களை உள்ளடங்கியதாக இருக்கின்றது. அதில் பல அவ்றாதுகளைச் சேர்த்த இமாமவர்கள் முனாஜாத்து அடிப்படையில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்கள். அவை ஏகத்துவ ஞான தத்துவங்களை விளக்கமாக கூறுகின்றன. அந்தப் பாடல்களிற் சில பின்வருமாறு.இலாஹில் கல்கு மித்லஹூபாப் அலா மாஅன் லதல் அஹ்பாப் பமாஉன் பில் பனாஇ ஹூபாப் வஹால் பகாஹூ யா அல்லாஹ். பஐன அன இதா அந்தா பிதாதீ தாயிமன் குந்தா பமா பிந்து வலா பிந்தா வலா ‘தா’ பைனனா அல்லாஹ் இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமுழிபோன்றது. குமுழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான். அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான். இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்றபொழுது ‘அன’ நான் என்பது எங்கே? எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை. இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை. மேற்கூறப்பட்ட பாடல்கள் மூலம் இமாம் ‘ஹத்தாத்’ (ரஹ்) அவர்கள் தவ்ஹீத் ஏகத்துவ தத்துவத்தை ஒழிப்பு மறைப்பு இல்லாமல் யாரும் எழிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்கள். அப்பாடல்களைப் பாடுபவர்களில் அனேகர், அவைகளில் கூறப்பட்ட உண்மையான தத்துவத்தை அறியாமலேயே பாடலை மட்டும் பாடி மகிழ்கிறார்கள்.இவர்கள் பாடலின் இசையில் மயங்கி பலகோணங்களிலும் ஆடி அசைகிறார்களே அல்லாமல்அந்தப் பாடல் தரும் தத்துவத்தையுணர்ந்து பேரின்ப மது மயக்கத்தில் ஆடி அசைபவர்களாக இல்லை.அவர்களுக்கு அறபு மொழியின் பொருள் விளங்காமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் உலமாக்கள், மௌலவிகள் எனப்படுவோர் அறபு மொழியறிவு பெற்றிருந்தும் கூட அப்பாடல்களின் உண்மையை உணராமலிப்பது வேதனையாகவும், அவ்வண்மையை உணராமலேயே அதை மறுப்பது விந்தையாகவும் உள்ளது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் முதற் பாடில் ஹக்தஆலாவுக்கு நீரையும், அவனது படைப்புக்களுக்கு அந்த நீரில் உண்டாகும் குமுழிகளையும் உதாரணம் கூறியுள்ளார்கள். மேலும் குமிழி குமிழியாயுக்கும்போதும் அது தண்ணீர்தான். அது உடைந்த பின்னும் தண்ணீர்தான் என்ற தத்துவத்தையும் கூறியுள்ளார்கள். ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணம் காட்டுவதில் எவ்வித தவறுமில்லை. ஆயினும் அவனது படைப்புக்களில் எதையும் அவனுக்கு நிகரானதென்று கூறக்கூடாது. அவ்வாறு கூறுவது அசாத்தியமானதாகும். ஏனெனில் ‘ஷிர்க்’ இணை எண்பது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றேயாகும். அல்லாஹ்வுக்கு நிகராக எந்தவொரு வஸ்துவும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. ஆயினும் ஒருவரின் எண்ணத்தைப் பொறுத்துதான் ‘ஷிர்க்’ இணை ஏற்படுகிறதேயல்லாமல் ‘ஹகீகத்’ எதார்த்தத்தில் ‘ஷிர்க்’ என்பதே கிடையாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு,ஆனால் அவனுக்கு நிகரில்லை என்பதற்கு குர்ஆன் ஷரீபில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ‘வலில்லாஹில் மதலுல் அஹ்லா’ அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. என்று குர்ஆனில் ஒர் இடத்திலும், ‘வலஹூல் மதலுல் அஹ்லா’ அவனுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு என்று குர்ஆனில் மற்றோர் இடத்திலும் ஹக்தஆலா கூறியுள்ளான்.