இமாம் அலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இமாம் அலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -9

அலீ ரலி அவர்களின் நினைவு தின சிந்தனைகள்
ஒரு சமயம் பெண் அலீ ரலி அவர்களிடம் அலறி அடித்துக் கொண்டு வந்தாள்
" என் குழந்தை மோட்டு மீது ஏறிக் கொண்டு அங்கேயே இருக்கிறது நான் கூப்பிட்டால் குழந்தை வரமாட்டேன் என்கிறது அதை அப்படியே விட்டு விட்டால் கீழே விழுந்து விடுமோ என எனக்கு பயமாக இருக்கிறது இது ஆபத்து என்பதை புரிந்து கொள்ளக் கூடிய வயதும் அதற்கில்லை சைக்கினை காட்டினால் அதை அது புரிந்து கொள்ள இயலவில்லை பல முறை அதற்குப் புகட்டும் பாலைக் காட்டினேன் அது தன் முகத்தை திருப்பிக் கொள்கிறது என் மனம் ரொம்பவும் பதறுகிறது" என்றாள்
அவளைப் பார்த்து அலீ ரலி அவர்கள் "இன்னொரு குழந்தை அந்த மோட்டு பக்கம் காட்டும் போது அந்த குழந்தை இந்தக் குழந்தையின் பக்கம் வந்து
விடும் மேலும் தன் தாயின் கையில் இன்னொரு குழந்தையைப் பார்க்கும் போது உடனே தன் தாயுடன் சேரவே விரும்பும்"" என்றார்கள்
அவ்விதமே செய்யப்பட்டு குழந்தையும் காப்பாற்றப்பட்டது

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -8

அலீ ரலி அவர்களின் நினைவு நாள் சிந்தனை 2
அலீ ரலி அவர்கள் வேகமாக தொழுகைக்கு சென்று கொண்டு இருந்தார்கள் அப்போது ஒருவர் அவர்களை வழிமறித்து
" குட்டி போடும் பிராணிகள் எவை ? 
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பிராணிகள் எவை ? என்று கேட்டார்
ஓடும் ஓட்டத்திலேயே அலீ ரலி அவர்கள்
" எந்தப் பிராணிக்களுக்கு செவி வெளிப்புறமாக இருக்கிறதோ அவை குட்டி போடும் . எவற்றிற்கு செவி உட்புறமாக இருக்கிறதோ அவை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் என்று கூறிவிட்டு பள்ளிவாசலுக்கு விரைந்தார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -7

அலி ரலி அவர்கள் கோவேறு கழுதையில் வேகமாக பயணம் செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு பெண் " என் உடன் பிறந்தவன் இறந்து விட்டான் அவன் இறக்கும் போது 600 திர்ஹம் சொத்து விட்டுச் சென்றான் அதில் என் பங்கு ஒரு திர்ஹம்தானே எனக்குரிய பங்கு . ? என்று அவள் கேட்டாள்
உடனே அலி ரலி அவர்களின் இயற்கையாக அமைந்த கணித அறிவு துரிதமாக வேலை செய்தது
ஒருவனுக்குத் தங்கையான இவள் ஒரு திர்ஹம் பங்கு பெற வேண்டுமானால் இவளுடன் யார் யார் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பதை ஊகித்துக் கொண்டு அக்கணமே அவர்கள் பதில் அளித்தார்கள
" உன் உடன் பிறந்தவன் 600 திர்ஹம்களையும் இரு பெண் மக்களையும் , தன் தாயையும், மனைவியையும் , 12 சகோதரர்களையும் , உனக்கும் விட்டுச் சென்றான்
அந்த 600 திர்ஹம்களில் இரண்டு மக்களுக்கும் இறைவன் குர்ஆனில் சொல்லிபடி 400 ம் , தாய்க்கு 100 ம் , மனைவிக்கு 75 ம் , சகோதரர்கள் பன்னிரண்டு பேர்களுக்கும் 24 ம் , உனக்கு ஒரு திர்ஹம் வருகிறது . இது குர்ஆனில் கூறியபடி மிகச் சரியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது
நண்பர்கள் அந்த குர்ஆன் வசனத்தை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -6

