முகநூல் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகநூல் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2015

தந்தை யார்..?

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
*
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
*
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
*
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
*
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
*
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
*
*
* தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...
* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்
அவர் உன்னுடைய அருகில் இருக்கும்போது அவர் உடைய
அருமைஉனக்கு தெரியபோவதுமில்லை

- பேஸ்புக் 

சனி, 26 ஜூலை, 2014

Face Book என்ற பெயர் சொல்லை ஏன் மொழி பெயர்க்க வேண்டும்


  • Senapathy Thirugnanasambandam ஒரு ஐயம் எனக்கு ?

    பெயர்ச்சொல்லை(facebook) ஏன் மொழி பெயர்க்க வேண்டும் ?

    inbox / draft போன்றவைகளுக்கு தேவை உள்ளது...
    9 hrs · Edited · Like
  • இராஜ. தியாகராஜன் ஃபேஸ்புக் என்பது ஒரு வணிகச் சொல். பயன்படுத்தும் தமிழன்பர்கள் மாற்றாக ஒரு தமிழ்ச் சொல் பயன்படுத்தினர். உங்களைப் போல பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முகநூல் அமைப்பாளர்களே பெரும்பான்மைப் பயன்பாட்டினால் அதனைத் முதன்மைத் தமிழ்மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொண்டனர். சஞ்சிகை என்கிற செங்கிருதப் பெயர்ச் சொல்லைக் கூட பத்திரிக்கை என்றும், நாளிதழ் என்றும் மாற்றிய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். டீ/ சாயா இந்தப் பெயர்ச் சொல்லைக் தேநீர் என்று பயன்படுத்திய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். 

    ஆப்பிள் என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர் கூட ape என்கிற வாலில்லா குரங்கின் வாயின் வண்ணத்தால் வந்தது. எனவே குருதியின் (அரத்தம்) வண்ணமாக இருப்பதால் ஆப்பிளை அரத்தி என்று சொல்கிறோம் புதுவையில். பிடித்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழிலக்கணப் புணர்ச்சியின் படி கோயில் தான் சரி; கோவில் சரியில்லைதான்; ஆனால் இத்தனை பேர்கள் பயன்படுத்துகையில் அதுவும் சரிதான். தேளின் பன்மை தேட்கள் ஆகாது; ஆனால் நாளின் பன்மை நாட்களாகவும், வாளின் பன்மை வாட்களாகவும், ஆனதை நாம் ஏற்றுக் கொண்டோம். இயன்றவரை புதுப்புனைவுகளை ஏற்பதில் தடையிருப்பது சரியில்லை. 

    மரபியலிலான செய்யுளோத்துகள் மட்டும் கொண்ட தமிழ்க் கவிதை இலக்கியத்தில், இன்று புதுப்பாக்கள், குறும்பாக்கள், துளிப்பாக்கள் இவையும் வந்தன. தமிழை நேசிக்கும் அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

    ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு ஐயம்: ஆங்கிலேயர் வாயில் வழங்க இயிலாமையால், வைத்துவிட்டார்கள் என்பதற்காக ப்ராப்பர் நவுன்களான தஞ்சாவூரை டாஞ்சுர் என்றும், பறங்கிப்பேட்டையை போர்ட்நோவா என்றும், கன்னியாகுமரியை கேப் கேமரின் என்றும், திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும், தரங்கம்பாடியை ட்ரங்க்பார் என்றும் சொன்ன்னதை ஏற்றுக் கொண்டிருந்தோம். பின்னர் முயன்று பழைய பேர்களை வைக்கவில்லையா? முதலில் சைக்கிளை மிதிவண்டி என்றும், பஸ்ஸை பேருந்து என்றும், காரை சீருந்து என்றும், ப்ளேனை ஆகாயவிமானம்/ வானூர்தி என்றும் பயன்படுத்திய போதில் சிரிக்காதவர் எவர்?
    9 hrs · Edited · Unlike · 6
  • இராஜ. தியாகராஜன் இன்னும் கொல்லம், கோழிக்கோடு, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என்று நிறையச் சொல்லலாம். நான் அதிகம் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை நான் முகநூலி வரும் கொஞ்ச நஞ்ச நேரத்தைக் கூட அஃது வெகுவாகத் தின்றுவிடுகிறது.
    9 hrs · Like

செவ்வாய், 22 ஜனவரி, 2013

அன்பர் அமீர் அப்பாஸின் முகநூல் சிந்தனைகள் -2


அந்த கதவுக்கு பின்னால்தான் 
ஆயிஷா இருக்கிறாள்
கதவுகள் போதாதென
அவள் விரும்பிய வண்ணத்தில் 
திரைச்சீலையும் தொங்குகிறது.
அந்த கதவு இரும்பினால் ஆனது அல்ல .
பழைய மரத்தினால் ஆனது ,வலுவற்றது.
உளுக்கத் துவங்கியிருக்கிறது இப்போதெல்லாம்.
அதைத் தாழிடும் உரிமை 
ஆயிஷாவினுடையதே.... 