எனவே, ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணமாகக் கூறுவதில்த எவ்வித தவறுமில்லை. ஆனால் ‘மதல்’ என்ற உதாரணத்துக்கும், ‘மித்லு’ என்ற நிகருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு விளக்கமில்லாததால் ஒருவகை மயக்கம் ஏற்படுவதுண்டு. மேலே கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்காகிய அல்லாஹ்வுக்கு தண்ணீரை உதாரணமாகவும், கல்காகிய சிருஷ்டிகளுக்கு தண்ணீரினால் உண்டான குமுழியை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள். ஒன்றை இன்னொன்றுக்கு உதாரணம் கூறுவதானால் இரண்டுக்குமிடையில் எந்த வகையிலேனும் தொடர்பு இருத்தல் வேண்டும். இரண்டுக்குமிடையில் எவ்விததொடர்பில்லாமல் உதாரணம் கூறுதல் அர்த்தமற்றதாகும். முகம்மது சிங்கத்தைப் போன்றவன் என்று அவனை சிங்கத்திற்கு உதாரணமாக கூறினால் சிங்கத்துக்கும், முகம்மதுக்குமிடையில் எந்தவகையிலேனும் தொடர்பு இருந்தாக வேண்டும். முகம்மதுவிடம் சிங்கத்திடமுள்ள தன்மைகளில் ஒன்றான வீரம் இருக்குமானால் அவன் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறலாம். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்தஆலாவுக்கு நீரையும், படைப்புக்களுக்கு குமிழியையும் உதாரணம் கூறியிருப்பதால் அந்த உதாரணத்தில் எந்த வகையில் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ந்தறிதல் அவசியம். இறைவனுக்கும், அவனது படைப்புகளான பிரபஞ்சத்துகுமிடையில் உள்ள தொடர்பு நீருக்கும், குமிழிக்குமிடையிலுள்ள தொடர்ப்பு போன்றதென்பது இமாமவர்களின் உதாரணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விளக்கமாகும். நீருக்கும், குமிழிக்குமிடையிளுள்ள தொடர்பு எத்தகையதென்றால், நீர் இல்லையானால் குமிழி இல்லையென்ற அளவுக்கு அவ்விரண்டுக்குமிடையில் தொடர்பு உண்டு. அதாவது குமுழி என்பது நீர்தான் என்பதாகும், மேலும் நீரில்லாமல் குமுழி உண்டாகவோ அல்லது நிலைபெற்றிருக்கவோ முடியாது. குமுழி என்ற பெயரைப் பெற்றிருப்பது நீரேயல்லாமல் வேறொன்றுமில்லை.குமுழியின் உருவத்தில் தோன்றியது நீரேயல்லாமல் வேறெதுவுமில்லை. குமுழி நீரின் கோலமேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி நீருக்கு வேறானதென்று யாரும் சொல்லவும் முடியாது. அதேபோல் குமுழியில் நீர் இல்லையென்றோ, அல்லது குமுழியின் இன்ன இடத்தில் நீருண்டு இன்ன இடத்தில் நீரில்லை என்றோ நம்பவும் முடியாது.இதேபோல் குமுழிக்கு தனியான, சுயமான ‘வுஜுது’ உள்ளமை கிடையவே கிடையாது. ஆயினும்மந்தக் குமிழி நீரின் ‘வுஜுதை’ உள்ளமையைக் கொண்டுதான் நிலை பெற்றுள்ளது.எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் தத்துவமிக்க உதாரணத்திலிருந்து ‘ஹுபால்’ எனும் குமுழி, நீரின் வேறாக வெளிப்பாடு என்பதும், நீர்தான் குமிழிக்கு மூலம் என்பதும்,அந்தக் குமுழி தனக்கு மூலமான நீருக்கு எந்த வகையிலும் வேறானதல்ல என்பதும், குமுழி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீரைப்பிரிந்திருக்க முடியாது என்பதும், குமுழி என்ற பெயர் அதன் உருவத்துக்குரியதல்லாமல் குமுழி என்பது அதன் கருவான நீருக்குரியதல்லவென்பதும்,குமுழியானது குமுழி என்ற பெயரிலும், உருவத்திலும் இருந்தாலும் எதார்த்தத்தில் அது