ஒரு முறை 3 நபர்கள் 17 ஒட்டகைகளுடன் வந்து இந்த 17 ஒட்டகைகளில் இரண்டில் ஒரு பங்கு ( 1/2)
முதலாமருக்கும் , மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாமவருக்கும் , ஒன்பதில் ஒரு பங்கு (1/9)
மூன்றாமவருக்கும் பங்கிட வேண்டும் ஒட்டகைகளை வெட்டி கூறு போடக்கூடாது என்று கூறினார்கள்
அலீ ரலி அவர்கள் அரசாங்க பொது நிதியிலிருந்து ஒரு ஒட்டகை கொண்டு வரச் செய்து அதை அந்த 17 ஒட்டகைகளுடன் சேர்த்து 18 ஒட்டகைகளாக்கினார்கள்
முதல் நபருக்கு இரண்டில் ஒரு பங்கு அதாவது 9 ஒட்டகங்கள்
இரண்டாவது நபருக்கு மூன்றில் ஒரு பங்கு 6 ஒட்டகங்கள்
மூன்றாம் நபருக்கு ஒன்பதில் ஒரு பங்கு 2 ஒட்டகங்கள் கொடுத்தார்கள்
இவ்விதம் 9 + 6 +2 = 17 அரசாங்க பொது நிதியிலிருந்து கொண்டு வரப்பட்ட அதே ஒட்டகம் அங்கேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -5

இரண்டு பிரயாணிகள் ஒருவர் 5 ரொட்டியும் இரண்டாமவர் 3 ரொட்டியும் வைத்திருந்தார்கள்
சாப்பிடும் போது மூன்றாமவர் ஒருவர் சேர்ந்து கொண்டு 8 ரொட்டிகளையும் சமமாக பங்கீட்டு மூன்று பேர்களும் சாப்பிட்டனர் அது வரை எந்த பிரச்சனையும் இல்லை
மூன்றாமவர் சாப்பிட்டு முடித்ததும் 8 திர்ஹம் காசுகள் கொடுத்தார் அவ்வளவுதான் பிரச்சனை வந்துவிட்டது
முதலாமர் 5 திர்ஹம் எடுத்துக் கொண்டு மீதி 3 திர்ஹம்களை இரண்டாமவருக்கு கொடுத்தார்
இரண்டாமவரோ தனக்கு அவர் கொடுத்ததில் பாதி 4 திர்ஹம் கேட்டார்
வழக்கு அலி ரலி அவர்களிடம் வந்தது 3 ரொட்டி கொண்டு வந்த இரண்டாமவரை 3 திர்ஹம் களை பெற்றுக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள் அவனோ தனக்கு 4 திர்ஹம்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான்
அலி ரலி அவர்களிடம் தீர்ப்பு செயயும்படி சொன்னார்கள்
3 ரொட்டி கொண்டு வந்தவனுக்கு ஒரே ஒரு திர்ஹமும் , 5 ரொட்டிகள் கொண்டு வந்தவனுக்கு 7 திர்ஹமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள்
எப்படி என்று இரண்டாமவர் கேட்டார்
மொத்தம் உள்ள 8 ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியும் மூன்று மூன்று துண்டுகளாக சமமாக பிரித்தால் 24 துண்டுகள் வரும் சரிதானே ? சரிதான்
மூவரும் ஆளுக்கு 8 துண்டுகள் சாப்பிட்டுள்ளனர்
3 ரொட்டி வைத்திருந்தவன்
9 துண்டுகளில் 8 துண்டுகளை அவனே சாப்பிட்டுள்ளான் ஒரே ஒரு துண்டுதான் மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
5 ரொட்டிகளை வைத்திருந்தவன் 15 துண்டுகளாக்கி அவன் 8 துண்டுகள் சாப்பிட்டு போக 7 மீதமாகி இருக்கிறது சரிதானே சரிதான்
மூன்றாமவர் 8 துண்டுகள் 8 திர்ஹம் கொடுத்துள்ளார்
அதாவது இருவரும் மீதப்படுத்திய 1 + 7 = 8 துண்டுகள் அவர் சாப்பிட்டுள்ளார் அதன் பிரகாரம்தான் திர்ஹம்களும் பங்கீடு செய்யப்பட்டது என அலி ரலி அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -4

அலீ ரலி அவர்கள் இவ்வளவு அறிவுஞானத்திற்கு மூலக் காரணமாக இருந்தது திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்தவர்களாகவும் குர்ஆனின் ஆழ்ந்த கருத்துக்களையும் தெளிவாக புரியக்கூடியவர்களாகவும் அதே சமயம் குர்ஆனின் வசன நடை நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்
திருக்குர்ஆன் வசனத்தை விளக்குவதற்கு அதே திருக்குர்ஆன் இன்னொரு வசனம் இன்னொரு வசனம் என்று அடிக்கிக் கொண்டே போவார்கள்
திருக்குர்ஆனுக்கு விளக்கம் திருக்குர்ஆனாகத் தானே இருக்க முடியும் என்பார்கள்
அலீ ரலி அவர்கள் கணிதம் மருத்துவம் ,மனோ தத்துவம் ,இயற்பியல் வானவியல் மற்றும் எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மீக ஞானம் அதிகம் பெற்று திகழ்ந்தார்கள்
அலீ ரலி அவர்களை இரண்டாம் சுலைமான் என்று நபித்தோழர்கள் குறிப்பிடுவதுண்டு
நபி சுலைமான் அலை அவர்களுக்கு அல்லாஹ் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்து ஈடு இணையற்ற அறிஞராய் இருந்தார்கள் அவர்களுக்கு பின் அவர்களைப் போன்ற அறிஞர் என்றால் அது அலீ ரலி அவர்கள்தாம்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -3