அந்த வழியே செல்லும்
கோவில் யானையை
அவளுக்கு மிகவும் பிடிக்கும் .
மதம் கொள்ளும்
சாத்தியங்களுள்ள யானை ,
பொய்ச் சங்கிலியால்
பிணைக்கப்பட்டிருக்கும் சூட்சுமம்
ஆயிஷா அறியாள் .....

என் சொற்பொழிவை கேட்ட நண்பர்களுக்கு தெரியும்.
எல்லா கூட்டத்திலும் தவறாமல் ஒரு வரலாற்றைச் சொல்வேன்.அதை உங்களிடம் 
பகிர்ந்து கொள்கிறேன்.
இராமராஜ்ஜியம் வர வேண்டும் என்று 
பேசிய.. அண்ணல் காந்தியடிகள் 
... 
அதைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம்
அந்த ஆட்சி கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போல நீதியாக இருக்க வேண்டும் என்பார்.

நான் கலீபா உமர் அவர்களின்
வரலாற்றைப் படித்தேன்.

ஒரு முறைகலீபா உமர் அவர்கள்
தன் ஆட்சிக்கு உட்பட்டஜெருசலேம் நகருக்கு
அரசு முறைப் பயணம் செல்கிறார்.

அவரை அங்கிருக்கும் தேவாலயத்தில்,
பாதிரியார்கள் வரவேற்கிறார்கள்.
அவர்களுடன் அன்போடு உரையாடுகிறார்
உமர் அவர்கள்.

தொழுகைக்கான நேரம் வந்ததுஉமர் அவர்கள் பாதிரியார்களிடம் கூறி விட்டு
தொழுகைக்கு தயாரானார்.

அப்போது அவர் மீது பேரன்பு கொண்ட பாதிரியார்கள் ”எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியில் கூடமெக்கா நோக்கி.. நீங்கள் தொழுகை செய்யலாமே? ”என்று அன்பினால் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அதை மெளனமாக மறுத்துதேவாலயத்தின் வெளிப்புறம் சென்றுவெட்டவெளியில் தொழுகை செய்கின்றார் உமர் அவர்கள்.

தொழுகை முடிந்துவிருந்துக்கான வேளை வந்தது.பாதிரியார்களுடன் சேர்ந்துவிருந்து உண்டார்.அப்போது ஒரு இளம் பாதிரியார்மனதில் பட்டதைப் போட்டு உடைத்தார்.

இத்தனை அன்பாக சகோதரனைப்போல பழகும்
நீங்கள் வழிபாடு என்று வந்த போது மட்டும்,
வேறுபாடு காட்டினீர்களே ஏன்?” என கேட்டார்.

அப்போது உமர் அவர்கள் பதில் அளித்தார். ”உங்கள் அன்பை மதித்துஒரு வேளை இந்த இடத்தில் தொழுகை செய்திருந்தால்வரலாற்றில் குறிப்பு எழுதப்படும்இது உமர் தொழுகை செய்த பள்ளிவாசல் என்று பெயர் பெறும்.

ஒரு காலம் வரும்நீங்களும் நானும்
உயிரோடு இருக்க மாட்டோம்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த
என் மக்களில் சிலர்கேள்வி எழுப்புவார்கள்.

உமர் தொழுகை செய்த இடம்
எப்படி தேவாலயமாக இருக்க முடியும்?
பள்ளிவாசலாக மட்டுமே இருக்க முடியும்” என்று உரிமை கோருவார்கள்.

அதில் சிலர் கோபம் கொண்டுஆயுதம் ஏந்தி இடிப்பதற்கு முனைந்து விடுவார்கள்ஆகவே தான்இந்த சூழலைதவிர்த்துக் கொண்டேன்.வருங்கால தலைமுறையின் சமூக அமைதி கருதினேன்உங்கள் இடத்தில் தொழ மறுத்தேன் என்றார்.

ஒரு ஆட்சியாளன் தன் நாட்டு நலனை மீறிஅடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்அதனால் தான்அண்ணல் காந்தி மதச்சார்பின்மையின் முன்னோடியாக உமரின் வரலாற்றை நேசித்தார்.

இத்தகைய நல்லெண்ணம் அத்வானிகளுக்கு இருந்திருந்தால்பாபர் மசூதி உடைக்கப் பட்டிருக்காது.
பொது அமைதிக்கு ஒரு போதும் தீங்கு நேர்ந்திருக்காது.