நீரேயல்லாமல் வேறல்லவென்பதும் தெளிவாகிவிட்டது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ள இவ்வுதாரணத்தின் மூலம் ஹக்தஆலாவினது ‘வுஜுது’ உள்ளமை நீரைப்போன்றதும், அந்த வுஜுதிலிருந்து உண்டான சர்வ சிருஷ்டிகளும் குமுழி போன்றது மாகுமென்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் நீரின் மேலேழுந்த நாட்டியமாடும் குமுழிக்கூட்டம் நீரைப் பிரியாததாயும்,அந்த குமுழிகள் நீருக்கு வேறாகாதவையாகவும் இருப்பது போலவே ஹக்த ஆலாவின் ‘வுஜுது’ உள்ளமை என்ற உள்ளமை என்ற நீரின் மேலெழுந்த நடனமாடும் பலகோடி சிருஷ்டிகள் அந்த வுஜுதெனும் நீரைப் பிரியாதவையாகவும், அதற்கு எந்த வகையிலும் வேறாகாதவையாகவும் இருக்கின்றனவென்பதும், குமுழி குமுழியாயிருக்கும் போதும் அது நீர்தான், அது உடைந்த பின்னும் அது நீர்தான் என்பது தெளிவாகிவிட்டது. இமாமவர்கள் தங்களின் இரண்டாவது பாடலில் என்னுடைய தாத்தில் (என்னில்) நீக்கமற நீ இருக்கும்பொழுது நான் எங்கே? ஆகையால் (நீயே நானாக வெளியாகியிருப்பதால்) உன்னைவிட்டும் நான் பிரிவதோ அல்லது என்னை விட்டும் நீ பிரிவதோ இல்லை. அதனால் நமக்கிடையில் ‘தே’ இல்லை என்று கூறி, முந்திய பாடலில் கூறப்பட்ட உதாரணத்தை தெளிவாக்கிப் பாடியுள்ளார்கள். குமுழியானது தண்ணீரிடம், நீரே! நீதான் நானாக (குமுழியாக) இருக்கும் பட்சத்தில் குமுழி எனும் நான் எங்கே இருப்பது என்று கேட்பதுபோல், இறைவா! குமுழிக்கு உவமிக்கப்பட்ட சிருஷ்டியான நான், உனக்கு வேறாகாத, உன்னைப் பிரியாத வெளிப்பாடாயிருக்கும் பட்சத்தில் குமுழி என்ற பெயரில் இருக்கும் எனக்கு ‘வுஜுது’ ஏது? நானே இல்லாமலிருக்கும்போது எனக்கு ‘வுஜுது’ எங்ஙனம் இருக்கும்! நீரின் வேறாகாத வெளிப்பாடாக குமுழி இருப்பது போலும், குமுழியை விட்டு நீரைப் பிரித்தெடுக்க முடியாமலிருப்பதுபோலும் உன்னை விட்டு என்னை பிரிக்கவோ, என்னை விட்டு உன்னை பிரிக்கவோ முடியாது.ஏனெனில் பிரித்தல் என்பதற்கோ, சேர்த்தல் என்பதற்கோ குறைந்தது இரண்டு வஸ்துக்கள் தேவை. ஒரேயொரு வஸ்துவை சேர்க்கவோ, பிரிக்கவோ முடியாது, அது அசாத்தியமானதாகும். பலகோடிக் குமுழிகள் பல கோடி உருவங்களில் இருந்த போதிலும் அவை அனைத்தும் தண்ணீரின் வேறு படாத, தண்ணீரை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிக்க முடியாதவைகளாயிருப்பதுபோல், பிரபஞ்சமெனப்படும் சர்வ சிருஷ்டிகள் அனைத்தும் ஹக்த ஆலாவின் வுஜுதுக்கு வேறுபடாதவைகளும், அவனுடைய பரிசுத்த ‘தாத்தை’ உள்ளமையை விட்டும் பிரிக்க முடியாதவைகளுமாகும். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், இறைவா! எனக்கும் உனக்குமிடையில் ‘தே’ என்பதே இல்லை என்று கூறியதன் விளக்கம் என்னவெனில், அறபு மொழியில் ‘அன’ என்ற சொல்லுக்கு நான், என்ற பொருள் உண்டு. ‘அன’ என்ற சொல்லுடன் அறபு அட்சரங்களில் ஒன்றான ‘தே’ என்பதை சேர்த்தால் ‘அனத’ என்ற சொல் உண்டாகும்.அறபு இலக்கண இலக்கியப்படி ‘அனத’ என்ற சொல்லை ‘அந்த’ என்று மொழிந்து ‘நீ’ என்ற பொருளைத் தரக்கூடிய முன்னிலையைக் காட்டும் சொல்லாக உபயோகிக்க வேண்டும். எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்0 அவர்கள் ‘அன-அந்த’ நான்-நீ என்ற வேற்றுமைகளைவிட்டு, எல்லாமாய் நீ இருக்கும் பட்சத்தில் நீ என்றும், நான் என்றும் எங்ஙனம் பிரிக்க முடியும் என்று இறைவனிடம் கலிமாவின் உண்மையான ஏகத்துவ ஞானத்தை கூறுகிறார்கள். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் மேற்கூறப்பட்ட இரண்டு பாடல்கள் மூலம் கிடைக்கின்ற விபரத்தை சுருக்கமாக ஆராய்ந்தால் பின்வரும் விவரம் தெளிவாகும் அதாவது தண்ணீரினால் உண்டான குமுழிக்கு தண்ணீர்தான் வுஜுதாய் இருப்துபோன்று குமுழியானது தண்ணீரில் நின்றும் உண்டாகி அதைக்கொண்டே நிலைபெற்றிருப்பதைப் போன்றும் இன்னும் குமுழி தண்ணீரை விட்டும் எந்தவகையிலும் பிரியாமலும் அதற்குவேறுபடாமலும் இருப்பது போன்றும்தான் ஹக் தஆலா தனது படைப்புக்களுடன் இருக்கின்றான்.அவனுடைய தாத் அல்லது வுஜுது உள்ளமை ஒன்றேயல்லாமல் அது பலதல்ல அந்த தாத்துக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ‘தன்ஸீஹ்’ ஒப்புவமையற்ற நிலை அது அரூபநிலை என்றும் சொல்லப்படும் மற்றநிலை ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை அது ரூபநிலையென்றும் அழைக்கப்படும். ‘தன்ஸீஹ்’ ஒப்புவமை அற்ற நிலை, அருப நிலை என்று அழைக்கப்டும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத கருப்பு வெள்ளை என்ற கட்டுப்பாடும் கட்டை நெட்டை என்ற கட்டுப்பாடும் மில்லாத எந்த அறிஞனாலும் அந்த வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத நிலையாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியாது. ‘அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள் ஆனால் அவனுடைய தாத்தை பற்றி சிந்திக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அந்த தாத்துடைய இந்த நிலை (தன்ஸீக்) பற்றித்தான் கூறினார்களேயல்லாமல் அவனுடைய ஸிபத் தன்மையைப்பற்றி சிந்திப்பதை தடுக்கவில்லை. படைப்புக்கள் யாவும் அவனுடைய ஸிபாத் தன்மைகளேயாகும். ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை ரூப நிலையென்றழைக்கப்படும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டக்கூடிய நிறங்களைக்கொண்டும், கட்டை நெட்டையென்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய நிலையுமாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியும்.சிந்திப்பதும் கடமை. தஷ்பீஹ் ஒப்புவமை உள்ள நிலைதான் படைப்புக்களாக அவன் வெளியாகியிருக்கும் நிலையாகும் இந்த தஷ்பீஹ் உடைய நிலை பற்றி சிந்திப்பதற்கு நாம் ஏவப்பட்டுள்ளோமேயல்லாமல் தடுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறியது தஷ்பீஹ் உடைய நிலையேயாகும். மேற்கூறப்பட்ட ஹக்தஆலாவின் ‘தன்ஸீஹ்’ ‘தஷ்பீஹ்’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஈமான் விசுவாசிப்பது கடமை. இந்த கடமை ஞான வழி நடக்கும் சூபிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல விசுவாசிகள் யாவரும் நம்பவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் இந்த காலத்தைப்பொறுத்த வகையில் ஹக்தஆலாவின் தன்ஸீஹ், ஒப்புவமையற்ற நிலையைதான் விசுவாசிக்கின்றார்களேயல்லாமல் அவனுடைய மற்ற நிலையான தஷ்பீஹ் ஒப்புவமையுள்ள நிலையை விசுவாசிக்கிறார்கள் இல்லை.