அலீ ரலி அவர்களின் நினைவு தின சிந்தனை 3
யூதன் ஒருவன் இவர்களின் அறிவு திறனையும் கணித அறிவையும் சோதிக்க எண்ணினான்
""ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களினால் மீதமின்றி வகுபடக் கூடிய எண்ணை உம்மால் கூற முடியுமா ? "
மாதத்தின் நாட்கள் எண்ணிக்கை 30
வாரத்தின் நாட்கள் எண்ணிக்கை 7
மாதங்களின் எண்ணிக்கை 12
இம்மூன்றையும் பெருக்கினால் வரும் விடை எதுவோ அதுவே உன் கேள்விக்கான விடை என்றார்கள்
யூதன் பெருக்கி பார்த்தான் 2520 வந்தது அதை 1 முதல் 9 வரையுள்ள எண்களால் வகுத்துப் பார்தான் வியந்து போனான் இஸ்லாத்தை ஏற்றான்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -2

உமர் அலி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வந்து உமர் ரலி அவர்களின் சமூகம் வந்து " எனக்கு திருமணம் ஆகவில்ல ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை" என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள் தன் வாளை உருவி " செய்த தப்பை மறைக்க முடியாமல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தப்பிக்கலாம் என்று எண்ணி வந்தாயோ " என்று கூறி அவளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க எண்ணினார்கள்
அந்தப் பெண்ணும் " கலீபா அவர்களின் தீர்ப்பு நான் மனமுகந்து ஏற்கத் தயார் ஆனாலும் இறைவனின் மீது ஆணையாக நான் எந்த ஆணுடனும் தொடர்பு கொண்டதில்லை " என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள அலி ரலி அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்
அலி ரலி அவர்கள் அந்த பெண்ணிடம் , மூன்று மாதங்களுக்கு முன் நீ எங்கே இருந்தாய் ?
" அக்காள் வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது அங்கு போய் இருந்தேன் என்றாள்
"போகும் வழியில் நடந்து பற்றி விபரமாக சொல் "
இயற்கையின் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க ஒதுக்குபுறமான ஒரு மரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு அந்த மரப் பொந்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்
உடனே உமர் ரலி அவர்களிடம் " மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்து என்பது பற்றி அரசாங்க பதிவொட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா ? என்று கேட்டார்கள்
உடனே உமர் ரலி அவர்கள்
பதிவேட்டை பார்த்து போது சிறு யுத்தம் நடந்தது யுத்தம் முடிந்ததும் முன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது 5 பேர்கள் தங்கி இருப்பது போர் மரபு என்றார்கள் உமர் ரலி அவர்கள்
"தங்கியிருந்தவர்களை அழையுங்கள் நான் விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள் அலி ரலி அவர்கள்
5 இளம் சஹாபிகளிடம் விசாரணை செய்யும் போது அதில் ஒரு இளம் சஹாபி ஒருவர் "அமீருல் மூமின் அவரகளே . . . . . அன்றிரவு யுத்த கள பாதுகாப்பில் இருந்த போது என்னை அறியாமல் என் விந்து வெளிப்பட்டு விட்டது யுத்த களத்தில் சஹாபிகளின் இரத்தம் சிந்திய பூமி என் விந்து பட்டு கண்ணிய குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து ஒரு மரப் பொந்தில் நான்தான் வைத்தேன் விடிந்ததும் அதை எடுத்து யுத்த களத்தை தாண்டி அப்புறப்படுத்த இருந்தேன் மறுநாள் காலையில் அந்த மரப் பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்கள்
அலி ரலி அந்த பெண்ணின் செய்கை எடுத்து சொன்னார்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் இது இறைவன் சேர்த்த மணப் பொருத்தம் என்றார்கள்
இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது
உமர் ரலி அவர்கள் " இந்த அலீ ரலி அவர்கள் இல்லை என்றால் உமர் நாசமாக போயிருப்பான் என்றார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -2