ஒரு விசுவாசி காட்டாயமாக விசுவாசிக்கவேண்டிய இந்நிலையை ‘ஷிர்க்’ இணை என்று கூறுகிறார்கள். ஈமானை தலைகீழாகப் புறட்டிவிட்டார்கள் தன்ஸீஹ் உடைய நிலையை ‘அல் பாதின்’ உள்ளானவன் என்ற திருநாமமும் தஷ்பீஹ் உடைய நிலையை ’அள்ளாஹிர்’ வெளியானவன் என்ற திருநாமமும் காட்டுகின்றன. ஒரு விசுவாசி அவ்விரு திருநாமத்தையும் நம்புதல் வேண்டும். மேலும் அவ்விரண்டும் திருக்குர்ஆன் வசனங்களில் வந்துள்ளதால் அவ்விரண்டும் குர்ஆன் வசனங்களைச் சேர்ந்ததேயாகும். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்கள் யாவையும் நம்பியவன்தான் குர்ஆனை நம்பியவனாவான். சில வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டு மற்ற வசனங்களை நம்பாதவன் குர்ஆனை நம்பியவனாக மாட்டான். குர் ஆன் வசனங்கள் யாவையும் நம்பாதவன் முஃமின் விசுவாசியாய் இருக்க மாட்டான் காபிரீன்களில் சிலர் குர்ஆனை முழுக்க நம்பாவிட்டாலும் அதிலுள்ள சில வசனங்களை நம்பியும் வேறு சில வசனங்களை நம்பாதவர்களாகவும் இருந்தார்கள்.அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் “யுஃமினூன பிபஹ்லின் வயக்புறூன பிபஹ்லின்’ அவர்கள் (காபிரீன்கள்) சில வசனங்களை ஈமான் கொள்கிறார்கள் சில வசனங்களை நம்பாமல் விடுகிறார்கள். காபிராகிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளான். எனவே ஹக் தஆலாவுக்குள்ள இரண்டு நிலைகளையும் நம்புவது குர்ஆனை நம்புவதேயாகும். குர்ஆனை நம்பாதவன் விசுவாசியாக முடியாததுபோல் அவ்விருநிலைகளை நம்பாதவனும் விசுவாசியாக மாட்டான் மேற்கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் இவ்வுண்மையைதான் நீரையும் குமுழியையும் உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்கள்.ஹத்தாத் இமாம் என்று சகல மக்களாலும் போற்றப்பட்டு வருகின்ற இமாம் அவர்கள் என்ன கொள்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களின் பாடல் மூலம் தெளிவாகிவிட்டது. மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கத்தை அறிவில்லாதவர்கள் மறுப்பதுண்டு அவர்களே அந்த பாடல்களை றாதிபு மஜ்லிஸ் சபைகளில் பாடுவதும் உண்டு. பணத்திற்காக வாழும் அறிஞர்களுக்கு கொள்கை எதற்கு ? -முற்றும்-

எல்லாம் அவனே.



எல்லாம் அவன் தஜல்லிய்யாத் வெளிப்பாடுகள்

'அறிந்துகொள் நிச்சயமாக அவர்கள் (மக்கத்து காபிரீன்கள்) அவர்களின் ரப்பாகிய அல்லாஹ்வை சந்திப்பதில் கடுமையான சந்தேகமுடையவர்கள் ஆவர் அறிந்துகொள் நிச்சயமாக அவன் (அல்லாஹ்) ஒவ்வொறு வஸ்துவையும் சூழ்தவனாய் இருக்கின்றான்'.(அல் குர்ஆன் சூறத்து ஹாமீம் அஸ்ஸஜதா 54ம் வசனம்) இவ்வசனத்தின் சுருக்கமான சாராம்சம் என்னவெனில் மக்கத்தில் வாழ்ந்த காபிரீன்கள் ஒருவன் மரணித்தபின் அவன் எழுப்பப்படுவான் என்பதிலும் அவன் செய்த நன்மை தீமைக்கு கூலி வழங்கப்படும் என்பதிலும் கடுமையான சந்தேகமுடையவர்களாக இருந்தார்கள் ஏனெனில் ஒருவன் மரணித்து அவனை எரித்துச் சாம்பலாக்கிய பின் அல்லது அவன் மண்ணில் புதைக்கப்பட்டு அவன் சரீரம் அழிந்து மண்னுடன் மன்னாகியபின் அவனை எழுப்புவதும் அவனுக்கு கூலி வழங்குவதும் எங்ஙனம்? சாத்தியமாகும் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள் சந்தேகத்திருந்தார்கள் மேற்கூறிய மறைவசனம் ஒரேயொரு வசனம்தான் ஆயினும் அது இரண்டு சொற்றொடர்களில் ஆனாது;

1. அலா இன்னஹும் பீமிர்யத்தின் மின்லிகாயி றப்பிஹிம் “அவர்கள் அல்லாஹ்வைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாயிருக்கின்றார்கள்.