உமர் அலி அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வந்து உமர் ரலி அவர்களின் சமூகம் வந்து " எனக்கு திருமணம் ஆகவில்ல ஆனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை" என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள் தன் வாளை உருவி " செய்த தப்பை மறைக்க முடியாமல் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தப்பிக்கலாம் என்று எண்ணி வந்தாயோ " என்று கூறி அவளை கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க எண்ணினார்கள்
அந்தப் பெண்ணும் " கலீபா அவர்களின் தீர்ப்பு நான் மனமுகந்து ஏற்கத் தயார் ஆனாலும் இறைவனின் மீது ஆணையாக நான் எந்த ஆணுடனும் தொடர்பு கொண்டதில்லை " என்றாள்
உடனே உமர் ரலி அவர்கள அலி ரலி அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்
அலி ரலி அவர்கள் அந்த பெண்ணிடம் , மூன்று மாதங்களுக்கு முன் நீ எங்கே இருந்தாய் ?
" அக்காள் வீட்டு திருமணம் பக்கத்திலுள்ள கிராமத்தில் நடைபெற்றது அங்கு போய் இருந்தேன் என்றாள்
"போகும் வழியில் நடந்து பற்றி விபரமாக சொல் "
இயற்கையின் உபாதையின் காரணமாக சிறுநீர் கழிக்க ஒதுக்குபுறமான ஒரு மரத்தடியில் சிறுநீர் கழித்து விட்டு அந்த மரப் பொந்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்து சுத்தம் செய்தேன்
உடனே உமர் ரலி அவர்களிடம் " மூன்று மாதங்களுக்கு முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்து என்பது பற்றி அரசாங்க பதிவொட்டில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா ? என்று கேட்டார்கள்
உடனே உமர் ரலி அவர்கள்
பதிவேட்டை பார்த்து போது சிறு யுத்தம் நடந்தது யுத்தம் முடிந்ததும் முன்று இரவுகள் குறிப்பிட்ட நான்கு அல்லது 5 பேர்கள் தங்கி இருப்பது போர் மரபு என்றார்கள் உமர் ரலி அவர்கள்
"தங்கியிருந்தவர்களை அழையுங்கள் நான் விசாரணை செய்ய வேண்டும் என்றார்கள் அலி ரலி அவர்கள்
5 இளம் சஹாபிகளிடம் விசாரணை செய்யும் போது அதில் ஒரு இளம் சஹாபி ஒருவர் "அமீருல் மூமின் அவரகளே . . . . . அன்றிரவு யுத்த கள பாதுகாப்பில் இருந்த போது என்னை அறியாமல் என் விந்து வெளிப்பட்டு விட்டது யுத்த களத்தில் சஹாபிகளின் இரத்தம் சிந்திய பூமி என் விந்து பட்டு கண்ணிய குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு பஞ்சில் சுத்தம் செய்து ஒரு மரப் பொந்தில் நான்தான் வைத்தேன் விடிந்ததும் அதை எடுத்து யுத்த களத்தை தாண்டி அப்புறப்படுத்த இருந்தேன் மறுநாள் காலையில் அந்த மரப் பொந்தில் பஞ்சை தேடினேன் காணவில்லை" என்றார்கள்
அலி ரலி அந்த பெண்ணின் செய்கை எடுத்து சொன்னார்கள் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஏனெனில் இது இறைவன் சேர்த்த மணப் பொருத்தம் என்றார்கள்
இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது
உமர் ரலி அவர்கள் " இந்த அலீ ரலி அவர்கள் இல்லை என்றால் உமர் நாசமாக போயிருப்பான் என்றார்கள்

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -1

ஒரு முறை அலீ ரலி அவர்களிடம் சிலர் யானை கொண்டு வந்து எடை போட்டு தரும்படி கேட்டார்கள்
அலீ ரலி அவர்கள் அந்த யானையை நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு படகில் ஏற்றச் சொன்னார்கள்
பிறகு அந்த படகு நீரில் சிறிது அமிழ்ந்திருக்கும் போது நீர் மட்டத்தை சுண்ணாம்பால் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள்
பிறகு யானையை இறக்கி விட்டு அந்த படகில் செங்கற்களை சுண்ணாம்பு கோடு குறித்த நீர் மட்டம் வரும் வரை அடுக்குச் சொன்னார்கள்
பின் செங்கற்களை எடைப் போட்டு யானையின் எடையை துள்ளியமாகச் சொன்னார்கள்
-
Rahmath Rajakumaran