2. அலா இன்னஹு பிகுல்லி ஷையின் முஹீத் “நிச்சயமாக அல்லாஹ்வானவன் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்தவாயிருக்கிறான்”


இரு சொற்றொடரினாலான இவ்வசனம் திருமறை வசனமாகையால் அது அல்லாஹ்வினது கலாம் பேச்சென்றாயிற்று. அல்லாஹ்வின்பேச்சு சாமானிய பேச்சாக இருக்க முடியாது அதில் சொல் வளமும் பொருள் வளமும் நிச்சயமாக நிறைந்திருக்க வேண்டும். இன்றேல் அது அல்லாஹ்வின் பேச்சாயிருக்க முடியாது அல்லாஹ்வின் பேச்சு சொல்வளமும் பொருள் வளமும் மிக்கதென்பது திருமறை ஆதாரத்தினால் தரிபட்டதொன்றாகும். ஆதாரத்தின் சுருக்கம் பின்வருமாறு.முஹம்மதே! நீங்கள் சொல்லுங்கள் உலகிலுள்ள கடல்கள் அனைத்தையும் மையாக்கி அந்த மையைக் கொண்டு எனது அல்லாஹ்வின் பேச்சுக்குரிய பொருளை எழுதப்பட்டால் அதன் பொருள் முடிந்துவிடாது. ஆனால் மை முடிந்துவிடும் மீண்டும் அதே அளவு மையைக் கொண்டு எழுதினாலும் கூட அந்தமைதான் முடிந்து விடுமேயன்றி பொருள் முடிந்து விடாது இவ்வாதாரப்படி அல்லாஹ்வுடைய பேச்சின் பொருள் ஆழத்தை இவ்வளவுதான் என்று கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. அல்லாஹ்வின் பேச்சும், மனிதனின் பேச்சும் ஒன்றுக்கொன்று மாறானதேயன்றி வேறானதல்ல.


மாறானதென்ற வகையில் மனிதனின்பேச்சு சகல கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாயும், அல்லாஹ்வின் பேச்சு எந்த ஒரு கட்டுப்பாடுட்டுக்கும் உட்படதாததாயிமிருக்கும். அதேபோல் ஒரு மனிதனின் பேச்சுடைய பொருள் ஆழத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் அல்லாஹ்வுடைய பேச்சில் பொருளாளத்தை கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. “கைதுன்” எனும் கட்டுப்பாடும் “ஹத்துன்” எனும் எல்லையும் அவனுக்கு இல்லை அவ்விரு தன்மைகளும் படைப்புகளுக்கு உரியனவாகும். எனவே மேலே கூறிய திருவசனத்திற்கு அளவற்ற பொருளிருக்க வேண்டும் அந்த பொருள் எனும் கடலில் சிலர் மேல் நீச்சலும், சிலர் உள்நீச்சலும் இன்னும் சிலர் எதிர் நீச்சலும் அடிக்கின்றனர். ஒவ்வோறுவரும் அவரவர் சக்திக்கும் முக்திக்கும் ஏற்றவாறு நீந்தி விளையாடுகிறார்கள். முன்கூறிய வசனத்தின் பொருளில் உள்நீச்சலோ எதிர் நீச்சலோ அடிக்கமாமல் அதில் மேல்நீச்சலடித்து அவ்வசனத்தின் மேல்வாரியான பொருளை மட்டுமாவது அறிதல் அவசியம். எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற தத்துவத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு மேற்கூறிய திருமறை வசனத்திற்கு இங்கு கூறப்படும் பொருள் அவ்வசனத்தின் நேரடியான வெளிப்படைக் கருத்தையே அன்றி அவ்வசனத்தின் பாத்தின் உள்ரங்கமான அர்த்தமல்ல. எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் என்றால் அதன் உள்ரங்கமான பொருள் எத்துனை தத்துவமுடையதோ! இதுதான் அவ்வசன்தின் வெளிரங்கமான ளாஹிர் அர்த்தம் என்றால் இது அல்லாத வேறந்த ‘ளாஹிர்’ வெளிரங்கமான அர்த்தமும் அதற்கு இல்லை என்பது நிரூபனமாகிவிட்டது அது அவ்வசனத்தின் உள்ரங்கமான பொருள் என்று கொள்வதும் முற்றிலும் பிழையானதேயாகும்.


ஏனெனில் அது உள்ரங்கமான கருத்து என்றால் அதற்கு வெளிரங்கமான வேறோரு கருத்து இருப்பது அவசியம் ஆனால் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தல்லாத வேறொரு பொருள் அவ்வசனத்திற்கு உண்டு என்று சொல்ல எந்தவொரு உலமாக்களும் முன்வரமாட்டார்கள் வரவும் முடியாது. ஆனால் போலி ஆலிம்கள் தனது “ஜஹாலத்” எனும் மடமையின் நிமித்தம் அதற்கு வேறு பொருள் இருக்கின்றதென்று சொல்ல நினைப்பார்கள். ஆனால் கனவு கண்ட ஊமையனின் நிலைதான் அவர்களுக்கு ஏற்படும். பின்னால் வரும் விளக்கம் அவர்களின் முகத்துக்கு கரி பூசி, அவர்களை தலைகுனியச் செய்து, பதில் கூறமுடியாத ஊமையர்களாக்கி விடுமென்பதில் ஐயமில்லை. ஏகத்துவ ஞானத்தை ஏற்று, எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை நம்பி வாழும் சில உலமாக்கள் மேற்கூறிய திருமறை வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து இருந்தாலும் அது உள்ளரங்கமான கருத்தென்றும், அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் கூறுகிறார்கள், இவர்கள் இவ்வாறு சொன்னாலும் கருத்தை சரி காண்கிறார்கள் என்ற வகையில் அவர்கள் நல்லடியார்களேதான் ஆயினும் அவர்களின் வாதம் பிழையானது என்பது பின்னால் நிரூபிக்கப்படும்.


மேலும் அந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களில் வேறு சில உலமாக்கள் அதை அறிஞர்கள் மத்தியில் மட்டும்தான் கூறலாமேயன்றி பாமரர் மத்தியில் கூறக்கூடாதென்கிறார்கள். இவர்களும் முந்தியவர்களைப்போல சரி காண்கிறார்கள் என்ற வகையில் நல்லடியார்களேதான். ஆயினும் அவர்களின் வாதமும் பிழையென்று பின்னால் நிரூபிக்கப்படும்.இவ்விரு சாராரின் வாதமும் அந்த வசனத்தைக் கொண்டே பிழையென்று நிரூபிக்கப்படுகிறது. அவ்விரு சாராரின் வாதமும் நிராகரிக்கப்பட்டாலும் அவ்வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்துண்டு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து குர்ஆனின் கருத்தாகவும் அதிலும் வெளிப்படையான கருத்தாகவும் இருக்க அது குர்ஆனுக்கு முரணானது என்றும் அதைக் கூறியவனும், ஏற்றுக் கொண்டவனும் முர்தத் என்றும் கூறும் ஆலிம்கள் ஆரிபீன்கள் ஞானவான்கள் உடைய தப்ஸீர்களை ஞானம் தெரிந்தவர்களின் உதவியுடன் ஆராய்தல் வேண்டும் மேற்கூறிய திருமறை வசனத்தின் வெளிப்படையான பொருளே எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதாயிருக்க அதற்கு வேறு பொருள் உண்டெனக்கூறி பாமரர்களை ஏமாற்றி வருபவர்கள் அந்த வேறுபொருள் எது என்பதை கூறுவார்களா? பானையில் இல்லாமல் இருக்கும்போது அகப்பையில் வருவது எங்ஙனம்?எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து அத்திருவசனத்திற்கு உண்டென்பதை ஏற்றுக் கொண்டு அது உள்ரங்கமான அர்த்தம் என்றும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் வாதிடுகிறவர்கள் எந்த தலீல் ஆதாரத்தைக் கொண்டும் அவ்வாறு வாதிட முடியாது ஏனெனில் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிரங்கமான அர்தமாயிருக்க அவ்வர்த்தம் உள்ரங்கமானதென்று வாதிட முடியாது. அது உள்ளரங்கமான அர்த்தம் எனக் கொண்டால் அதற்கு வெளிரங்கமான வேறோர் அர்த்தம் இருக்க வேண்டும் இதுதான் அதன் வெளிரங்கமான அர்த்தம் என்பது உறுதியானதாயிருக்க இதல்லாத வெளிப்படையான அர்த்தம் அதற்கு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.


உண்மையான உலமாக்கல் இதல்லாத வெளிரங்கமான வேறு அர்த்தம் அதற்குண்டு என்று கூற முன்வரமாட்டார்கள் இதல்லாத வேறு அர்த்தம் அதற்குண்டென வாதிப்போர் அது என்ன அர்த்தம் என்று விளக்கி வைப்பதற்கு முன்வருவார்களா?இன்னும் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற அர்த்தம் அவ்வசனத்திற்கு இருந்தாலும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்ற வாதமும் இவ்வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்படுகின்றது. ஏனெனில் மேலேகுறிப்பிட்ட திரு வசனத்தின் மூலம் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை வெளிப்படையாகச் சொன்னவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாருமில்லை. அல்லாஹ் திருமறையில் வெளிப்படையாகக்கூறி கருத்தை வெளியாக்கலாகாது என்று கூறுதல் அல்லாஹ்வுக்கு ஐடியா யோசனை சொல்வதுபோல் இருக்கிறது. திருக்குர்ஆன் அரபு மொழியில் இருந்தாலும் அது எல்லாக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருத்தமாக பகிரங்கமாக இறக்கப்பட்டதேயாகும் ஆகையால் அதன் வெளிப்படையான கருத்தை வெளியாக்கலாகாது என்பது அர்த்தமற்ற வாதமேயாகும். அந்தக் கருத்தை அல்லாஹ் குர்ஆனில் வெளியாக்கிச் சொல்லியிருக்கிறானேயன்றி ஜாடையாகவோ மறைத்தோ சொல்லவில்லை. ஜாடையாகச் சொல்லியிருந்தால் அந்தக் கருத்து மேற்கூறிய வசனத்தின் உள்ரங்கமான அர்த்தமாக இருக்கவேண்டும். அது அவ்வாறு இல்லாததினால் ஜாடையாகச் சொல்லப்பட்டதல்ல என்பது தெளிவாகிவிட்டது. மேலும் அந்தக் கருத்து மறைக்கப்படவேண்டியதொன்றாக இருந்தால் குர்ஆனில் அவ்வசனம் இடம்பெற்றிருக்கவே மாட்டாது. எனவே அது அவ்வசனத்தின் உட்கருத்தென்றும் அதை வெளியாக்கலாகாது என்றும் சிலர் விவாதிப்பது மறுக்கப்படவேண்டியதாகும்.


எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதை ஏற்றுக் கொண்ட வேறுசிலர் அதை பாமரர் மத்தியில் வெளியாக்கலாகாது என்றும் வாதிடுகிறார்கள் இவர்களின் வாதமும் அவ்வசனத்தைக் கொண்டே நிராகரிக்கப்படுகிறது. அதாவது அல்குர்ஆனில் உள்ள வசனங்கள் யாவும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இறக்கப்பட்ட பொதுமறை வசனங்களேயன்றி படித்தவர்களுக்கென்று மட்டும் சில வசனமும் பாமரர்களுக்கென்று மட்டும் சில வசனமும் அருளப்படவில்லை திருமறை உலகப் பொதுமறையேயன்றி பணக்காரனுக்கென்று சில ஆலிம்களும் ஏழைகளுக்கென்று சில ஆலிம்களும் இருப்பது போலவே திருமறையும் இருக்கிறதென்று அதை ஒருசிலருக்கு மட்டுமுள்ள மறையாக ஆக்கி விடுவது கூடாது. அது குற்றமுமாகும்.


ஆயத்தின் விளக்கம்


மேற்கூறிய வசனத்தில் இடம்பெற்ற இரண்டு சொற்றொடர்களில் காபிரீன்கள் அல்லாஹ்வைக் கானும் விசயத்தில் சந்தேகமுடையவர்களாவர் என்ற சொற்றொடர் மூலம் அல்லாஹ் அவர்களின் சந்தேகத்தைக்கூறி அவன் சகல வஸ்துவையும் சூழ்ந்தவனாயிருக்கின்றான் என்ற இரண்டாவது சொற்றொடறைக் கொண்டு அவர்களின் சந்தேகத்தை நீக்கியுமுள்ளான் அவர்களின் சந்தேகம் நீங்குவதற்கு இரண்டாவது சொற்றொடர் மறுக்க முடியாத ஆதாரமாகவே இருக்கிறது.(தொடரும்.)